நாட்டில் முக்கிய வழக்குகளின் சாட்சியாளர்கள் திட்டமிட்டுக் கொலை செய்யப்படுகிறார்களா? – சர்வஜன அதிகாரம்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் மற்றும் நாட்டில் முக்கிய வழக்குகளின் சாட்சியாளர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்படுகிறார்களா என்பது குறித்து சர்வஜன அதிகாரம் கட்சியின் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் அழைப்பாளர், சட்டத்தரணி நளின் பத்திரன டிகுற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கட்சியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் குறித்து முறையான மரணப் பரிசோதனைகளோ அல்லது நீதவான் விசாரணைகளோ நடத்தப்படுவதற்கு முன்னதாகவே, அது ஒரு தற்கொலை என ஊடகங்கள் அவசர அவசரமாகப் பிரசாரம் செய்துள்ளன. இத்தகைய உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை உருவாக்குவதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் பெரும் அநீதியை விளைவிக்கின்றது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற தாஜுதீன் கொலை, பிரகீத் எக்னெலிகொட மற்றும் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்குகளைப் போன்றே தற்போதும் முக்கிய சாட்சிகள் மறைக்கப்படும் போக்கு காணப்படுகின்றது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் 323 கொள்கலன்கள் காணாமல் போயின. இது குறித்து முதன்முதலில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய டான் பிரீசாத் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதேபோல், எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கின் முக்கிய சாட்சியாளரான கபில சந்திரசேன மற்றும் 2.5 மில்லியன் டொலர் விவகாரத்துடன் தொடர்புடைய ரங்க ராஜபக்ஷ ஆகியோரும் அண்மையில் கொலை செய்யப்பட்டுள்ளனர் அல்லது தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

பாரதூரமான வழக்குகள் நிலுவையில் உள்ள போது, அவற்றின் முக்கிய சாட்சியாளர்கள் அல்லது எதிரிகள் கொலை செய்யப்படுவதோ அல்லது தற்கொலை செய்துகொள்வதோ தொடர்கதையாகியுள்ளது.

சி.டி.விக்ரமரத்ன கடந்த வாரம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்கிய வாக்குமூலத்தில், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைகளின் போது சாரா ஜாஸ்மின் மரணமடைந்ததை உறுதிப்படுத்துவதற்காக பல டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நாட்டின் பலம்வாய்ந்த அரசியல்வாதி ஒருவர் தனக்கு அழுத்தம் கொடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான முக்கிய சாட்சியங்களை வழங்கிய முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் விசாரணை அதிகாரிகளின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்கு இந்த அரசாங்கமே முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.

5

காமன்வெல்த் போட்டியில் சாதித்த தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி!

July 27, 2026

ஹைதராபாத்: கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி

missing per fa

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு: யாழ்ப்பாணத்தில் ஓகஸ்ட் 30இல் நடத்த ஏற்பாடு!

July 27, 2026

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட சர்வதேச மாநாடு ஒன்றை

jaffna court

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: “சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது” – எதிர்மனுதாரர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி கடும் வாதம்!

July 27, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கில், “குற்றவாளிகளோ அல்லது சந்தேகநபர்களோ சட்டத்தை ஆயுதமாகப்

Screenshot

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகே திடீர் தீ பரவல் – பெரும் அனர்த்தம் தவிர்ப்பு; பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் கேள்வி!

July 27, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) எரிபொருள் களஞ்சிய வளாகத்திற்கு அண்மையில் உள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென ஏற்பட்ட தீ பரவல், கடற்படையினரும்

san

நிதி மோசடி; சாந்த பண்டாரவின் புதல்வர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை

July 27, 2026

தி மோசடிச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித்

deh

கல்கிசை மயான துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியும் கைது

July 27, 2026

தெஹிவளை – கல்கிசை மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

dd

நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட கட்டிடம்

July 27, 2026

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட “ஹெல பொஜூன்” தேசிய உணவகம் ஒன்று, தற்போது மீண்டும்

sc'

மூங்கிலாறில் ஏழு மாதங்களாக ஆசிரியர் இல்லை

July 27, 2026

முல்லைத்தீவு, முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர்

figd

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தக் கோரி யாழில் போராட்டம்

July 27, 2026

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில்

acci main

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் – சகோதரன் பலி

July 27, 2026

மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில்

den

 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்  

July 27, 2026

இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது. நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்