படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் மரணத்துக்கு ஜனாதிபதி அநுர நடவடிக்கையெடுப்பார் – சகோதரர்

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும், முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமை குறித்து அவரது சகோதரரும் அந்தப் பத்திரிகையின் இணை நிறுவனருமான லால் விக்ரமதுங்க கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

லசந்தவுக்காக நாம் அமைப்பின் சார்பில் கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

லசந்த படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகளாகியும், இதுவரை மக்களுக்குத் தெரியக்கூடிய வகையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால், அன்று மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் யார் என்பது எமக்கும் தெரியும், விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கும் தெரியும், படுகொலை செய்தவர்களுக்கும் தெரியும். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து தான் மக்கள் மத்தியில் குரோதமும், சந்தேகமும், அமைதியின்மையும் நிலவுகிறது.

ஒரு வழக்கை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் போது சாட்சிகள் அவசியம் என்பது எனது கருத்து. ஆனால், இங்கே சாட்சிகளை முன்வைப்பதற்கு முன்னரே, இதில் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். காவல்துறையினர் நினைத்தால் இதைவிட நுணுக்கமான கொலைகளைக் கூட ஓரிரு நாட்களில் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் லசந்தவின் கொலை தொடர்பில் இதுவரை அது நடக்கவில்லை.

லசந்தவின் கொலையுடன் தொடர்புடைய மேலும் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கான சாட்சிகள் இருந்தும் ஏன் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவில்லை? ஒரு முன்னாள் பொலிஸ் மா அதிபர் சாட்சிகளை மாற்றியமைத்தது தொடர்பில் தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? லசந்த கொலை செய்யப்பட்ட போது அவரது நாட்குறிப்பை எடுத்துச் சென்ற முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக ஏன் வழக்குத் தொடரப்படவில்லை? இவ்வாறான வெளிப்படையான விடயங்களுக்கு முதலில் வழக்குத் தொடர்ந்தாலே, பிரதான கொலை வழக்கிற்கான சாட்சிகள் தானாகவே வலுப்பெறும்.

எமது நாட்டில் அரசியல்வாதிகள் இரண்டு விடயங்களை மட்டுமே செய்கிறார்கள். ஒன்று வாக்குகளைப் பெறுவது, மற்றொன்று தாம் எடுக்கும் தீர்மானங்களால் வாக்குகள் குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்வது. லசந்த விக்ரமதுங்க, கீத் நோயர் போன்றவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பிரகீத் எக்னெலிகொடவின் மறைவு என்பன இராணுவத்தின் ஒரு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவர். ஒரு நிறுவனத்தில் ஒரு சிறு குழு தவறு செய்யும்போது அந்த நிறுவனத்துக்கே அவப்பெயர் ஏற்படுகிறது. அத்தகையோரை நீக்கிவிட்டு நிறுவனத்தைக் காப்பாற்றுவதே முறை. ஆனால் இலங்கையில் அரசியல்வாதிகள் அவர்களை ‘ரணவிருவோ’ (மாவீரர்கள்) என்று கூறி காப்பாற்றுகிறார்கள். காரணமின்றி கொலை செய்பவர்கள் ஒருபோதும் மாவீரர்களாக முடியாது. இதனை ஒரு தேசமாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், இந்த நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது.

லசந்த சர்வதேச ரீதியாக ஒரு வீரராகப் போற்றப்படுகிறார். ஆனால் சொந்த நாட்டிலேயே அவர் கொல்லப்பட்டார், பத்திரிகை நிறுவனங்கள் எரிக்கப்பட்டன. இதையிட்டு நாம் வெட்கப்பட வேண்டும். தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நான் சந்தித்தபோது, இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் எனக்குத் தனிப்பட்ட ரீதியில் உறுதியளித்தார். அந்த நம்பிக்கையிலேயே நான் இன்னும் காத்திருக்கிறேன் என்றார்.

நாட்டின் ஆரம்பப் பாடசாலைகளுக்கு பொதுவான மாதிரித் திட்டம்

June 13, 2026

மாணவர் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் செயல்வழிக் கல்வி ஆகிய முக்கிய துறைகளை உள்ளடக்கிய பொதுவான மாதிரி ஒன்றின் அடிப்படையில், நாட்டின்

kaveendran

கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் – சுரேஷ் சலேயை விடுவிக்கவே கூடாது

June 13, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும் என்றும், அதுவரை இச்சம்பவம் தொடர்பில்

mujipur

மக்களின் ஜனநாயக உரிமையை இல்லாமலாக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்கின்றது – முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

June 13, 2026

வெளிப்படைத்தன்மை தொடர்பில் கதைத்த இந்த அரசாங்கம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்வனவு செய்துள்ள தகவல்களை கேட்டால், அதனை

Walk-1-1-1-2-3

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

June 13, 2026

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால்

thum

முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க தவறிய அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் – துமிந்த திஸாநாயக்க

June 13, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான துல்லியமான புலனாய்வு தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்தும் அதனைத் தடுக்க தவறிய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு

5Y6OSMTX3FCXBO26E4SV6JCRGM

உலகக் கோப்பை கால்பந்து: கானா அணி நட்சத்திர வீரர் தாமஸ் பார்ட்டி கனடாவுக்குள் நுழைய தடை!

June 13, 2026

டொராண்டோ: கானா நாட்டின் முன்னணி கால்பந்து மத்தியக்கள ஆட்டக்காரரான (Midfielder) தாமஸ் பார்ட்டி (Thomas Partey) கனடாவுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு

DQM2IQB3OZC4FOEXASINC2UA5U

டொராண்டோ மைதானத்தில் பரபரப்பு: காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிய போஸ்னியா நாட்டு ரசிகர்கள் இருவர் கைது

June 13, 2026

டொராண்டோ: டொராண்டோ மைதானத்தில் (Toronto Stadium) இன்று மதியம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக

FPNHWZZVJRAW7DCU3BD4HN267M

டொராண்டோ ஓடும் ரயிலில் அரங்கேறிய இனவெறித் தாக்குதல்: பெண் சந்தேக நபரைத் தேடும் காவல்துறை

June 13, 2026

ஜூன் 12, 2026 டொராண்டோ: கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள ‘கென்சிங்டன் மார்க்கெட்’ (Kensington Market) பகுதிக்கு அருகே, ஓடும்

3BIJM6DOAVBKRM6BHX4NTYTQLM

டொராண்டோ அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 18 வயது இளைஞன் கைது;

June 13, 2026

தி கனடியன் பிரஸ் ஜூன் 12, 2026 டொராண்டோ: கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கிச்

aal

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல் 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான விண்ணப்பங்களைக் கோரி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, 2026 க.பொ.த (உயர்தர) பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக, https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தள இணைப்பின் ஊடாகக் குறிப்பிடப்பட்டுள்ள திகதிகளில் இணையவழி (Online) விண்ணப்பங்கள் கோரப்படுவதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (09) முதல் விண்ணப்பங்கள் கோரப்படும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இம்மாதம் 22 ஆம் திகதி விண்ணப்பிப்பதற்கான இறுதித் நாளாகும் எனவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

June 12, 2026

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான விண்ணப்பங்களைக் கோரி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் அறிவித்தல்

vaa

யாழ்ப்பாணம் வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 37 ஆண்டுகள்

June 12, 2026

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை மீள் குடியேற்ற கோரி எதிர்வரும்

v

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வருண ஜயசுந்தரவை கைது செய்யவோ தடுத்து வைக்கவோ எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை?

June 12, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ்