பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரியவுடன் நடைபெற்ற சந்திப்பில் பங்கேற்காத ஆசிரியர்களுக்கு அனுப்பிய வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
பிரதமருடனான சந்திப்பில் பங்கேற்கத் தவறிய ஆசிரியர்களிடம் அதற்கான விளக்கம் கோரி கல்வி பணிமனை கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்காலையில் அண்மையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரசன்னமாகத் தவறிய ஆசிரியர்களுக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிரதமருடனான சந்திப்பில் பங்கேற்காத ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் | Teachers Harini
தங்காலை கல்விப் பணிமனையின் பணிப்பாளரினால் விளக்கம் கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பணிப்பாளர் டபிள்யு.ஏ.எஸ்.டி கல்யாணியின் கையொபப்த்துடன் இந்த விளக்கம் கோரிய கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிரதமருடனான சந்திப்பில் பங்கேற்கத் தவறிய ஆசிரியர்கள் அதற்கான விளக்கத்தை அளிக்குமாறு கோரி குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 26ம் திகதிக்கு முன்னர் இதற்கான விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென அதிபர்கள் ஊடாக இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 15ம் திகதி தங்காலை, அம்பாந்தோட்டை உள்ளிட்ட சில இடங்களில் பிரதமர் ஆசிரியர்களுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.
எனினும் தங்காலையில் இந்த சந்திப்பிற்கு சொற்ப எண்ணிக்கையிலான ஆசிரியர்களே பிரசன்னமாகியிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமருடனான சந்திப்பிற்கு பிரசன்னமாகத் தவறிய ஆசிரியர்களிடம் அதிகாரபூர்வ விளக்கம் கோரப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.