இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் கொடூர உண்மைகளை செம்மணி புதைகுழி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது – அருட்தந்தை மா. சத்திவேல்

செம்மணி சமூக புதைகுழி அகழ்வுப் பணிகளில் வெளிவரும் மனித எச்சங்களும், குழந்தைகளின் பாவனை பொருட்களும் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் கொடூர உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் சனிக்கிழமை (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

செம்மணி சமூக புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தொடர்கையில் தற்போது குவியல் குவியல்களாகவும் மனித எச்சங்கள் காணப்படும் நிலையில் அதற்கு மத்தியில் சிறுவர்கள் குழந்தைகளினதும் உடல் எச்சங்களோடு அவர்களின் பாவனை பொருட்களான பால் போத்தில், விளையாட்டு பொருட்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதில் வெளி வருவது படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல் பாகங்கள் மட்டுமல்ல அரச பயங்கரவாத சிங்கள பௌத்த பேரினவாத இராணுவ கட்டமைப்பின் தமிழ் இன கொலைவெறி உளவியலும், இனப்படுகொலை கோரத்தாண்டவத்தை வடிவமைத்த ஆட்சியாளர்களின் மிகவும் வக்கிர அரசியல் வெறி முகமும் சேர்ந்தே வெளிப்படுகின்றது.

இதுவரையான காலப்பகுதியில் 350 க்கும் அதிகமான என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது மன்னார் சதொச சமூக புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளையும் விட அதிகரித்து செல்லலாம் எனும் அச்சம் கலந்த பய உணர்வுக்குள்ளும் எமை தள்ளியுள்து.

மக்கள் விடுதலை முன்னணியின் 1988/89 கிளர்ச்சியை அடக்க ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அரசு பயங்கரவாத இயந்திரமான பொலிசார், இராணுவத்தினரை மட்டுமல்ல மறைமுக கொலை குழுக்களையும் பாவித்து ஆயிரக்கணக்கான இளைஞர்களை கொன்று குவித்தது. அத்தோடு படலந்த போன்ற வதை முகாம்களையும் நடாத்தி சென்றதை அனைவரும் அறிவர்.

அன்று சூரியக் கந்தையில் பாடசாலை பிள்ளைகளும் கொலை செய்யப்பட்டமை மக்கள் மத்தியிலே பெரும் அச்சப் பீதியை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு நீதியை பெற்றுக் கொடுப்பதாக 1994 ஆட்சி பீடம் ஏறிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க தனது ஆட்சிக் காலத்தில் இறுதி வரையில் அந்த கொடூரத்துக்கான நீதியை பெற்றுக் கொடுக்கவில்லை.

சந்திரிகா அரசாங்கத்திற்கு முழு ஆதரவையும் கொடுத்த மக்கள் விடுதலை முன்னணி தங்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரத்திற்கு சந்திரிக்கா கொடுத்த பகிரங்க வாக்குறுதியை நிறைவேற்றுமாறும் நீதியை பெற்றுக் கொட்டுக்குமாறும் கேட்கவில்லை. பின்வாங்கியமைக்கான காரணம் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கும் இனப்படுகொலை யுத்தம் தடைபடக் கூடாது எனும் தங்கள் மனச்சாட்சியை கொன்ற கொலைவெறியே என்பதும் நாம் அறிந்ததே.

சந்திரிகா பண்டார நாயக்காவைத் தொடர்ந்து 1988/ 89 காலப்பகுதியில் நடந்த கொடூரத்தையும் மனித உரிமை மீறல்களையும் அறிக்கையாக தயாரித்துக்( ஊடகவியலாளர் திஸ்சநாயகம் தயாரித்து கொடுத்த) கொண்டு ஜெனீவா மனித உரிமை ஆணையகம் நோக்கி ஒடிய மகிந்த ராஜபக்சவின் பதவிக் காலத்தில் தாம் தாயாரித்த 1988/89 காலப்பகுதி கொடூரத்தின் அறிக்கைய திரும்பிப் பார்க்கவில்லை என்பது மட்டுமல்ல அரச பயங்கரவாதம் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கும் இனப்படுகொலை யுத்தம் தடைபடும் என்பதற்காக மக்கள் விடுதலை முன்னணியும் அதற்கான எத்தகைய அழுத்தத்தையும் கொடுக்கவில்லை.

