இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தொடர் ஒடுக்குமுறையைக் கண்டிப்பதுடன், துள்ளிசைக் கலைஞர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்ய கனடியத் தமிழர் பேரவை கோரிக்கை 

இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ், ‘ஹிப்-ஹாப் சங்கீ’ (Hip-Hop Sangee) என்று பரவலாக அறியப்படும் தமிழ்ப் பாடகர் கணேஷ் குமார் சங்கீதன் கைது செய்யப்பட்டதை கனடியத் தமிழர் பேரவை (CTC) வன்மையாகக் கண்டிப்பதுடன், அவரை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு கோருகிறது.
இந்தக் கைது நடவடிக்கையானது இலங்கையின் கருத்துச் சுதந்திரம், ஜனநாயகப் பங்களிப்பு, மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றிற்கு விடுக்கப்பட்ட கடுமையான அச்சுறுத்தலாகும். அண்மையில் தமிழ் கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வன் பிரதீபனின் ஐந்து புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இக்கைது இடம்பெற்றுள்ளமை, மாற்றுக் கருத்துக்கள் மற்றும் சுதந்திரமான பேச்சுரிமை மீது அதிகரித்து வரும் ஒடுக்குமுறைப் போக்கை வெளிப்படுத்துகிறது.
தன்னிச்சையான கைதுகள், குற்றச்சாட்டுகள் இன்றிய நீண்டகாலத் தடுப்புக்காவல் என்பன முறையான சட்ட நடைமுறை மீறல்களுக்கு வழிவகுப்பதாக ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஜனநாயக நாடுகளால் நீண்டகாலமாக விமர்சிக்கப்பட்டுவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பயன்படுத்தி வருவதையிட்டு கனடியத் தமிழர் பேரவை தனது ஆழந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது.
சங்கீதனின் கைது மற்றும் தீபச்செல்வனின் புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியன, இலங்கையில் சுருங்கி வரும் ஜனநாயகக் கட்டமைப்பு குறித்தும், தமிழ் அரசியல் வெளிப்பாடுகள், அறிவுசார் கலந்துரையாடல்கள் மற்றும் அமைதியான செயல்பாடுகள் தொடர்ந்து இலக்கு வைக்கப்படுவது குறித்தும் கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளன.
“ஒரு ஜனநாயக சமூகத்தின் அடிப்படைத் தூண் கருத்துச் சுதந்திரம் ஆகும். அமைதியான முறையில் குரல் எழுப்பும் தனிநபர்களைக் கைது செய்வதும், வெளியிடப்பட்ட நூல்களை முடக்குவதும் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பலவீனப்படுத்துவதோடு, இலங்கையின் உண்மையான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் சீர்குலைக்கிறது” என கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் சிறீதரன் துரைராஜா தெரிவித்தார்.
கனடியத் தமிழர் பேரவை பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:
• இலங்கை அரசாங்கம் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்து அவரது அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
• இலங்கை அரசாங்கம் தீபச்செல்வனின் இன்னும் வெளியிடப்படாத இரண்டு புத்தகங்கள் மீதான நடவடிக்கைகள் உட்பட, வெளியீடுகள் மற்றும் கருத்து வெளிப்பாடுகள் மீதான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். அத்துடன் சிந்தனை, கருத்து மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கான உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்.
• இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கி, அதற்குப் பதிலாக சர்வதேச மனித உரிமைத் தரங்களுக்கு முழுமையாகக் கட்டுப்படும் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்.
• கனடா அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் பகிரங்கமாகக் கண்டிக்க வேண்டும்; சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யக் கோர வேண்டும்; மேலும் அர்த்தமுள்ள மனித உரிமைச் சீர்திருத்தங்கள் மற்றும் ஜனநாயகச் சுதந்திரங்களை ஊக்குவிக்க இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
• ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஜனநாயகப் பண்புள்ள நட்பு நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சமூகம், இந்த நிலவரங்களை உன்னிப்பாகக் கண்காணித்து, இலங்கையில் பொதுமக்கள் உரிமைகள், கருத்துச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காகக் குரல் கொடுக்க வேண்டும்.
இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் அனைத்து சமூகங்களுக்குமான நீதி, பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகச் சுதந்திரங்களை மேம்படுத்துவதில் கனடியத் தமிழர் பேரவை என்றும் உறுதியாக நிற்கிறது.
kasthuri-1-2024-11-0308395fba104cc334646f143d18f661-4x3

இடைத்தேர்தலில் த.வெ.க. வென்றால் காங்கிரஸ் கூட்டணி முறிய வாய்ப்பு: பா.ஜ.க. நிர்வாகி கஸ்தூரி

August 25, 2026

கும்பகோணம்: கஸ்தூரியின் கோயில் தரிசனமும் செய்தியாளர் சந்திப்பும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு வந்த பா.ஜ.க. மூத்த நிர்வாகி கஸ்தூரி, அங்குள்ள

U2-1024x620

“தைரியம் இருந்தால் அந்த மூன்று கோப்புகளை ஓபன் பண்ணுங்க!” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி சவால்

August 25, 2026

சென்னை: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘போராளி ஓய்வதில்லை’ என்ற தலைப்பில் தி.மு.க.

1200-675-27473574-thumbnail-16x9-megamalai

மேகமலை விவகாரம்: தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை மனு!

August 25, 2026

தேனி: ஆட்சியரின் உத்தரவும் மக்களின் அதிர்ச்சியும் தேனி மாவட்டம், வருஷநாடு, மேகமலை உள்ளிட்ட 98 மலை கிராம மக்களை வெளியேற்றும்

hindutamil-prod_2026-08-24_3sbtyc61_IMGTRBRAJAA210ED3RG16

“விஜய்யின் ஈகோவுக்காகவே பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து!” – டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்

August 25, 2026

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தைத் த.வெ.க. அரசு கைவிட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சென்னை அண்ணா

Eb2zWUlU0AE67ID

சாத்தான்குளம் வழக்கு: தூக்குத் தண்டனை கைதிக்கு 2 நாள் அவசர கால விடுப்பு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

August 25, 2026

மதுரை: ரகு கணேஷுக்கு அவசர கால விடுப்பு சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று சிறையில்

cham

சமிந்த விஜேசிறிக்கு பிணை

August 25, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள்

Parliame

22ஐ சவாலுக்கு உட்படுத்தி 21 மனுக்கள் தாக்கல்

August 25, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள்

can

மாணவியின் மனிதநேயப் பண்பு!

August 25, 2026

அக்கரப்பத்தனை பகுதியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த 15,000 ரூபாய் பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனைத் தாமதிக்காமல்

dd

117ம் பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக வயதான பெண்!

August 25, 2026

உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்