செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் மிகமுக்கிய ஆவணத்தைத் தயாரித்த தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் ஆளுமை கலாநிதி தேவநேசன் நேசையா காலமானார்!

இலங்கையின் அரச நிர்வாகத்துறையிலும், சிவில் சமூகப்பரப்பிலும் கொள்கை உறுதிப்பாட்டுடன் நீண்டகாலம் பணியாற்றியவரும், தமிழ்ச்சமூகத்தை சர்வதேச தளங்களில் பிரதிநிதித்துவப்படுத்திய ஆளுமையாகவும் திகழ்ந்த கலாநிதி தேவநேசன் நேசையா அவரது 91 ஆவது வயதில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (12) கொழும்பில் காலமானார்.

பேராசிரியர் குணசேகரம் நேசையாவின் புதல்வரான தேவநேசன் நேசையா, கொழும்பு பல்கலைகழகத்தில் கணிதத்துறையில் பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்த அவர், அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை நிறைவுசெய்தார்.

1959 ஆம் ஆண்டு அக்காலப்பகுதியில் நடைமுறையில் இருந்த சிலோன் சிவில் சேவையில் இணைந்துகொண்ட அவர், அச்சேவை முடிவுறுத்தப்படுவதற்கு முன்னர் அச்சேவையில் இணைந்து பணியாற்றிய இறுதித் தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

அதனைத்தொடர்ந்து நாட்டில் யுத்தம் இடம்பெற்ற 1981 – 1984 வரையான மிகக்கடினமான காலப்பகுதியில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபராகவும், மாவட்டச் செயலாளராகவும் கடமையாற்றினார்.

அதுமாத்திரமன்றி வேறுபட்ட காலப்பகுதிகளில் போக்குவரத்து, சுற்றுச்சூழல், மகளிர் விவகார அமைச்சுக்களின் செயலாளராகவும் பணியாற்றிய அவர், அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், யாழ் பல்கலைக்கழகப் பேரவை உள்ளிட்ட கட்டமைப்புக்களுடன் இணைந்து ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டார்.

குறிப்பாக 1996 – 1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நிறுவப்பட்ட ‘யாழ் பிராந்தியத்தில் காணாமல்போனோர் பற்றிய விசாரணைக்குழு’ வின் தலைவராகவும் தேவநேசன் நேசையா செயற்பட்டார்.

அவரது தலைமையிலான குழுவினரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை, இன்றளவிலும் இவ்விவகாரம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட மிகமுக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது. அதேபோன்று தேவநேசன் நேசையாவின் அளப்பரிய சேவையைப் பாராட்டி 2017 ஆம் ஆண்டு அவருக்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் “தேசமான்ய” விருது வழங்கப்பட்டது. இருப்பினும் 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியலமைப்பு

நெருக்கடியை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் தேவநேசன் நேசையா தனக்கு வழங்கப்பட்ட “தேசமான்ய” விருதை ஜனாதிபதி செயலகத்துக்கு நேரில் சென்று மீளக்கையளித்து, தனது கொள்கை உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தினார்.

இத்தகைய நேர்மையையும், கொள்கை உறுதிப்பாட்டையும் கொண்ட ஆளுமையான தேவநேசன் நேசையா நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (12) கொழும்பில் காலமானார்.

அன்னாரின் பூதவுடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14) காலை 8.30 மணி முதல் ஏ.எஃப்.ரேமண்ட்ஸ் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், தகனக்கிரியைகள் இவ்வார நடுப்பகுதியில் பொரளை பொதுமயானத்தில் நடைபெறும் என்றும் அவரது குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

che

நான் சாகடிக்கப்படலாம் ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டேன் – சேகுவேரா; இன்று பிறந்தநாள்!

June 14, 2026

சேகுவேரா அல்லது சே என்று அழைக்கப்படும் இவர் ஜூன் 14 1928 ஆம் ஆண்டு அர்ஜெண்டினாவிலுள்ள ரொசாரியோ என்னும் இடத்தில்

photo-collage.png (2)

காலி முகத்திடலில் பரதநாட்டியப் பயிற்சிக்கான கின்னஸ் உலக சாதனை முயற்சி

June 14, 2026

கொழும்பில் இன்று(14) வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார நிகழ்வொன்று இடம்பெற்றள்ளது. 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இணைந்து நடனமாடி,

anura may 26

சுரேஷ் சலேயின் உடல்நிலை: ஜனாதிபதியின் தலையீட்டைக் கோருகிறது ‘சர்வஜன பலய

June 14, 2026

கொழும்பு: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் தலைவர், ஓய்வுபெற்ற

Rain

எல் நினோ (El Niño) தாக்கம்: இலங்கையில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கனமழை மற்றும் வெள்ள அபாயம்

June 14, 2026

கொழும்பு: பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, இந்த ஆண்டு ஒக்டோபர்

Devanesan

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் மிகமுக்கிய ஆவணத்தைத் தயாரித்த தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் ஆளுமை கலாநிதி தேவநேசன் நேசையா காலமானார்!

June 14, 2026

இலங்கையின் அரச நிர்வாகத்துறையிலும், சிவில் சமூகப்பரப்பிலும் கொள்கை உறுதிப்பாட்டுடன் நீண்டகாலம் பணியாற்றியவரும், தமிழ்ச்சமூகத்தை சர்வதேச தளங்களில் பிரதிநிதித்துவப்படுத்திய ஆளுமையாகவும் திகழ்ந்த

nay

நாளை நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்றம்

June 14, 2026

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளை (15) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து

tu

துருக்கியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி!

June 14, 2026

2026 உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் ‘D’ குழுவில் துருக்கியுடன் நடைபெற்ற போட்டியில், அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற கோல்

dd

இரு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு நாடுகடத்தல்

June 14, 2026

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ‘மோதர நிபுண’ என்பவரின் சகோதரர்

3

“ரஜினிகாந்த் பெயரையோ, புகைப்படத்தையோ எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது!” – அண்ணாமலை, லாரன்ஸ் விவகாரத்தில் ரஜினி நற்பணி மன்றம் அசுர வேக அறிக்கை!

June 14, 2026

சென்னை: “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரையோ அல்லது அவரது புகைப்படத்தையோ எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ தங்களது சுயலாபத்திற்காகப்

2

“திமுக-வை காப்பி அடிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை; டாஸ்மாக் ரெய்டுக்காக டெல்லி சென்றவர் ஸ்டாலின்!” – திமுக தலைவருக்குத் தவெக ஐடி விங் அசுர வேக மாஸ் பதிலடி!

June 14, 2026

சென்னை: “வாய்ப்பு கிடைக்கும் துறைகளில் எல்லாம் மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக

1

“சாதி, மத, பணபல அரசியலைக் கடந்து மக்கள் மௌனப் புரட்சி செய்துள்ளனர்!” – திமுக கூட்டணி குறித்து துரை வைகோ அசுர வேக அதிரடிப் பேட்டி!

June 14, 2026

மதுரை: “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சாதி, மத, பணபல அரசியலை அடியோடு தூக்கி எறிந்துவிட்டு, மக்கள் மாபெரும் மௌனப்

722205425_2516904032157267_6855962867046714642_n

மயிலிட்டி மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற நாளைய போராட்டத்திற்கு பூரண ஆதரவு, அனைவரையும் கலந்து கொள்ளுமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை

June 14, 2026

போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களது காணிகள் 36 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையில் மயிலிட்டி மக்கள்