கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிருமாணம்: தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்!

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய முறையில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத்தை தடுத்துநிறுத்துவது தொடர்பில் மாவட்டச் செயலாளரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் குறித்த பகுதியில் மக்களுக்குச் சொந்தமான காணிகளை எல்லைப்படுத்துவது தொடர்பான தற்போதைய நிலை குறித்தும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்கு 2026.06.29 அன்று கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்திலேயே பாராளுமன்ற உறுப்பினரால் மேற்கண்டவாறு கோரப்பட்டுள்ளது.
அந்த வகையில் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறி உப்பளம் அமைப்பதைத் தடுத்தல் மற்றும் மக்களுக்குச் சொந்தமான காணிகளை எல்லைப்படுத்தல் தொடர்பாக தற்போதைய நிலை குறித்து வினவல் எனத் தலைப்பிடப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
கடந்த மார்ச் 12 அன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் கௌரவ விவசாய, கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் அவர்களின் தலைமையில் விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கொக்குத்தொடுவாய் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத உப்பள நிருமாணம் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், இப்பிரச்சினைக்கு உரிய தீர்வைக் காணும் பொறுப்பு முல்லைத்தீவு மாவட்ட நிருவாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அத்துமீறலுக்கு உள்ளாகும் காணிகள் அப்பகுதி மக்களுக்குச் சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்துவதற்காக, நில அளவை திணைக்களத்தின் மூலம் எல்லைகளை அடையாளப்படுத்துமாறு கடந்த மார்ச் 30 அன்று மாவட்டச் செயலாளருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்த விடயம் ஏப்ரல் 08 அன்று மேலதிக நடவடிக்கைக்காகக் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளருக்குப் பாரப்படுத்தப்பட்ட போதிலும், இதுவரை அது குறித்து எவ்வித அடுத்தகட்ட நிருவாக நடவடிக்கைகளோ அல்லது முன்னேற்ற அறிக்கைகளோ சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.
அப்பகுதி மக்களின் பூர்வீகக் காணிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, அத்துமீறி மேற்கொள்ளப்பட்டு வரும் உப்பள நிருமாணப் பணிகளை உடனடியாக நிறுத்துவதற்கு மாவட்ட நிருவாகத்தினால் எடுக்கப்பட்ட நிருவாக நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், பொதுமக்களுக்குச் சொந்தமான காணி எல்லைகளை முறைப்படி நில அளவை செய்து அடையாளப்படுத்தும் பணிகளின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் இக்கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் நில உரிமைகளையும் பாதுகாப்பதற்கு மாவட்ட நிருவாகத்தின் நேரடித் தலையீடு இன்றியமையாதது என்பதால், இது தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்த விரிவான விளக்க அறிக்கையொன்றை விரைவாக வழங்குமாறு மாவட்டச் செயலாளரிடம் இக்கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது
Chennai: V Senthil Balaji after after taking oath as Minister, at Raj Bhavan in Chennai, Saturday, Sept. 29, 2024. (PTI Photo/R Senthilkumar)(PTI09_29_2024_000150B)

ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கு: செந்தில் பாலாஜியை கைது செய்ய போலீசார் தீவிரம்

July 3, 2026

சென்னை: தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்

1

“அப்போ புரியல இப்போ தான் புரியுது” – திமுகவை கடுமையாக சாடிய பெ.சண்முகம்

July 3, 2026

கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், தி.மு.க. மேற்கொள்ளும் குதிரை பேரம் குறித்துப் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

737249636_28404573075798233_8420546817484188575_n

பளைப் பிரதேச மக்களின் காணிகளை மீள ஒப்படைப்பது தொடர்பான உரிமையாளர்களுடனான சந்திப்பு

July 3, 2026

பளைப் பிரதேசத்தில் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களுடைய தனியார் காணிகளை உரிய உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக,

wasantha kara

முன்னாள் கடற்படை தளபதிவசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது

July 3, 2026

முன்னாள் கடற்படைத் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது

ravi ka

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிருமாணம்: தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்!

July 3, 2026

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய முறையில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத்தை தடுத்துநிறுத்துவது தொடர்பில்

chief just

ஒரு மோசமான நீதித்துறைஇயற்கை அனர்த்தத்தை விடவும் மிகக் குறுகிய காலத்தில்  நாட்டை அழித்துவிடும்: பிரதம நீதியரசர் எச்சரிக்கை

July 3, 2026

ஒரு நாடு இயற்கை அனர்த்தத்தினால் மாத்திரமன்றி, ஒரு மோசமான நீதித்துறையினாலும் மிகக் குறுகிய காலத்தில் சீரழிந்து அழிந்து போகக்கூடும் என

sajith july

46,000 சிறுவர் துஷ்பிரயோகப் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காகக் காத்திருக்கின்றனர்: எதிர்க்கட்சித் தலைவர் கவலை

July 3, 2026

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல்களுக்கு ஆளாக்கப்பட்ட சுமார் 46,000 சிறுவர்கள் இன்னும் நீதிக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

sajith july

46,000 சிறுவர் துஷ்பிரயோகப் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காகக் காத்திருக்கின்றனர்: எதிர்க்கட்சித் தலைவர் கவலை

July 3, 2026

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல்களுக்கு ஆளாக்கப்பட்ட சுமார் 46,000 சிறுவர்கள் இன்னும் நீதிக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

Yoshitha-new

யோஷித ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

July 3, 2026

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நிலுவையிலுள்ள சட்டவிரோதப் பணப்பரிமாற்ற (money laundering) வழக்கில், சுமத்தப்பட்டுள்ள ‘சதித் திட்டம் தீட்டியமை’

accident canada

ஹைவே 427 இல் ஒற்றை வாகன விபத்து: முதியவர் ஒருவர் பலி; வடக்கு நோக்கிய பாதைகள் தற்காலிகமாக மூடல்

July 3, 2026

வியாழக்கிழமை பிற்பகல் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் உள்ள ஹைவே 427 இல் (Highway 427) இடம்பெற்ற ஒற்றை வாகன விபத்தில்

toronto police 124

டொரண்டோவின் மேற்குப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நபர் ஒருவருக்கு கத்திகுத்து

July 3, 2026

டொரண்டோ நகரின் மேற்குப் பகுதியில் (west end) உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

HOTLKTAHQRDFPL4CQBA3DDDEIA

கனடா தினத்தில் ஹமில்டன் பாதுகாப்பு வலயத்தில் காணாமல் போன 7 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்பு

July 3, 2026

கனடா தினத்தில் (Canada Day) ஹமில்டன் பகுதி பாதுகாப்பு வலயத்தில் (conservation area) காணாமல் போன 7 வயது சிறுவன்