ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் – பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது இலங்கை

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ அரசாங்க மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜயதிஸ்ஸ, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் (intergovernmental agreements) மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அந்த விஜயத்தின் போது இது குறித்த விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு எரிபொருளை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக கொழும்பிலுள்ள ஈரான் தூதுவர் விடுத்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸநலிந்த ஜயதிஸ்ஸ, அந்த அறிக்கையை மதிப்பதாகக் கூறினார். இருப்பினும், சொந்தமாக எண்ணெய் கப்பல்களை  (Tankers) கொண்டுள்ள நாடுகளே இந்தச் சூழலில் பயனடைய முடியும் என்றும்  இலங்கைக்கு தற்போது அந்த வசதி இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் மேலும் விளக்குகையில்:“ரஷ்யாவுடன் அரசாங்க மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. இதற்கு முன்னர் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. ஆனால் தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் இதைச் செய்ய முடியுமா என்று முயற்சித்து வருகிறோம். ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சரின் வருகை இப்பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் எனவும் தெரிவித்தார்.

nalinda-jayatissa_2025.01

எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

March 24, 2026

தற்போதைய இக்கட்டான சூழலில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்வதற்கு விலை சூத்திரம் பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த

ceb

மீண்டும் மின்வெட்டு

March 24, 2026

மின்சார உற்பத்திக்காக தேவையான எரிபொருள் கிடைக்கப்பெறுவதனால் இதுவரை மின்வெட்டு மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டு

rea

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற முறைமைக்கு எதிர்ப்பு; ஆசிரியர்கள் போராட்டம்

March 24, 2026

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி கடந்த 8

phil

எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் நாடு

March 24, 2026

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் மோதலைத் தொடர்ந்து, தேசிய அளவிலான எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த உலகின் முதல் நாடாக

ca

கனடாவுக்கு அனுப்புவதாக நடந்த பாரிய நிதி மோசடி

March 24, 2026

முழு குடும்பத்தையும் கனடாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஒரு கோடியே 58 லட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ்,

fi

அமெரிக்காவில் நீதிமன்றக் கட்டிடத்தில் தீ விபத்து

March 24, 2026

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணம், பிளாய்ட் கவுண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டடத்தில் திங்கள்கிழமை (23) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

vidu

விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில்

March 24, 2026

திமுக தலைமையிலான கூட்டணியில் பங்கு பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான தேர்தல் கூட்டணி

Death-2

தீயைக் கட்டுப்படுத்த முயன்ற விவசாயி உயிரிழப்பு

March 24, 2026

அம்பாந்தோட்டை, வீரவில – கங்கசிறிகம பகுதியில் தனது வயலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த முயன்ற 63 வயதுடைய விவசாயி ஒருவர்,

gold

சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பதற்றங்கள்; தங்கத்திற்கான விலை நிர்ணயத்தில் மாற்றங்கள்!

March 24, 2026

உலகப் பொருளாதாரம் ஒரு பக்கம் தள்ளாட்டத்தில் இருக்க, மறுபக்கம் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் ஒரு விடயத்தில் மட்டும் தெளிவாக

robe

மயக்க மருந்தை குளிர்சாதன இயந்திரத்தினுள் செலுத்தி கொள்ளை

March 24, 2026

திருகோணமலை, வித்தியாலய ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் இன்று (24) அதிகாலை புகுந்த திருடர்கள், வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருந்து செலுத்திப் பொருட்களைக்

wa

கடும் வறட்சி; குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

March 24, 2026

மலையகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக ஹட்டனில் பகுதியில் ஏற்பட்டுள்ள குடி நீர் பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் தீர்வு எட்டப்படுமென நுவரெலியா

Poli

இலங்கை பொலிஸார் 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட வேண்டும்!

March 24, 2026

பொதுமக்களின் பணம், தங்கம் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க சொத்துக்களைக் கொள்ளையிடுவதற்கும், திருடுவதற்கும் அல்லது பலவந்தமாகப் பறிப்பதற்கும் குற்றவாளிகள் கையாளும் உத்திகள்