தமிழ் மக்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஏன் அவசியம்? ; பிரித்தானிய உயர்மட்டப் பிரதிநிதியிடம் எடுத்துரைத்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து பிரித்தானிய உயர்மட்டப் பிரதிநிதியிடம் எடுத்துரைத்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்துதல் மற்றும் நீண்டகாலமாக நடாத்தப்படாமல் இருக்கும் மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துதல் என்பவற்றின் அவசியம் தொடர்பில் வலியுறுத்தியுள்ளனர்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருந்த வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்pன் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் லோரா போஃபில்ஸ{க்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இச்சந்திப்புக்கு தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ரெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் வெள்வேறு காரணங்களினால் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. அதேவேளை லோரா போஃபில்ஸ{டன் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கும் பங்கேற்றிருந்தார்.

இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் பற்றியும், தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகள் குறித்தும் மிக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்தவேண்டியதன் அவசியம், நீண்டகாலமாக நடாத்தப்படாமல் இருக்கும் மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்தவேண்டியதன் அவசியம், மனித உரிகைளைப் பாதுகாத்தல், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிப்படுத்தல், ஜனநாயக மற்றும் சட்டவாட்சி மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

அதேபோன்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள், அவர்களுக்கான சமத்துவம், அடிப்படை உரிமைகள், கண்ணியம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டியதன் அவசியம் குறித்து தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

அத்தோடு இலங்கை மக்கள் அனைவருக்கும் நீதியானதும், கண்ணியமானதும், நிலையானதுமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய அரசியல் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியம் பற்றியும் அவர்கள் பிரித்தானிய உயர்மட்டப் பிரதிநிதியிடம் எடுத்துரைத்தனர்.

அதேவேளை ஜனநாயகக் கட்டமைப்புக்களை வலுப்படுத்தல், அரசியல் பொறுப்புணர்வை மேம்படுத்தல், நல்லாட்சியை ஊக்குவித்தல் மற்றும் பொருளாதார மீட்சிக்கு சமாந்தரமான அரசியல் முன்னேற்றம் என்பன நாட்டின் எதிர்கால நலனுக்கு இன்றியமையாதவையாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் இலங்கையில் ஜனநாயகம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லாட்சி மற்றும் நிலையான அரசியல் தீர்வை என்பவற்றை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு பிரித்தானியா வழங்கிவரும் ஆதரவுக்கு தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகள் தமது நன்றியை வெளிப்படுத்தினார்

7SIY5K6KDFHIJECXH6BH3FHLGE

கனடா $27.6 பில்லியன் அமெரிக்க இறக்குமதிகள் மீது பதிலடி வரி விதிப்பு – 

August 25, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடியப் பொருட்கள் மீது 50% வரி விதித்ததைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக $27.6 பில்லியன்

462LJO3DBFF6NPN2IULEMMDPRI

வர்த்தகப் போர்: வடமேற்கு மற்றும் வடகிழக்கு ஒன்டாரியோவில் கவலையும் புதிய வாய்ப்புகளும்

August 25, 2026

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான 11-ஆம் மணி நேர வர்த்தகப் பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து, கனடியப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர்

IF6WVUL6AZHXNAAMDZ5URB7V34

வர்த்தக ஒப்பந்த முறிவுக்கு மத்தியிலும் கனடா-அமெரிக்க கூட்டுறவை போற்றும் நியூ பிரன்சுவிக் விழா

August 25, 2026

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை முறிந்த சில மணி நேரங்களிலேயே, இரு நாடுகளின் நீண்டகால நட்புறவை நினைவுகூரும்

trump june 26

தொடர்ந்து நிலவி வரும் வர்த்தக மோதலுக்கு மத்தியில், ஒன்டாரியோ ஏரியின் (Lake Ontario) பெயரை மாற்றப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தல்

August 25, 2026

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘ஒன்டாரியோ ஏரி’யின் பெயரை மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க

vijay-tributes-vijayakanth-2nd-anniversary

“விஜயகாந்தின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!” – முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி

August 25, 2026

சென்னை: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில் முதலமைச்சர் புகழஞ்சலி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தே.மு.தி.க.) நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித்

Thirumavalavan-press-meet-edi-2

“புதிய விமான நிலையம் தேவைதான்; ஆனால்…” – வி.சி.கே. தலைவர் திருமாவளவன் கருத்து!

August 25, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஆண்டிற்கு 3

maalai-malar_2026-08-25_i3uyw1ww_deva

விஜய்யைச் சந்தித்து த.வெ.க.வில் இணையும் பிரபல மலையாள நடிகர்: கேரளாவில் முக்கியப் பொறுப்பு?

August 25, 2026

சென்னை: தென்மாநிலங்களில் த.வெ.க.வை விரிவுபடுத்த திட்டம் தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கேரளா,

1200-675-27424292-thumbnail-16x9-min-aadhav-new

“ஜி-ஸ்கொயரைப் பற்றி பேசினால் தி.மு.க.வினர் ஏன் பதற்றப்படுகிறார்கள்?” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி

August 25, 2026

சென்னை: பா.ம.க. எம்.எல்.ஏ.வின் கோரிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான 7-வது நாள் விவாதம் இன்று நடைபெற்றது. இதில்

dailythanthi_2026-08-25_zq03klgx_CHENNAI-15

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: முதலமைச்சர் விஜய்க்கு நேரில் நன்றி தெரிவித்த விவசாயிகள்

August 25, 2026

சென்னை: முதலமைச்சருடன் நேரில் சந்திப்பு பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பரந்தூர்

1200-675-27478432-thumbnail-16x9-sdew

பரந்தூர் விமான நிலைய திட்ட ரத்து விவகாரம்: பேரவையில் த.வெ.க – தி.மு.க – அ.தி.மு.க வார்த்தை மோதல்!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் இன்று இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும்

HQjRRN4bIAAIIXR

250 புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

August 25, 2026

சென்னை: புதிய பேருந்துகள் தொடக்க விழா சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர்

images - 2026-08-25T191417.284

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குடும்பத்தினரிடம் சிபிஐ தீவிர விசாரணை!

August 25, 2026

சென்னை: வழக்கு பின்னணியும் காவல்துறையின் நடவடிக்கையும் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ஆம்