ரொறன்ரோ: கனடாவின் ரொறன்ரோ நகரின் கிழக்குப்பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 13, 2026) இரவு நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விக்டோரியா பார்க் (Victoria Park) மற்றும் டான்ஃபோர்த் அவென்யூ (Danforth Avenues) சந்திப்புப் பகுதியில் இரவு 7:30 மணியளவில் இக்கத்திக்குத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கத்திக் குத்துக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நபரைக் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபரின் காயங்கள் பலத்ததாக இருந்தாலும், அவை உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்த எந்தவொரு விபரமும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதுடன், கத்திக்குத்துக்கான துல்லியமான காரணங்கள் குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.