மருத்துவரின் சடலத்தை நடக்க வைத்தவர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு

அம்பாறை பொது வைத்தியசாலையில் இயன்முறை மருத்துவராகப் பணியாற்றிய ஷம்யா தர்ஷனி (வயது 33) என்ற பெண் வைத்தியரின் சடலம், தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரொன்றிலிருந்து 2026 ஜூன் 17 அன்று மீட்கப்பட்டது. இந்த வைத்தியர், வெலிகம, குருந்துகொடுவ பகுதியைச் சேர்ந்தவராவார்.

தெல்தெனிய பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பூட்டப்பட்டிருந்த கார் ஒன்று சோதனையிடப்பட்டு சடலம் மீட்கப்பட்டது. சம்பவத்தை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான மென்பொருள் பொறியியலாளர், தனது மனைவியுடன் சேர்ந்து 2026 ஜூன் 24 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் வைத்து வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி தவிர, அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கின் விசாரணைகளின் போது பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பொறுப்பதிகாரி மற்றும் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி என மொத்தம் நான்கு நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சந்தேகநபர்கள் முதன்முதலாக 2026 ஜூன் 26 அன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன் பின்னர், ஜூலை 09 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களது விளக்கமறியல் காலம் ஜூலை 16ஆம் திகதி வரை​ நீடிக்கப்பட்டது.

இந்த வழக்கு, நுவரெலியா நீதிவான் புத்திகா தர்மதாச முன்னிலையில், வியாழக்கிழமை (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர்களின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டது. வியாழக்கிழமை (16) அன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்​டபோது, சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. சூம் தொழிநுட்பம் ஊடாகவே வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலதிக விபரங்கள்

அம்பாறை வைத்தியசாலையில் உடற்பயிற்சி நிபுணராக (Physiotherapist) கடமையாற்றி வந்த இவர், வெளிநாடு செல்ல உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்து கடந்த ஜூன் 11ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த பெண், தனது காதலர் என நம்பப்படும் நபர் ஒருவருடன் அண்மையில் நுவரெலியாவில் உள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் கண்டெடுக்கப்படுவதற்கு முந்தைய நாள் இரவு, அந்த நபர் பெண்ணை தூக்கிச் செல்லும் அதிர்ச்சியூட்டும் காட்சி சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் கண்டி, கன்னொருவ பகுதியை சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர் (Software Engineer) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த பெண் வங்கி விபரம் (வங்கி கடன்) மூலம் பெற்ற 15 மில்லியன் ரூபாய் தொகையை சந்தேக நபருக்கு வழங்கியிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திருப்பங்களுக்கு மத்தியிலும், பிரதான சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், விசாரணைகள் தொடர்வதால் அவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்

3

ஊழல் பட்டியல் எப்போது வெளியீடு? – அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்!

July 27, 2026

சென்னை: சென்னை பிராட்வேயில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2

ரூ.1,34,166 மதிப்புள்ள செயற்கைக்கோள் தொலைபேசியை 74 மீனவர்களுக்கு வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள்

Ravikaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் ; இனி எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை – ரவிகரன் ஆதங்கம்!

July 27, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்,

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்

SHOOTING

தீவிரமடையும் பாதாள உலக வன்முறைகள்

July 27, 2026

இவ்வருடத்தில் இதுவரை இலங்கையில் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும்

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்