தற்போது தேசிய மக்கள் சக்திக்குள் மறைந்து நின்று ஆட்சி அதிகாரத்தை தமதாக்கிக் கொண்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னணி தமது எந்த ஒரு தேர்தல் மேடைகளிலும் தாம் ஆட்சிக்கு வந்தால் 1988 /89 ஆம் காலப்பகுதியில் அடிமட்ட சிங்கள இளைஞர்களுக்கும் தமது கட்சிக்கும் எதிராக அரச பயங்கரவாதம் நிகழ்த்திய படுகொலைகளுக்கு நீதியை பெற்றுக் கொடுப்போம் என்று கூறவில்லை என்பதையும் தெற்கின் சமூகமும் முழு நாடும் அறிந்ததே.

இதற்குக் காரணம் அதற்கான நீதி விசாரணை என்றால் அரசு பயங்கரவாதம் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய இனப்படுகொலை இன அழிப்பு என்பவற்றோடு தொடரும் இன அழிப்பும் சர்வதேச நீதிக்கு உட்படுத்தப்படும் எனும் தம் மனச்சாட்சியை கொன்ற மனநிலை என்றே கூறலாம்.

தற்போதைய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் ஆட்சி காலத்திலேயே சர்வதேச தொலைக்காட்சி செய்தி ஊடகமான அல் ஜஸீரா படலந்தை வதை முகாம் தொடர்பான அறிக்கை விடயத்தினை வெளியிலே கொண்டு வந்தப் போது அவசர அவசரமாக அவ் அறிக்கையினை தூசு தட்டி எடுத்தவர்கள் தம்முடைய மனசாட்சியை கொன்றுவிட்டே அதனை மீண்டும் ஆழ்கிடங்குக்குள் வீசி எறிந்தனர்.

முழு நாடாக விசாக பண்டிகையை கொண்டாடிவிட்டு பொசன் பண்டிகைக்காக கொண்டாட பல்வேறு ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கும் தெற்கின் ஆட்சியாளர்களே, அரசியல் வாதிகளே, பௌத்த பொது மக்களே உங்கள் அரச பயங்கரவாதத்தின் இன அழிப்பால், இனப்படுகொலையால் அழிவுகளை மட்டுமே சந்தித்த தமிழ் இன சமூகமாக கேட்கின்றோம்.

தமிழர் தாயக பகுதிகளில் அகழப்பட்ட சமூக புதைகுழிகளை உற்றுப் பாருங்கள். தற்போது செம்மணி சமூக புதைகுழியில் கொன்று அல்லது உயிரோடு புதைக்கப்பட்ட அல்லது வீசப்பட்ட எங்கள் மழலைகளின் முகங்களையும் அவர்களின் குரல்களையும் கேளுங்கள். சித்திரவதைக்கு உடபடுத்தி கொல்லப்பட்டோரின் அவல குரல்களையும் கேளுங்கள். உங்களுக்கு தெற்கின் சமூக புதைகுழிகள் கண்ணுக்குத் தெரிவதோடு கொல்லப்பட்டோரும் அவர்களின் குடும்பங்களும் கண்ணாடிகள் உங்களுக்கு தெரிவர்.

அசோக சக்கரவர்த்தி தான் நிகழ்த்திய யுத்த கொடுமைகளின் காட்சியையும் அபலைகளின் அவலக் குரலூடனான கண்ணீரையும் பார்த்தும் கேட்டுமே தம் மனசாட்சியால் குத்த பட்டு பௌத்தத்தை தழுவியதாக உங்கள் பௌத்த வரலாறு கூறுவதாக நாம் கேட்டிருக்கின்றோம்.

அத்தகைய மனசாட்சியே இன்று ஆட்சியாளர்களுக்கு தேவை.அதுவே இனங்களை சுதந்திரமாக வாழ விடும்.அதுவே நாட்டுக்கு விடுதலையையும் சுபீட்சத்தையும் மட்டுமல்ல நீங்கள் எதிர்பார்க்கும் வளமான அழகான நாட்டையும் உருவாக்கும் என்பதையும் தெளிவாக கூற விரும்புகின்றோம் என்றார்.

