உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, , உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிஐடி இன்று (08) நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
ஒரு பிரேரணை (Motion) மூலம் கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு சிஐடி இந்த விபரத்தை அறிவித்துள்ளளது.
சிஐடியினரின் தகவல்படி, சுரேஷ் சல்லே சிஐடி காவலில் இருந்தபோதே, அவசர மருத்துவ சிகிச்சைக்காக நேற்று இரவு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டிருந்தார்.
காவலில் இருந்தபோது, தனக்கு முறையில்மனிதாபிமானமற்ற
சிகிச்சையளிக்கப்படுவதாகவும், சித்திரவதை செய்யப்படுவதாகவும் கூறி சுரேஷ் சலே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.