இலங்கை பொருளாதாரம் வரும் நாட்களில் மேலும் பல கடுமையான சவால்களைச் சந்திக்க நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற பொது நிதிக்குழுவின் (COPF) தலைவருமான கலாநிதி எரிபொருள் விலை உயருமா என்று யாரும் கேட்கத் தேவையில்லை, அது கண்டிப்பாக உயரும் ஹர்ஷடி சில்வா கூறியுள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய அவர் இது குறித்துக் கூறியதாவது:
“வாகன இறக்குமதிக்காக வழங்கப்பட்ட கடன் கடிதங்கள் (Letters of credit) சந்தைக்கு வரும்போது, அமெரிக்க டொலருக்கான தேவை மிக விரைவில் பன்மடங்கு அதிகரிக்கும். எனது அண்மைய வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய உடனேயே நான் நாடாளுமன்றத்திற்கு விரைந்து வந்து, சந்தை நம்பிக்கையை (Market confidence) கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினேன். தற்போது சந்தையில் எவ்வித நம்பிக்கையும் இல்லை.”
“இதன் காரணமாகவே, இறக்குமதியாளர்கள் தங்களது ரூபாயை உடனடியாக டொலர்களாக மாற்ற விரும்புகிறார்கள்; அதே நேரத்தில் ஏற்றுமதியாளர்கள் தங்களது டொலர் வருவாயை ரூபாயாக மாற்றாமல் தங்களின் வசமே வைத்திருக்க விரும்புகிறார்கள். அதனால்தான் சந்தை நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்கிறேன். மத்திய வங்கி போன்ற நிறுவனங்கள் சில குறிப்பிட்ட மாற்றங்களைச் செய்வதன் மூலம் இந்த சந்தை நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.
வட்டி விகிதங்கள் (Interest rates) இதற்கு முன்பே உயர்த்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் விலை மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மீதான தாக்கம்:
அரசாங்கம் எரிபொருள் மானியத்தைக் (Fuel subsidy) குறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதால், எரிபொருள் விலைகள் மேலும் உயர்வது நிச்சயம் என்று அவர் தெரிவித்தார். “எரிபொருள் விலை உயருமா என்று யாரும் கேட்கத் தேவையில்லை, அது கண்டிப்பாக உயரும்,” என்றார் அவர்.
மேலும், ஏற்றுமதித் தீர்வையை (Export cess) நீக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதானது, உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாரியளவில் மோசமாகப் பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வரவிருக்கும் இந்தத் துயரங்களை முறியடிப்பது சாத்தியமே, ஆனால் அதனை மிகுந்த கவனத்துடனும் திறமையுடனும் கையாள வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
2.5 பில்லியன் டொலர் திருட்டு அறிக்கை விவகாரம்:
2.5 பில்லியன் டொலர் திருட்டு தொடர்பான அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டது குறித்து விளக்கிய அவர்:
“அந்த அறிக்கை நிதி அமைச்சினால் எனது தனிப்பட்ட பார்வைக்காக மட்டுமே (Personal reference) அனுப்பப்பட்டிருந்ததால், அது திருப்பி அனுப்பப்பட்டது. பொது நிதிக்குழுவின் (COPF) மற்ற உறுப்பினர்களுடன் விவாதிக்க வேண்டிய ஒரு ஆவணத்தை, தனிப்பட்ட பார்வைக்கு மட்டும் அனுப்புவது முறையல்ல. COPF குழுவின் அனைத்து உறுப்பினர்களின் பார்வைக்கும் அனுப்பும் வகையில் ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்க நிதி அமைச்சுக்கு நான்கு வாரங்கள் அவகாசம் அளித்துள்ளோம். விரைவில் முறையான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்,”