7SIY5K6KDFHIJECXH6BH3FHLGE

கனடா $27.6 பில்லியன் அமெரிக்க இறக்குமதிகள் மீது பதிலடி வரி விதிப்பு – 

August 25, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடியப் பொருட்கள் மீது 50% வரி விதித்ததைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக $27.6 பில்லியன்

462LJO3DBFF6NPN2IULEMMDPRI

வர்த்தகப் போர்: வடமேற்கு மற்றும் வடகிழக்கு ஒன்டாரியோவில் கவலையும் புதிய வாய்ப்புகளும்

August 25, 2026

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான 11-ஆம் மணி நேர வர்த்தகப் பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து, கனடியப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர்

IF6WVUL6AZHXNAAMDZ5URB7V34

வர்த்தக ஒப்பந்த முறிவுக்கு மத்தியிலும் கனடா-அமெரிக்க கூட்டுறவை போற்றும் நியூ பிரன்சுவிக் விழா

August 25, 2026

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை முறிந்த சில மணி நேரங்களிலேயே, இரு நாடுகளின் நீண்டகால நட்புறவை நினைவுகூரும்

trump june 26

தொடர்ந்து நிலவி வரும் வர்த்தக மோதலுக்கு மத்தியில், ஒன்டாரியோ ஏரியின் (Lake Ontario) பெயரை மாற்றப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தல்

August 25, 2026

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘ஒன்டாரியோ ஏரி’யின் பெயரை மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க

vijay-tributes-vijayakanth-2nd-anniversary

“விஜயகாந்தின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!” – முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி

August 25, 2026

சென்னை: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில் முதலமைச்சர் புகழஞ்சலி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தே.மு.தி.க.) நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித்

Thirumavalavan-press-meet-edi-2

“புதிய விமான நிலையம் தேவைதான்; ஆனால்…” – வி.சி.கே. தலைவர் திருமாவளவன் கருத்து!

August 25, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஆண்டிற்கு 3

maalai-malar_2026-08-25_i3uyw1ww_deva

விஜய்யைச் சந்தித்து த.வெ.க.வில் இணையும் பிரபல மலையாள நடிகர்: கேரளாவில் முக்கியப் பொறுப்பு?

August 25, 2026

சென்னை: தென்மாநிலங்களில் த.வெ.க.வை விரிவுபடுத்த திட்டம் தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கேரளா,

1200-675-27424292-thumbnail-16x9-min-aadhav-new

“ஜி-ஸ்கொயரைப் பற்றி பேசினால் தி.மு.க.வினர் ஏன் பதற்றப்படுகிறார்கள்?” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி

August 25, 2026

சென்னை: பா.ம.க. எம்.எல்.ஏ.வின் கோரிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான 7-வது நாள் விவாதம் இன்று நடைபெற்றது. இதில்

dailythanthi_2026-08-25_zq03klgx_CHENNAI-15

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: முதலமைச்சர் விஜய்க்கு நேரில் நன்றி தெரிவித்த விவசாயிகள்

August 25, 2026

சென்னை: முதலமைச்சருடன் நேரில் சந்திப்பு பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பரந்தூர்

1200-675-27478432-thumbnail-16x9-sdew

பரந்தூர் விமான நிலைய திட்ட ரத்து விவகாரம்: பேரவையில் த.வெ.க – தி.மு.க – அ.தி.மு.க வார்த்தை மோதல்!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் இன்று இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும்

HQjRRN4bIAAIIXR

250 புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

August 25, 2026

சென்னை: புதிய பேருந்துகள் தொடக்க விழா சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர்

images - 2026-08-25T191417.284

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குடும்பத்தினரிடம் சிபிஐ தீவிர விசாரணை!

August 25, 2026

சென்னை: வழக்கு பின்னணியும் காவல்துறையின் நடவடிக்கையும் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ஆம்