கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பனிக்கையடி இயக்கச்சியை சேர்ந்த 31 வயதுடைய இளைஞன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளைஞன் மின்சார இணைப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கும்போது மின்சாரம் தாக்கிய நிலையில் உடனடியாக பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது மரணமடைந்துள்ளார்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதின விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.