வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் இல்லாத வேலைச் சூழல்; உடன்படிக்கையை அங்கீகரித்தது இலங்கை!

வேலை உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை ஒழிப்பதற்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 190-வது உடன்படிக்கையை அங்கீகரித்த உலகின் 55-வது நாடாக இலங்கை இணைந்துள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ ஆவணம் கடந்த 16-ஆம் திகதி சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் இலங்கையிடம் கையளிக்கப்பட்டது.

ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சுமித் திஸாநாயக்க, இந்த ஆவணத்தை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் எஃப். ஹூங்போவிடம் கையளித்தார்.

இந்த உடன்படிக்கையை அங்கீகரிப்பதன் மூலம், தொழிலாளர் சமூகத்தின் கௌரவம், சமத்துவம் மற்றும் மதிப்பினைப் பாதுகாப்பதில் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் இல்லாத வேலைச் சூழலை உருவாக்குவதற்காக இலங்கை எடுத்துள்ள இந்தச் சிறப்பான நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அங்கீகரிக்கப்பட்ட உடன்படிக்கைகளுக்கு இணங்க சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளைத் தயாரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் உள்ளிட்ட தரப்பினருக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சுமித் திஸாநாயக்க, இந்த உடன்படிக்கையை அங்கீகரிப்பதன் மூலம் ஒவ்வொரு நபரும் எந்தவித துன்புறுத்தலும் இன்றி வேலைச் சூழலில் வாழ்வதற்கான உரிமையை மதிக்கவும், மேம்படுத்தவும் மற்றும் யதார்த்தமாக்கவும் தற்போதைய அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு வெளிப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான உள்நாட்டு சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தவும், தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவும் இலங்கை ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 190-வது உடன்படிக்கையை அங்கீகரிப்பதற்கான ஆவணம், கடந்த ஜனவரி மாதம் 08-ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வின் போது, பிரதி தொழிலாளர் அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவினால் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ஜொனி சிம்ப்சனிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

வேலை உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கும், அவற்றை எதிர்கொள்வதற்கும் தெளிவான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படையை வழங்கும் முதலாவது சர்வதேச சட்ட ஆவணம் இந்த 190-வது உடன்படிக்கையாகும்.

குறிப்பாக, பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதும் இந்த உடன்படிக்கையில் உள்ளடங்கியுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.

இதன் மூலம், இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட உலகின் 55-வது நாடாகவும், தெற்காசியாவில் இரண்டாவது நாடாகவும் இலங்கை இடம்பிடித்துள்ளது.

fa

நெற்பயிர்ச் செய்கை பாதிப்பு; விவசாயிகளுக்கு 1,200 மில்லியன் ரூபா இழப்பீடு!

April 21, 2026

மாத்தறை மாவட்டத்தில் குடிநீருடன் கடல் நீர் கலப்பதைத் தடுப்பதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் 2019ஆம் ஆண்டு

japp

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும்?

April 21, 2026

ஜப்பானில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத்

prema

பிரேமலால் ஜயசேகர எம்.பி. கைது

April 21, 2026

‘சொக்கா மல்லி’ என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

G_Q4Ze7WQAAHCyq

தீயசக்தி திமுக.. பாசிச பாஜக.. அக்குவேறாக பிரித்து எறிவோம்! “விசில்” சின்னத்திற்கு வாக்களிக்க விஜய் உருக்கமான வேண்டுகோள்!

April 21, 2026

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழக மக்களுக்கு மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான

Malcolm-Cardinal-Ranjith

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; முட்டுக்கட்டைகள் குறித்து கர்தினால் ரஞ்சித் எச்சரிக்கை

April 21, 2026

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றமடைந்து வருவதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால்

Mid photos new.00_01_08_07.Still034_

சரித்திரத்தில் சத்தியம் தோற்றதாக செய்தியில்லை! “மாற்றத்திற்கு ஒரே வழி நாம் தான்” – சீமான் உருக்கம்

April 21, 2026

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் உச்சகட்டப் பரப்பை எட்டியுள்ளது. 234

IRAN ARMY111

போர்க்களத்தில் ‘புதிய வியூகங்களை’ (New Cards) வெளிப்படுத்தத் தயாராகிறது ஈரான்

April 21, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்கு இன்னும் சில நேரங்களே உள்ள நிலையில், மேலதிக

pak16

இஸ்லாமாபாத்தில் தயார்நிலைகள்: பேச்சுவார்த்தைகள் நடக்குமா என்பதில் தொடரும் நிச்சயமற்ற தன்மை

April 21, 2026

இன்று காலை இஸ்லாமாபாத்தில் சாத்தியமான பேச்சுவார்த்தைகளுக்கான முன்னேற்பாடுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. தலைநகர் வழியாகப் பயணம் செய்யும் போது, பாதுகாப்புச்

ele co

தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் தாமதம்: தேர்தல் ஆணைக்குழு அதிருப்தி

April 21, 2026

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தேர்தல் சட்டச் சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசாங்கமும் எதிர்க்கட்சியும் நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது என தேர்தல்

arrest-1

10 லட்சம் ரூபாய் வங்கி மோசடி: போலி இணையதளத்தை உருவாக்கிய இளைஞர் கைது

April 21, 2026

தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்றே ஒரு போலி இணையதளத்தை உருவாக்கி, நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ்

easter bomb 2026

இலங்கையில்உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் : ஏழு ஆண்டுகள் கடந்தும் நீதிக்காகக் காத்திருக்கும் பாதிக்கப்பட்டவர்கள்

April 21, 2026

(AFP) நீர்கொழும்பு, இலங்கை – இலங்கையில் 279 பேரைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,

namal raja

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை அரசாங்கம் அரசியலாக்குவதாக நாமல் குற்றச்சாட்டு

April 21, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் அரசியலாக்கி வருவதாகவும், தெரிவு செய்யப்பட்ட நபர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து