சிறைச்சாலைக் கைதிகள் மோதல்: விசாரணைகளுக்காக விசேட குழு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்குமிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) பிற்பகல் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோதலில் சிக்கி இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 34 கைதிகள் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுள் கடுமையான காயங்களுக்குள்ளான இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலையிலிருந்த கைதிகள் குழுவொன்று கூரையின் மீது ஏறி எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அதிலிருந்து கீழே விழுந்ததில் மேலும் நான்கு கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த கைதிகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் புஷ்பா கமலத்கே, சுமார் 10 கைதிகளுக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டதுடன், சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்றுதிரண்டு, அதிகாரிகள் தங்களுக்குத் சரியான தகவல்களை வழங்கவில்லை எனக் கூறி பதற்றமாக நடந்துகொண்டனர்.

எனினும், பொலிஸார் தலையிட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகள் பற்றிய தகவல்களை அவர்களுக்கு வழங்கியதோடு, உறவினர்கள் சிலரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுத்தனர்.

இச்சம்பவம் குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்,

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த 36 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் சிகிச்சை பெற்று பல்லன்சேன முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் மொத்தம் 2,417 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சிறைச்சாலையின் உள்சூழ்நிலை சிறைச்சாலை அதிகாரிகளினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், சிறைச்சாலையின் வெளிப்பாதுகாப்பிற்காக பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

இது கைதிகளுக்கு இடையிலான ஒரு மோதல் மாத்திரமே தவிர, இதில் அதிகாரிகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பதை மேலும் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, கைதிகளின் உறவினர்கள் இந்த நேரத்தில் வீண் பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் இச்சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கைதிகளின் ஒத்துழைப்புடன் சிறைச்சாலையின் உள்நிலவரத்தை சுமுக நிலைக்குக் கொண்டுவர முடிந்தது. கைதிகள் தங்களது சில கோரிக்கைகளை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் முன்வைத்துள்ளதுடன், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் அந்த இடத்திலேயே கைதிகளுக்குத் தெரிவித்துள்ளார்.

6

மேகதாது பிரச்சனைக்கு முந்தைய திமுக அரசு தான் காரணம் – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!

July 26, 2026

சென்னை: காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தமிழ்நாடு அரசு உறுதியாக காக்கும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

5

தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் விரிவடையும்: நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு தகவல்!

July 26, 2026

சென்னை: தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம், நாடு முழுவதும் விரிவடையும் என்று நீட் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிரத்தினம்

4

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவைச் செயலர் கடிதம்!

July 26, 2026

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த சத்தியபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு

li

இரும்பு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

July 26, 2026

லிந்துலை – மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின்

dol

எல் நினோவால் 20 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும்

July 26, 2026

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் சூப்பர் எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக, ஆபிரிக்க

ddfs

இத்தாலியிலிருந்து சூட்சுமமாக கொண்டுவரப்பட்ட உலோகக் கூடுகள்

July 26, 2026

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற சகோதரர்கள் இருவருக்கு சுங்க

ravikara

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து…

July 26, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம்

s

45 பேரை தென்சீனக் கடலில் மீட்க உதவிய சீனாவுக்கு வியட்நாம் நன்றி

July 26, 2026

ன்சீனக் கடலில் வியட்நாமைச் சேர்ந்த ‘கோய் நுயென் 18’ என்ற சரக்குக் கப்பல் மோசமான வானிலை காரணமாக நன்ஷா தீவுகள்

BRXPQSLKS5GHVGE3XXHDA5IH6M

நோர்த் யோர்க்கில் துப்பாக்கியுடன் காணப்பட்டதாகக் கூறப்படும் நபரைத் தேடும் பொலிஸார்

July 26, 2026

வெள்ளிக்கிழமை பிற்பகல் நோர்த் யோர்க் (North York) பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் தேடி

N32AHFWGRNDKDEHVEIQNHXL7SQ

கிறிஸ்டி பிட்ஸ் (Christie Pits) அருகே இருவர் மீது கத்திக்குத்து: முகமூடி அணிந்த சந்தேகநபரைத் தேடும் டொராண்டோ பொலிஸார்

July 26, 2026

டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சனிக்கிழமை இரவோடு இரவாக இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து, சந்தேகநபர் ஒருவரை டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத்

nufsdf

நுவரெலியா வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ

July 26, 2026

நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ காரணமாக இதுவரை

se

கடலலையில் சிக்கிய இருவர் மீட்பு

July 26, 2026

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துக்கால கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் நீரோடைக்குச் சிக்கி சனிக்கிழமை (25) அன்று கடலுக்குள் அடித்துச்