பளை — கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 25 ஏக்கர் காணியை இராணுவத் தேவைகளுக்காகச் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவத்தின் 4-ஆவது மின் மற்றும் இயந்திரப் பொறியியல் படைப்பிரிவு (4 SLEME) அமைப்பதற்காக இக்காணி கோரப்பட்டுள்ளது.
: பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஊரவன்னிக்கன்பற்று கிராமியப் பகுதி.
காணியின் அளவு: சுமார் 25.73 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளன.
அளவீட்டுப் பணிகள்: இக்காணிகளை அளவீடு செய்யும் பணிகள் நாளை மற்றும் மறுதினம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணி உரிமையாளர்கள் ஆவணங்களுடன் சமுகமளிக்குமாறு அறிவிப்பு
சட்ட நடவடிக்கை: காணிச் சுவீகரிப்புச் சட்டத்தின் 4-ஆம் பிரிவின் கீழ் இதற்கான நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அளவீட்டு நேரம்: முதற்கட்ட நில அளவைப் பணிகள் நாளை மற்றும் மறுதினம் காலை 9:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. இதனைத் தொடர்ந்து வரும் நாட்களிலும் அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படும்.
உரிமையாளர்களுக்கு வேண்டுகோள்: சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்கள் அல்லது உரிமை கோருபவர்கள், குறிப்பிட்ட தினத்தில் தங்களது காணி ஆவணங்கள் மற்றும் நில அளவை வரைபடங்களுடன் (Plan) நேரில் சமுகமளிக்குமாறு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் கோரியுள்ளது.
இந்த அளவீட்டுப் பணிகளின் போது உரிமையாளர்கள் உடனிருப்பது தத்தமது காணிகள் தொடர்பான விபரங்களை உறுதிப்படுத்த அவசியமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.