நீதிமன்றில் சந்திப்போம்”: பலாலி காவற்துறையின் மிரட்டலுக்கு தையிட்டி தவிசாளர் பதில்!

யாழ்ப்பாணம், தையிட்டி சட்டவிரோத விகாரை வளாகத்திற்குள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை மீட்கும் விவகாரத்தில், வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் அவர்களுக்கும் பலாலி காவற்துறையினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களின் சொத்தான “பவானி” வீதியை மீட்பதற்கான நடவடிக்கைகளைக் கைவிடுமாறு காவற்துறையினர் விடுத்த எச்சரிக்கையைத் தவிசாளர் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
பிரதேச சபை தவிசாளர் அடாத்தாகத் தனது விகாரையின் வேலியை அகற்றப் போவதாக விகாராதிபதி பலாலி காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இது தொடர்பாக தவிசாளரைப் பலாலி காவற்துறை நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்திய அதிகாரிகள், “இந்த வேலியை அகற்றினால் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படும்” எனக் கூறி, நடவடிக்கையைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்தால் தவிசாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டும் தொனியில் காவற்துறையினர் கூறியுள்ளனர்.
குறித்த வீதி வலி. வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமானது என்பதற்கான அனைத்துப் பூர்வீக ஆவணங்களும் சபையிடம் உள்ளன. சட்டத்தை எதிர்நோக்கத் தயார்: “எமக்கு எதிராக வழக்குத் தொடருங்கள், அதனை நீதிமன்றில் எதிர்கொள்ளத் தயார்” என கா தவிசாளர் சுகிர்தன் பதிலளித்துள்ளார்:
எதிர்வரும் மே 11-ஆம் திகதிக்குள் விகாராதிபதி தானாக முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றாவிடின், மே 12-ஆம் திகதி பிரதேச சபையினால் அந்த வேலிகள் அகற்றப்பட்டு வீதி மீட்கப்படும் என்பதில் தவிசாளர் உறுதியாக உள்ளார்.
கடந்த ஏப்ரல் 28-ஆம் திகதி தையிட்டியில் நில அளவீடு நடைபெற்ற போது இரு வேறு நிலைப்பாடுகள் வெளிப்பட்டன:
மாவட்ட செயலர் காணி உரிமையாளர்களின் கோரிக்கையை “நியாயமற்றது” எனக் கூறி நில அளவீட்டைக் கைவிட்டார்.
பிரதேச சபை தவிசாளர் அந்தச் சூழலிலும் சபைக்குச் சொந்தமான வீதியை அடையாளம் காட்டி அதனை அளவீடு செய்தார்.
தற்போது மாவட்ட நிர்வாகம் ஒரு பக்கமும், பிரதேச சபை நிர்வாகம் மற்றும் காணி உரிமையாளர்கள் மறுபக்கமும் உள்ள நிலையில், காவற்துறை விகாரை நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
amma_Mu

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை

May 14, 2026

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த

amma_Mu

மூதூர் அம்மன்நகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு – அம்மன்நகர் பகுதியில் புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வை

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி