கத்தியுடன் தொடர்புடைய அச்சுறுத்தல் சம்பவம் ஒன்றில் தேடப்பட்டு வரும் சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு டொராண்டோ பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
கடந்த ஜூன் 20 ஆம் தேதி டான்லாண்ட்ஸ் அவென்யூ (Donlands Avenue) மற்றும் மோர்டிமர் அவென்யூ (Mortimer Avenue) பகுதியில், சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து இச்சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்கு சந்தேக நபர் கத்தியைக் காட்டி, அந்த ஆயுதத்தைச் சுழற்றியவாறு பாதிக்கப்பட்டவரைத் துரத்தியதுடன், அவரது செல்லப்பிராணியை காயப்படுத்தப் போவதாக அல்லது கொன்றுவிடுவ தாக அச்சுறுத்தியதாகப் புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சந்தேக நபரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், இது குறித்த தகவல் ஏதேனும் தெரிந்தவர்கள் 416-808-5500 என்ற எண்ணில் டொராண்டோ பொலிஸாரையோ அல்லது 416-222-TIPS (8477) என்ற எண்ணில் குற்றத்தடுப்புப் பிரிவையோ (Crime Stoppers) அநாமதேயமாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.