செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு.பாஸ்கரன்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் போது 400-க்கும் அதிகமான மனித என்புகள், எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் இலங்கையின் மனச்சாட்சியையே உலுக்கும் அதிர்ச்சிகரமான செய்தியாகும்.

இந்தக் கண்டுபிடிப்பு, எமது நாட்டின் கடந்தகால வன்முறை மற்றும் காணாமற்போனோர் தொடர்பான தீர்க்கப்படாத கேள்விகளை மீண்டும் உலகின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. பல தசாப்தங்களாக தமது அன்புக்குரியவர்களின் நிலை குறித்து பதில் தேடி அலைந்து வரும் குடும்பங்களின் வலியையும் வேதனையையும் இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும்,

மனித உயிர்களின் மதிப்பை இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மதிக்க வேண்டியது ஒவ்வொரு நாகரிக சமூகத்தினதும் கடமையாகும். எனவே செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக சுயாதீனமான, வெளிப்படையான, நியாயமான மற்றும் நீதியான விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

காலம் தாழ்த்தப்படும் ஒவ்வொரு நாளும், உண்மையை எதிர்நோக்கி காத்திருக்கும் குடும்பங்களின் வேதனையை மேலும் அதிகரிக்கின்றது. ஆகவே சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களும், நீதித்துறை அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும், மனித உரிமை அமைப்புகளும் ஒருங்கிணைந்து அறிவியல் ரீதியான விசாரணைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.

இந்த மனித எச்சங்கள் யாருடையவை? அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள்? அவர்களது குடும்பங்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளுக்கு உரிய பதில்கள் கிடைக்க வேண்டும். உண்மையை மறைப்பதும், காலம் தாழ்த்துவதும் அல்லது விசாரணையை பலவீனப்படுத்துவதும் எந்தவொரு சமூகத்திற்கும் நீதியை வழங்காது.

போராலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதி கிடைப்பது நிலையான சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் அடிப்படையாகும். உண்மையை அறியும் உரிமையும், நீதியைப் பெறும் உரிமையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அடிப்படை மனித உரிமைகளாகும்.

எனவே செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாகவும், எந்தவித அரசியல் அல்லது நிர்வாக தலையீடுகளுமின்றியும் முன்னெடுக்கப்பட்டு, காலம் தாழ்த்தாது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன். உண்மையை வெளிக்கொணர்வதே நல்லிணக்கத்தின் முதல் படியாகும்; நீதியை நிலைநாட்டுவதே நிலையான சமாதானத்தின் அடித்தளமாகும் என்று தெரிவித்துள்ளார்.

keerthana-xy-2026-08-23-14-35-56

“ரூ.4 கோடிக்கு வீடா? பத்திரத்தைக் காட்டுங்கள், அந்த வீட்டை உங்களுக்கே பரிசாகத் தருகிறேன்!” – அமைச்சர் கீர்த்தனா அதிரடி சவால்!

August 24, 2026

சிவகாசி சிவகாசியில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தான் ரூ.4 கோடிக்கு வீடு

dailythanthi_import_h-upload_2026_01_20_44548124-tcpgc

“100 நாள் ஆட்சியில் மக்களின் எண்ணங்களை த.வெ.க. அரசு பிரதிபலித்துள்ளது!” – ஜி.கே.வாசன் பாராட்டும் கோரிக்கையும்!

August 24, 2026

சென்னை முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் 100 நாள் செயல்பாடுகள் மற்றும் சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் பொறுப்புணர்வுகள் குறித்துத் தமிழ்

collage-down-31481787545581

“பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து!” – அரசியல் கட்சிகளின் ஆதரவும், பாஜகவின் அடுக்கடுக்கான கேள்விகளும்!

August 24, 2026

சென்னை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாகச் சட்டமன்றத்தில் அறிவித்துள்ள நிலையில், இந்த முடிவுக்கு

proceedings

பேரவை அனுமதிக்கும் முன் அறிவிப்புகளை வெளியிடக் கூடாது – சபாநாயகர் அதிரடி உத்தரவு!

August 24, 2026

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான புதிய கட்டுப்பாடுகளைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

hindutamil-prod_2026-08-24_22cnkohu_Untitled

“கொளத்தூர் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்!” – தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தேர்தல் வழக்கு!

August 24, 2026

ன்னை சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக தலைவரும் முன்னாள்

Tamil_News_lrg_4303741

“முதல்வர் குறித்து அவதூறு!” – திமுக எம்.எல்.ஏ சந்திரசேகரன் மீது சபாநாயகர் நடவடிக்கை!

August 24, 2026

சென்னை முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் குறித்துப் பொதுவெளியில் அவதூறாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏ சந்திரசேகரன்

ctr-2025-12-22-14-41-49

“தொகுதிப் பக்கமே போகாத எம்.எல்.ஏ-க்களுக்கு அத்தனை கார் எதற்கு?” – திமுகவைச் சாடிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்!

August 24, 2026

மதுரை மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட முத்தாங்குளம் கிராமத்திற்குப் புதிய பேருந்து வசதியைத் தொடங்கி வைத்த எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர்

1200-675-27217758-thumbnail-16x9-vanni-aspera

“சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க திமுக என்ன செய்தது?” – அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!

August 24, 2026

திண்டிவனத்தில் நடைபெற்ற நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, திமுக மீதான விமர்சனங்கள், உதயநிதி

Parandur-Airport-2026-08-40023cdbed7b28a40fa3190b593f33ac

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து – முக்கிய அறிவிப்புகள்

August 24, 2026

வசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் (விதி 110-ன் கீழ்) முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள

anbumani

“2031-ல் பாமக தலைமையில் உறுதியாக ஆட்சி அமையும்!” – சேலத்தில் அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்!

August 24, 2026

சேலம் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வரும்

dailythanthi_2026-08-24_f2q30ykx_vijayone33

ஆண்டுக்கு 3 சிலிண்டர், அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்; பரந்தூர் விமான நிலையம் ரத்து – முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!

August 24, 2026

சென்னை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று விதி

dead'

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் சடலம் மீட்பு: காவற்துறையினர் தீவிர விசாரணை!

August 24, 2026

யாழ்ப்பாணம், காரைநகர் வேரப்பிட்டி கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.