தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி சாலையில், தொழிலதிபர் ஹம்சவர்தன் மோகனின் முயற்சியால் பிரம்மாண்டமான ‘HAMLY TOWERS’ ஐடி பார்க் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 69,000 சதுர அடி நிலப்பரப்பில், 6 அடுக்குகளைக் கொண்ட இந்த நவீனக் கட்டடம், முழுமையாக எஃகு கட்டுமானத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த ஐடி பார்க், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 7,000 ஐடி மாணவர்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. எஃகு கட்டுமான முறையைப் பயன்படுத்தியதன் மூலம், அடித்தளச் செலவு குறைக்கப்பட்டதோடு, கட்டுமானப் பணிகள் வேகமாகவும் முடிக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் இனி நெற்களஞ்சியம் மட்டுமின்றி ஐடி ஊழியர்களின் மையமாகவும் திகழும் என்று தொழிலதிபர் ஹம்சவர்தன் மோகன் நம்பிக்கை தெரிவித்தார். வெளிநாட்டு ஐடி நிறுவனங்கள் சென்னையைத் தொடர்ந்து தஞ்சாவூரிலும் தனது கிளையைத் தொடங்க வேண்டும் என்று அவர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
#Thanjavur #HamlyTowers #ITPark #Employment #SteelConstruction #TamilNaduIT #DeltaDevelopment #TechJobs #EconomicGrowth #BreakingNews #BMNews #TamilNews #LatestUpdate #Infrastructure #YoungTalent #ITHub #StateDevelopment #Modernization #SuccessStory #TamilNaduGovernment