அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் தரமான பொதுப் போக்குவரத்துத் துறையை உருவாக்க வேண்டும்

அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், தரமான மற்றும் வசதிகள் கொண்ட பொதுப் போக்குவரத்துத் துறையை உருவாக்க வேண்டும் என்றும், இதன் மூலம் பொதுமக்கள் போக்குவரத்திற்காக தனிப்பட்ட ரீதியில் செலவிடும் சுமையைக் குறைத்து, நாட்டிற்குள் தரமான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலவச சுகாதாரச் சேவையின் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் அதே அவதானத்தை, பொதுப் போக்குவரத்துச் சேவையின் முன்னேற்றத்திற்காகவும் செலுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்குத் தொடர்புடையதாக 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட யோசனைகள் குறித்து நேற்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

புதிய திட்டமொன்றின் ஊடாக பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையில் 2026 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து தனித்தனியாகக் கேட்டறிந்தார்.

பழைய பேருந்துகளை படிப்படியாகப் போக்குவரத்தில் இருந்து நீக்கி, புதிய பேருந்துகளைச் சேவையில் இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், நகர்ப்புற குறுகிய தூரப் பயணங்களுக்காக ‘மெட்ரோ பேருந்துகள்’ போன்ற வசதிகளைக் கொண்ட பேருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் மக்களுக்கு வசதியான போக்குவரத்தை உறுதி செய்ய முடியும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்களான அடுக்குமாடி குடியிருப்பு நிர்மாணத் திட்டங்கள், நகர்ப்புற கழிவு முகாமைத்துவத் திட்டங்கள் மற்றும் CITY BRANDING திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் 2026 ஆம் ஆண்டுக்கான முன்னேற்றம், இந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படக்கூடிய திட்டங்கள் மற்றும் அடுத்த ஆண்டிற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

அடுத்த ஆண்டுக்குள் நிறைவு செய்யக்கூடிய திட்டங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு முன்னுரிமை அளித்து வரவுசெலவுத் திட்ட நிதியை ஒதுக்குமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, வெளிநாட்டு கடன் உதவிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் இறுதிப் பெறுபேறு குறித்து சரியான தெளிவில்லாமல் அத்தகைய திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

thip

நல்லூரில் தியாக தீபம் திலீபனுக்கு வெண்கல உருவ சிலை

September 15, 2026

தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் வெண்கல உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், நல்லூர் பின்

muk

முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்திற்கு செல்லும் பாதையில் உள்ள நினைவுக்கல் அகற்றம்

September 15, 2026

முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்திற்கு செல்லும் பாதையினை அடையாளப்படுத்தும் முகமாக புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு A35 பிரதான வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுக்கல்லை வீதி

download

பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு செல்கிறார் அர்ச்சுனா; மஹிந்தவின் கூட்டத்தில் தன்னை ஒரு “புலி” என்றார்!

September 15, 2026

அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பு தொடர்பில் கருத்து

image_e9c84944c5

காலநிலைத் தாக்கத்திற்கு முகங்கொடுக்க விசேட அமைச்சரவைக் கூட்டம்

September 15, 2026

எல்-நினோ காலநிலைத் தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுற்றாடல் அமைச்சர் டாக்டர் தம்மிக பட்டபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட

**EDS: SCREENGRAB VIA PTI VIDEOS** Chennai: VCK leader Thol Thirumavalavan talks to the media, after his party received a request from TVK for support to form the Tamil Nadu government following the recent Assembly elections, in Chennai, Thursday, May 7, 2026. (PTI Photo) (PTI05_07_2026_000160B)

“தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான்; தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!” – விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்

September 15, 2026

திருச்சி: திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், தமிழகத்தில் நிலவும் மின்தட்டுப்பாடு, திமுகவின்

2

அண்ணா பிறந்தநாள் பேரணிக்கு அனுமதி மறுப்பு: தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

September 15, 2026

சென்னை: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் நடைபெறவிருந்த பேரணிக்குக் காவல்துறை அனுமதி மறுத்துள்ளதற்கு,

dailythanthi_2026-09-15_epis97t5_117

சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிராக உரிமை மீறல் புகார்: சபாநாயகரிடம் திமுக எம்.எல்.ஏ.க்கள் மனு!

September 15, 2026

சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை, திமுக சட்டமன்றக் கொறடா எ.வ. வேலு தலைமையிலான திமுக

vijay-in-london

ரூ.15,300 கோடி முதலீடு; 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு! – லண்டனில் முதலமைச்சர் விஜய்யின் முன்னிலையில் மாபெரும் ஒப்பந்தங்கள் கையெழுத்து

September 15, 2026

லண்டன் / சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் இங்கிலாந்து (லண்டன்) பயணத்தின் மூலம், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி

1200-675-27559457-thumbnail-16x9-goldprice

காவல் துறையினர் 180 பேருக்கு ‘முதல்வரின் அண்ணா பதக்கம்’: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

September 15, 2026

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி (செப். 15), காவல் துறை மற்றும் அதைச் சார்ந்த பிற துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய

minister-jayakumar

“பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் தேவையா?” – தவெக அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் சரமாரி கேள்வி!

September 15, 2026

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் மரியாதை செலுத்திய பின்னர், முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார்

1200-675-24217931-755-24217931-1747840878798

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரும் அவதூறு வழக்கு: மு.க. ஸ்டாலினுக்குச் செப்டம்பர் 21 வரை அவகாசம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

September 15, 2026

சென்னை: பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரும் அவதூறு வழக்கில், திமுக

dmk

“மதுராந்தகம் மக்கள் மீண்டும் தவறு செய்ய மாட்டார்கள்!” – திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமன் சூளுரை

September 15, 2026

காஞ்சிபுரம்: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளருமான வழக்கறிஞர் ஐ. பரந்தாமன்,