டொரண்டோ நகரின் மேற்குப் பகுதியில் (west end) உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
லான்ஸ்டவுன் அவென்யூ (Lansdowne Avenue) மற்றும் டுபோன்ட் ஸ்ட்ரீட் (Dupont Street) பகுதிக்கு அருகில் மாலை 6 மணிக்கு சற்று முன்னதாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திகுத்துச் சம்பவம் குறித்து கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அங்கு விரைந்தனர்.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, கத்திகுத்துக் காயங்களுடன் இருந்த நபர் ஒருவரை மீட்டனர்.
அந்நபர் படுகாயமடைந்த போதிலும், உயிராபத்து இல்லாத நிலையில் (non-life-threatening injuries) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டொரண்டோ அவசர மருத்துவ உதவியாளர்கள் (paramedics) தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் குறித்த எந்தவொரு விபரமும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.