மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை. இவர்கள் வெளிப்படையாகச் சொல்லி வெளிவரலாம். போலிக் குற்றம், பொய்க் குற்றச்சாட்டு, ஜனாதிபதியைப் பற்றிய விமர்சனமெல்லாம் ஒரு அறிவுப்பூர்வமான, அர்த்தமுள்ள விமர்சனம் போன்று தெரியவில்லை. உணர்ச்சிவசப்பட்டு, ஆதரவாளர்களை முறுக்கேற்றுவதற்கு அல்லது தான் சிறையில் பிடிபட்டாலும் கூட எனது சீற்றம் குறையவில்லை என்பதைக் கூறக்கூடிய விதத்தில் சிலர் செயற்படுகின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
இப்போது விசாரணையை மேற்கொண்டு இருக்கின்ற சாணி அபேசேகர என்பவர் கடந்த காலத்திலும் கூட நேர்மையாக விசாரணைகளை மேற்கொண்டதாக அறியப்படுகின்றது. அதன் பின்னர் அவரை கைது செய்து உள்ளே தள்ளியிருந்தார்கள் கோத்தபாய ஆட்சிக் காலத்தில். இப்போது அவர், பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.
செம்மணியில் தற்போது 400-க்கும் மேற்பட்ட என்புக் கூடுகள் வெளியில் வந்திருக்கின்றது. 30 வருடங்களாக ஐந்து ஜனாதிபதிகள் மூடி மறைத்த அந்த உண்மைகள் வெளியில் வந்திருக்கின்றது. ஆகவே, இதனை வரவேற்கின்றோம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“உண்மையில் இந்த விடயம் நீதிமன்ற விசாரணையின் போது உண்மைகள் கட்டாயம் வெளிவரும். கடந்த காலத்தில் உண்மையில் தெரியவேண்டும், குற்றவாளிகளை பாதுகாக்கின்ற ஒரு செயல்பாடுகள் காணப்பட்டன.
பலர் எங்களுடைய மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் உங்களுக்குத் தெரியும், பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், ஊடகவியலாளர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என்று பலரும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
இந்த வேளையில் கொலை செய்யப்பட்ட போது இங்கு இருந்த அரசாங்கம், ராஜபக்ச அரசாங்கம் இருந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட அவருடைய ஆட்சிக் காலத்தில் 43-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அந்த வேளையில் பிள்ளையான் அவர்களும் அவர்களோடு சேர்ந்து செயல்பட்ட ஒருவராக இருக்கின்றார்.
எனவே, கடந்த காலத்திலும் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுடைய, பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுடைய கொலை சம்பந்தமான விசாரணை நடைபெற்றது. ஆட்சி மாற்றத்தின் போது அவர் வெளியில் வந்திருக்கின்றார். மீண்டும் பல குற்ற, குற்றச்செயல்கள் அவர் தலையில் சுமத்தப்பட்டிருக்கின்றது. குறிப்பாகச் சொல்லப் போனால், அவரோடு இருந்த சகாக்கள் கூட இவர் மீது குற்றங்களைச் சுமத்துகின்ற அரசு சாட்சியங்களாகவும் மாறியிருக்கின்றார்கள்.
எனவே, இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. ஈஸ்டர் தாக்குதல் பற்றிய குற்றச்சாட்டு இருக்கின்றன. ஆகவே, இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவரும் பொறுப்பு என்ற கருத்து பரவலாகப் பேசப்படுகின்றது. இந்த குற்றப்புலனாய்வு விசாரணைகளின் போது பேசப்படுகின்றது, ஊடகங்களில் பேசப்படுகின்றது, சமூக செயல்பாட்டாளர்கள் கூட இதைச் சொல்லுகின்றார்கள்.
ஆகவே, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு போலியானது பொய்யானது என்பதை நீதிமன்றங்கள் நிச்சயமாக உறுதி செய்யும். அந்த நீதிமன்றத்தின் மூலமாக எது பொய், எது போலியானது என்பது வெளிவரும். ஏனென்றால், இப்போது விசாரணையை மேற்கொண்டு இருக்கின்ற சாணி அபேசேகர என்பவர் உண்மையில் அவர், போன காலத்திலும் கூட நேர்மையாக அவர் விசாரணைகளை மேற்கொண்டதாக அறியப்படுகின்றது. அவரை அதன் பின்னர் கைது செய்து உள்ளே தள்ளியிருந்தார்கள் கோத்தபாய ஆட்சிக் காலத்தில்.
இப்போது அவர், பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கின்றார். இது பொய்யல்ல, போலியல்ல. ஆகவே, இந்த விடயங்கள் உண்மையாக வந்து கொண்டிருக்கின்றன. எங்களுக்கும், நாங்கள் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் என்ற அடிப்படையில் கடந்த காலத்தில் இந்த கொலைகள், கடத்தல்கள், கப்பங்கள், பணம் பறித்தல் போன்ற செயல்பாடுகள் நடக்கும் போது யார் யார் இந்த ஆயுதங்களோடு செயல்பட்டார்கள், எங்கெங்கு முகாம் வைத்திருந்தார்கள் என்ற விடயமெல்லாம் தெரியும்.
இப்போது ரவீந்திரநாத் பேராசிரியர் அவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார், கல்வியலாளர் தம்பையா அவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார், இவ்வாறு சொல்லலாம், அருட்தந்தையர், குருக்கள்மார் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், எல்லோரும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்த காலத்துல ஆயுதங்களை ஏந்திக்கொண்டு அட்டகாசமாக தீவுச்சனையிலும் கூட முகாமை வைத்துக் கொண்டு செயல்பட்டவர்கள் யார் என்பது இப்போது புலன் விசாரணையின் போது வந்து கொண்டிருக்கின்றது.
எனவே, பிள்ளையான் குற்றவாளி இல்லையென்றால், நிரபராதி என்றால், நிரபராதி என்றால் அவர் தப்பித்து வரலாம், விசாரணை, விசாரணைக்கு முகம் கொடுத்து. அதேபோல சுரேஷ் சால் இருக்கின்றார். அவரும் உண்ணாவிரதம் இருக்கின்றார், வாக்குமூலம் கொடுக்காமல் உண்ணாவிரதம் இருக்கின்றார். மடிக்கணினியில் காணப்படுகின்ற அந்த பாஸ்வேர்ட் , தொலைபேசியின் பாஸ்வேர்ட் போன்றவற்றை அவர் கொடுக்கவில்லை.
ஆகவே, குற்றம் செய்யவில்லை என்றால், மடியில் கணமில்லை என்றால், கணமில்லை என்றால் வழியில் பயமில்லை. இவர்கள் வெளிப்படையாகச் சொல்லி வெளிவரலாம். ஆகவே, போலிக் குற்றம், பொய்க் குற்றச்சாட்டு, ஜனாதிபதியைப் பற்றிய விமர்சனமெல்லாம் ஒரு அறிவுப்பூர்வமான, அர்த்தமுள்ள விமர்சனம் போன்று தெரியவில்லை. உணர்ச்சிவசப்பட்டு, ஆதரவாளர்களை முறுக்கேற்றுவதற்கு அல்லது தான் சிறையில் பிடிபட்டாலும் கூட எனது சீற்றம் குறையவில்லை என்பதைக் கூறக்கூடிய விதத்தில் அவர் செயல்படுகின்றார்.