மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த வேண்டும் – சாணக்கியன்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதை உறுதி செய்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்று பல்வேறு தரப்பினரும் முன்வைத்துள்ள யோசனைகளை கருத்திற் கொண்டு அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதை உறுதி செய்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கடந்த பாராளுமன்றத்தில் உறுப்பினராக பதவி வகித்த எமது கட்சியின் செயலாளர் எம். எ சுமந்திரன் பழையத் தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக, 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தைத் திருத்துவதற்கான தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.

எவ்வாறாயினும், அப்போதிருந்த ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அதனை எடுத்துக்கொள்வதைப் பிற்போட்டதால், அந்த தனிநபர் பிரேரணை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இவ்வாறான பின்னணியில் கடந்த ஆண்டு நான் சமர்ப்பித்த மாகாணசபைத் தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை குறித்து தற்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தது. அந்த வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாகாணசபைத் தேர்தல் மிகவும் அவசியமானது. ஏனெனில் இவ்விரு மாகாணங்களையும் அடிப்படையாகக் கொண்டே மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது.

மாகாணசபைத் தேர்தலை பழையத் தேர்தல் முறைமைக்கு அமைய நடத்தலாம் என்று சகல தரப்பினரும் வலியுறுத்துகிறார்கள். சட்டமா அதிபர் திணைக்களமும் அவ்வாறானதொரு நிலைப்பாட்டில் தான் பாராளுமன்ற விசேட செயற்குழுக்கு யோசனை முன்வைத்துள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.

45

பௌத்த துறவிகளின் ஒழுக்காற்று நடவடிக்கை; ஐக்கிய தேசியக் கட்சி விசேட அறிவிப்பு

June 1, 2026

பௌத்த துறவிகளின் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளதாகவும், அது தொடர்பான

709863888_1521841382997076_1374205074410558748_n

வவுனியாவில் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்

June 1, 2026

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை 9 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் நடைபெவுள்ளது.

sdf

வெசாக் தின விசேட கண்புரை அறுவைச் சிகிச்சை முகாம் யாழ்.போதனா வைத்தியசாலையில்!

June 1, 2026

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவினால் வெசாக் தினைத்தினை முன்னிட்டு 28, 29 மற்றும் 30 ஆகிய தினங்களில்

Screenshot_20260601_013658_YouTube

இலங்கையில் விபத்து: வெசாக் தன்சலவில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மதுபோதையில் வந்த வாகனம் மோதி 6 பேர் பலி!

June 1, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு மீகொட சந்திக்கு அருகே உள்ள வெசாக் தன்சல (Vesak dansala) ஒன்றில் வரிசையில் காத்திருந்த மக்கள் கூட்டத்தின்

photo-collage.png (43)

கனடாவில் ‘தமிழர் சேனையின் பொன்னகவை 50’ இசைப்பேழை வெளியீட்டு விழா!

June 1, 2026

தமிழர் சேனையின் பொன்னகவையை முன்னிட்டு கனடாவில் பைரவி நுண்கலைக் கூடத்தால் இசைப்பேழை வெளியீடு 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா கந்தசுவாமி

3Q3JPJUE7BHN7LHPZLRMNGTNJQ

நோர்த் யார்க்கில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்து: ‘பலர் காயம்’ என காவல்துறை தகவல்

June 1, 2026

நோர்த் யார்க்கில் (North York) இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை

toronto police15

ரெக்ஸ்டேல் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி: காவல்துறை தகவல்

June 1, 2026

ரெக்ஸ்டேல் (Rexdale) அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை

713003786_122206969994330171_8828615223462009648_n

திருடப்பட்ட கிரெடிட் கார்டு மூலம் லாரிகளுக்கு எரிபொருள் நிரப்பிய மோசடி: ஒன்டாரியோ போலீசார் சந்தேக நபர்களைத் தேடுகின்றனர்!

June 1, 2026

திருடப்பட்ட கிரெடிட் கார்டு தகவல்களைப் பயன்படுத்தி, வணிக ரீதியிலான லாரிகளுக்கு (Commercial trucks) தொடர்ந்து எரிபொருள் நிரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட

patrick brown

கடுமையான குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை விரைவாக நாடுகடத்துங்கள்” – கனடா பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன்

June 1, 2026

கனடாவில் கடுமையான குற்றங்களில் ஈடுபடும் கனடா குடியுரிமை பெறாதவர்களை விரைவாக நாடு கடத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு பிராம்ப்டன் (Brampton) மேயர்

ve

வெசாக் தானசாலை வரிசையில் நின்றவர்களைக் கார் மோதியதில் 6பேர் உயிரிழப்பு: 7 பேர் படுகாயம்!

June 1, 2026

நேற்றிரவு மீகொட விபத்தில் காயமடைந்த மற்றொரு சிறு குழந்தை உட்பட 7 பேர் ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

tamil

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

June 1, 2026

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால்

Patha

தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களையும் பௌத்த சாசனத்தையும் பாரிய அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றது- பத்தரமுல்ல சீலரத்ன தேரர்!

June 1, 2026

இந்த நாட்டு மக்களின் சொத்துக்களையும், பௌத்த சாசனத்தையும், கலாசாரத்தையும் பாதுகாப்பதற்கு ஜனசெத பெரமுன மட்டுமே தகுதியான கட்சி என்பதை மக்கள்