சென்னை:
தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. தவெக அரசு ஒரு “நிராகரிக்கப்பட்ட அரசு” என உதயநிதி விமர்சிக்க, அதற்கு முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சியான விளக்கத்தை அளித்தார்.
சட்டமன்றத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “65 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி இது. தவெக ஆட்சியமைக்கப் பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்கவில்லை. 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுவிட்டு, எம்.எல்.ஏ-க்களைக் கடன் வாங்கி இந்த ஆட்சி நடக்கிறது. கூவத்தூரை மிஞ்சும் அளவுக்குக் கூத்தடிக்கிறார்கள். இந்த அரசு இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் எனத் தெரியவில்லை” என்று கடுமையாகச் சாடினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், “தனிப்பெரும்பான்மை என்பது ஒரு நூலிழையில் தள்ளிப் போயிருக்கலாம். 34.92% வாக்குகளுடன் மக்கள் எங்களைத் தனிப்பெரும் கட்சியாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். எங்களைச் ‘சிறுபான்மை அரசு’ என நீங்கள் சொன்னால் அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். ஆம், இது சிறுபான்மை அரசுதான்! சிறுபான்மை மக்களுக்கும், சமூகத்தில் நலிவடைந்தோருக்கும் பாதுகாப்பை நிலைநாட்டும் உண்மையான அரசு இது” எனப் பதிலடி கொடுத்தார். இந்த விவாதத்திற்குப் பின் நடைபெற்ற வாக்கெடுப்பில் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் தவெக அரசு தனது பெரும்பான்மையை உறுதி செய்தது.
#TNAssenbly #VijayVsUdhay #ConfidenceVote #TVK_Government #BreakingNews #May13 #TamilNaduPolitics #MinorityGovernment #UdhayanidhiStalin #ThalapathyVijay #NewGovernmentTN #AssemblyDebate #PoliticalWar #144Votes #VictoryForVijay #StalinVsVijay #TamilNews #VijayMakkalIyakkam #FortStGeorge #CM_Vijay_Official_“`