உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; அதிகாரிகள்  விடயத்தை திசைதிருப்புகின்றனரா? – சாணக்கியன்  

சாரா ஜெஸ்மின் விடயத்தில் மூன்றாவது தடவையாக டி.என்.ஏ பரிசோதனை செய்யவில்லை என்று அவரின் தாய் தற்போது குறிப்பிடுகிறார். மூன்று டி.என்.ஏ பரிசோதனைகள் செய்திருந்தால், அந்த டி.என்.ஏ யாருடையது? கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாரா ஜெஸ்மினின் வீட்டுக்கு சென்று அவரிடம் தாயிடம் ‘உங்களின் மகள் இறக்கும்போது இரண்டு மாத கர்ப்பிணி, அவரை இராணுவம் அடக்கம் செய்துள்ளது’ என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். ஆனால் சாரா ஜெஸ்மின் உயிருடன் இருப்பதாக அமைச்சர் கூறியிருந்தார். இதனால் இந்த விடயத்தில் சில சந்தேகங்கள் இருக்கின்றன. இதனை திசைதிருப்ப சில அதிகாரிகள் முயற்சிக்கின்றனரா என்ற சந்தேகங்கள் உள்ளன என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கும் விசாரணைகள் தொடர்பில் அரசாங்கத்தை பாராட்டுகின்றோம். கட்சி பேதமின்றி அரசாங்கத்திற்கு நன்றியை கூறிக்கொள்கின்றோம். சுரேஷ் சலே போன்றவர்களை கைது செய்வார்களா? என்ற சந்தேகம் கடந்த காலங்களில் காணப்பட்டது. ஆனால் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வரவேற்கிறோம்.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் உதய கம்மன்பில நூல் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இதுபோன்ற ஒரு புத்தகத்தை ‘ வேட்டை’என்ற பெயரில் பிள்ளையான் எழுதியிருந்தார். ஆனால் அவர் புத்தகத்தை எழுதக்கூடிய நிலையில் இருக்கும் ஒருவரா? இல்லையா? என்று நாட்டில் அனைவருக்கும் தெரியும். எவ்வாறாயினும் இந்த புத்தகத்தை ரொஹான் குணரட்ன என்ற நபரே எழுதியுள்ளார்.

இதனை பொறுப்புடன் கூறுகின்றேன். இந்த புத்தகத்திற்கு ஒருவர் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ரொஹான் குணரட்ன எழுதியுள்ளதுடன், அதனை பிள்ளையான் வெளியிட்டார். இப்போது அதுபோன்ற புத்தகத்தையே கம்மன்பிலவும் வெளியிட்டுள்ளார். இந்த புத்தகம் தொடர்பிலும் எமக்கு சந்தேகங்கள் உள்ளன.

முக்கியமான விடயம் என்னவென்றால் ரொஹான் குணரட்ன என்ற நபரின் அலுவலகம், பத்தரமுல்ல கடவுச்சீட்டு அலுவலக கட்டடத்துக்கு அருகில் இருந்தது.பிள்ளையானின் புத்தகத்திற்கு தேவையான தகவல்களை வழங்க திரிபொலி தரப்புடன் தொடர்புடைய ஓட்டமாவடியை சேர்ந்த கலீல் என்ற நபரே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் கலீல், 2015-2019 காலத்தில் பிள்ளையானுடன் ஒன்றாக சிறையில் இருந்தார். இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் முறையாக நடக்க வேண்டும் என்று அரசாங்கத்தினால் ஜனாதிபதி மட்டத்தில் ஆர்வமாக இருந்தாலும் பொலிஸார் தொடர்பில் என்னால் சான்றுகளை வழங்க முடியாது. அதற்கு காரணம் பொலிஸில் உள்ள குழுவொன்று இந்த விசாரணையை திசைத்திருப்ப அல்லது இந்த விசாரணையை தவறான பக்கத்திற்கு கொண்டு செல்ல இன்றும் முயற்சிக்கின்றனர் என்ற சந்தேகம் காணப்படுகிறது..

இதேவேளை இஸ்மயில் இசாக் என்ற நபர் தொடர்பில் நான் இந்தப் பாராளுமன்றத்துக்கு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன். இந்த நபர் கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி இந்த நாட்டில் இருந்து சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். இதன்படி இவர் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். சிலர் சாட்சியாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரை சந்திக்கும் போது கீழ்மட்ட அதிகாரிகள் அதற்கு கோபப்பட்டு அதனை திசை திருப்புகின்றனர்.

