அரச புலனாய்வுச் சேவையின் (SIS – State Intelligence Service) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு வந்த தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிமித்தம் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
இந்த உண்ணாநிலை போராட்டத்தின் போது சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட அவர், தொடர்ந்து விசாரணைகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.