ஸ்டாலினின் ஆட்சி தான் அமையும்; கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை – வைகோ

”தமிழகத்தில் ஸ்டாலினின் ஆட்சி தான் அமையும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சிற்கு இடமில்லை ” என மதிமுகவின் பொதுச்செயலாளரான வைகோ பேசியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக எதிர்வரும் 23 ஆம் திகதியன்று பொது தேர்தல் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும், கட்சியின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே. என். நேருவை ஆதரித்து திருச்சி உறையூர் பகுதியில் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளரான வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதில் அவர் பேசியதாவது….

நான் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதற்காக என்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்தவன். ஐந்தரை ஆண்டு காலம் சிறையில் இருந்தவன்.

6000 கிலோ மீற்றர் தொலைவிற்கு நடைபயணம் மேற்கொண்டவன். ஸ்டெர்லைட்காக போராடியவன். தூத்துக்குடியில் 13 உயிர்களை காவு வாங்கியவர் எடப்பாடி பழனிச்சாமி. ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் ஏஜென்ட்டாக புரோக்கராக… எடப்பாடி மாறியதால் தான் அந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அதே போல் சாத்தான் குளத்திலும் தந்தை – மகன் அடித்து கொல்லப்பட்டதற்கும் அப்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுதான் பொறுப்பு.

உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆணவத்துடன் திமுகவை வேருடன் பிடுங்கி எறிவேன் என்கிறார். இதே போல் அண்ணாமலையும் கூறுகிறார். யாராலும் அதை செய்ய முடியாது. திமுக தியாகத்தால் கட்டப்பட்ட கோட்டை. 75 ஆண்டு கால பாரம்பரிய திமுகவை தோற்கடிப்போம் என பேசினால்… அது ஜனநாயக உரிமை. ஆனால் மண்ணுடன் கலந்திருக்கக்கூடிய இயக்கத்தை வேருடன் பிடுங்கி அழிப்போம் என்கிறார்கள். இது நடக்காது.

திராவிட இயக்கத்தை நெஞ்சில் சுமப்பவன் நான். கலைஞருக்கு பக்கபலமாக எவ்வாறு நான் நின்றேனோ உற்ற துணையாக இருந்தேனோ அதேபோல் ஸ்டாலினுக்கும் இருப்பேன் என கலைஞரிடத்தில் உறுதி அளித்துள்ளேன்.

இந்த இயக்கத்தை சாய்ப்பதற்கு சனாதன சக்திகளும், அதன் வெறிபிடித்த கூட்டமும் இங்கே நுழைந்து விடக்கூடாது. அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழ்நாடு. தளபதி ஸ்டாலினின் நிர்வாகத்தில் இந்துக்கள்- இஸ்லாமியர்கள்- கிறித்தவர்கள்- என அனைவரும் சகோதரர்களாக வாழக்கூடிய சூழல் உள்ளது. வடநாட்டில் ரத்த களரிகள் ஏற்படுவதை போல் தமிழ்நாட்டிலும் ஏற்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்ற கூட்டத்தை தடுத்து, அதனை தகர்த்து தவிடு பொடியாக்க வேண்டிய கடமை எனக்கும் உண்டு.

சுயமரியாதை, சமூக நீதி ,சமத்துவம், சகோதரத்துவம் ,மதச்சார்பின்மை , கூட்டாட்சி கருத்தியல் கொண்ட இயக்கம் தான் திராவிட மாடல். இந்த ஆட்சியை நடத்துகிற இயக்கம் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் – கட்டணம் இல்லா மகளிர் விடியல் பயணம் – முதல்வர் காலை உணவு திட்டம் -புதுமைப்பெண் -தமிழ் புதல்வன்- நான் முதல்வன் -மக்களை தேடி மருத்துவம் -என பல்வேறு திட்டங்களை அறிவித்த நமது முதல்வரை.. இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் இருக்கக்கூடிய முதல்வர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை பின்பற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே என் நேரு கலைஞர் பேருந்து முனையும் -காய்கறி சந்தை- டைடல் பார்க் என பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ளார். அதனால் அவர் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

தமிழ்நாட்டிற்கு எந்த மாநிலங்களிலும் இல்லாத புதிய மக்கள் நல திட்டங்களை கொண்டு வந்தது ஸ்டாலின் தலைமையிலான அரசு. எனவே அந்த அரசு நீடிப்பதற்கான தீர்ப்பை தான் தமிழக மக்கள் வழங்குவார்கள். எங்கு திரும்பினாலும் உதயசூரியன் என்ற குரல் தான் கேட்கிறது. மீண்டும் ஸ்டாலின் தான் முதல்வராக பொறுப்பேற்பார். தமிழகத்தில் அடுத்து அமையப்போவது ஸ்டாலினின் திமுக தலைமையிலான ஆட்சி தான். கூட்டணி ஆட்சி அல்ல. அந்த நிலையை மக்கள் ஒருபோதும் ஏற்படுத்த மாட்டார்கள்” என பேசினார்.