இதனால் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். வழக்குகளில் சாட்சியங்கள் தொடர்பான விளக்கங்களை பொலிஸாரே முன்வைக்கின்றனர். இதனால் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

சாரா ஜெஸ்மின் விடயத்தில், தன்னிடம் மூன்றாவது தடவையாக டி.என்.ஏ பரிசோதனை செய்யவில்லை என்று அவரின் தாய் தற்போது குறிப்பிடுகிறார். மூன்று டி.என்.எ பரிசோதனைகள் செய்திருந்தால்,மூன்றாவது டி.என்.எ யாருடையது?

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாரா ஜெஸ்மினின் வீட்டுக்கு சென்று அவரிடம் தாயிடம் உங்களின் மகள் இறக்கும் போது இரண்டு மாத கர்ப்பினி என்றும், அவரை இராணுவம் அடக்கம் செய்துள்ளது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். ஆனால் சாரா ஜெஸ்மின் உயிருடன் இருப்பதாக அமைச்சர் கூறியிருந்தார். இதனால் இந்த விடயத்தில் சில சந்தேகங்கள் இருக்கின்றன. இதனை திசை திருப்ப சில அதிகாரிகள் முயற்சிக்கின்றனரா, என்ற சந்தேகங்கள் உள்ளன.

அத்துடன் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் நடத்தப்படும் என்று அமைச்சர் குறிப்பிடுகிறார். இதற்கு முன்னரும் இரண்டு ஆவணப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Ndb

NDB வங்கிக்கு சர்வதேச தடயவியல் கணக்காய்வு

April 18, 2026

தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) அண்மையில் வெளிப்படுத்திய உள்நாட்டு நிதி மோசடி குறித்து, சர்வதேச நிபுணர்களைக் கொண்ட முன்னனி நிறுவனம்

cham

சம்பிக்க ரணவக்கவின் தொலைபேசியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு

April 18, 2026

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கையடக்கத் தொலைபேசியை நீதிமன்ற உத்தரவின்படி, வரும் ஏப்ரல் 29-ஆம் திகதி நீதிமன்றத்தில்

is

காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இஸ்ரேலிய இராணுவீரர் இலங்கையில்?

April 18, 2026

காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அமெரிக்க இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவர் தற்போது இலங்கையில் உள்ளதாக தெரிவித்துள்ள ஹிந்த் ரஜப் அமைப்பு இது

Air cana

எரிபொருள் விலை உயர்வு: நியூயோர்க்கிற்கான சில விமான சேவைகளை ரத்து செய்கிறது ஏயர் கனடா

April 18, 2026

அமெரிக்க-ஈரான் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், டொராண்டோ மற்றும் மொன்றியலில் இருந்து நியூயோர்க்கின் ஜே.எஃப்.கே (JFK) விமான

rohan silv

பிரதி பாதுகாப்பு அமைச்சரை நீக்குமாறு கோரிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்துவதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவை அந்தப் பதவியில்

pima

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி: 9 பில்லியன் ரூபா கொடுப்பனவை நிறுத்தி வைத்தது அரசாங்கம்

April 18, 2026

தரம் குறைந்த நிலக்கரி விநியோகம் தொடர்பான கவலைகள் காரணமாக, நிலக்கரி விநியோகஸ்தர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய 9 பில்லியன் ரூபாவிற்கும்

photo-collage.png (11)

கனடா – பிரம்டனில் வாகனவிபத்து!

April 18, 2026

கனடா – பிரம்டனில் வெள்ளிக்கிழமை (17) இரவு 9.30 மணியளவில் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. பிரம்டன் மேபீல்ட் அன்ட் ஷிங்கூசி

b

ஹெரோயின் கடத்தல்: மீன்பிடிப் படகின் உரிமையாளரும் கைது

April 18, 2026

சுமார் 150 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தி வந்த விவகாரத்தில், ‘தெனுவன் புதா’ என்ற பலநாள் மீன்பிடிப்

jail

வர்த்தக நிலையமொன்றினுள் பெண்ணின் தலைமுடியை வெட்டி சித்திரவதை: ஐவர் கைது

April 18, 2026

ராகமை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் வைத்து பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி, அவரைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்

thelli

தெல்லிப்பழை பொலிஸார் போதைப்பொருள் பாவித்தார்களா என முதலில் சோதியுங்கள்; பொண்ணொருவர் பகிரங்கக் குற்றச்சாட்டு

April 18, 2026

தனது மகனை தெல்லிப்பழை பொலிஸார் அவமானப்படுத்தியதாக தாயாரொருவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு, தெல்லிப்பழை பொலிஸார் போதைப்பொருள் பாவிப்பது இல்லை என்றால்

cru oil

கச்சா எண்ணெய் விலை பாரியளவில் சரிவு!

April 18, 2026

சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெயின்

karan

குற்றவாளி ‘கரன்தெனிய ராஜு’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

April 18, 2026

இந்தியாவில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கரன்தெனிய ராஜு’ என்பவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்