725006167_122271192422059693_1707214849349142602_n

காணிகளை விடுவிக்ககோரி அறவழி போராட்டத்தில் ஈடுபட்டமயிலிட்டி மக்கள் -ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மனு

June 15, 2026

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர்,

Ranil

இலங்கையின் பொருளாதாரம் விரைவில் முற்றாக வீழ்ச்சியடையும்”: ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!

June 15, 2026

கொழும்பு: இலங்கையின் பொருளாதாரம் ஏற்கனவே வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டதுடன், இன்னும் சில காலத்திற்குள் அது முற்றாக முடங்குவதை (Complete crash) காணக்கூடியதாக

Chilaw-Hospital

சிலாபம் மருத்துவமனையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்: இருவர் காயம், சந்தேகநபர்கள் கைது

June 15, 2026

சிலாபம்: சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனையில் (Chilaw District General Hospital) நேற்றிரவு (14) இருவர் மேற்கொண்ட தாக்குதலில், அங்கு

722205425_2516904032157267_6855962867046714642_n

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பை வலியுறுத்தி போராட்டம்!

June 15, 2026

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் உள்ள காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்று காலை யாழ்

Sarath

இன்று இருப்பது ஒரு கார்ட்டூன் எதிர்க்கட்சி”: மார்ஷல்சரத் பொன்சேகா கருத்து!

June 15, 2026

ஊழல்வாதிகளான அரசியல்வாதிகளுக்கு அதிகபட்ச தண்டனைகளை வழங்கி வரும் தற்போதைய அரசாங்கத்திற்குத் தனது ஆசீர்வாதங்களை வழங்குவதாகப் மார்ஷல் சரத் பொன்சேகாகுறிப்பிட்டுள்ளார்.

dead'

புலத்சிங்களவில் உள்ள ஆடைவிற்பனை நிலையத்திற்குள் தம்பதியினர் சடலங்களாக மீட்பு!

June 15, 2026

புலத்சிங்கள: களுத்துறை மாவட்டம், புலத்சிங்கள பகுதியில் உள்ள ஆடைவிற்பனை நிலையம் (Clothing store) ஒன்றிற்குள் கணவன் மற்றும் மனைவி ஆகிய

suresh11

சுரேஷ் சல்லேயை தினமும் சந்திக்க சட்டத்தரணிக்கு சிஐடி மறுப்பு: குடும்பத்தினருக்கு அனுமதி!

June 15, 2026

கொழும்பு: குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டிருந்த போது முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, தற்போது கொழும்பு தேசிய

722205477_122297438792194641_4474599319675497240_n

ரொறன்ரோ டென்போர்த் பகுதியில் தொடர் தாக்குதல்: நபர் மீது 12 குற்றச்சாட்டுகள் — பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பொலிஸார்

June 15, 2026

ரொறன்ரோ: கனடாவின் ரொறன்ரோ நகரில் உள்ள கொக்ஸ்வெல் அவென்யூ (Coxwell Avenue) மற்றும் டென்போர்த் அவென்யூ (Danforth Avenue) சந்திப்புப்

wi

பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை

June 15, 2026

நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் தீவிர தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்

j

உழவு இயந்திரம் கால்வாயில் கவிழ்ந்ததில் இரு பிள்ளைகளின் தந்தை பலி

June 15, 2026

வனாதவில்லுவ, மயிலங்குளம் பகுதியில் வயல் உழுதுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த உழவு இயந்திரம் கால்வாயில் கவிழ்ந்ததில், அதன் ஓட்டுநர் துரதிர்ஷ்டவசமாக அதன்

Elnino

இலங்கையைப் பாதித்துள்ள எல் நினோ காலநிலை

June 15, 2026

இலங்கையைப் பாதித்துள்ள ‘எல் நினோ’ காலநிலை நிலைமை காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் சில பகுதிகளில்

chemma

சோமரத்ன ராஜபக்ஷ செம்மணி படுகொலை சாட்சியாளர் மாத்திரமேயன்றி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையுடன் தொடர்பில்லாதவர் – சோமரத்னவின் மனைவி

June 15, 2026

டசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலையுடன் எனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது பற்றி இதற்கு