தென் பசிபிக் கடலில் உள்ள தொங்கா (Tonga) அருகே செவ்வாய்க்கிழமை ரிக்டர் அளவில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பிராந்தியத்தில் உள்ள நாடுகள் சுனாமி அச்சுறுத்தல் குறித்து ஆய்வு செய்து வருகின்றன.
நியூசிலாந்தின் தேசிய அவசரக்கால மேலாண்மை நிறுவனம் (National Emergency Management Agency), இந்த நிலநடுக்கம் நியூசிலாந்தைப் பாதிக்கக்கூடிய சுனாமியை உருவாக்கியுள்ளதா என்பதை மதிப்பீடு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
“இந்த இடத்தில் சுனாமி உருவானால், அது நியூசிலாந்தை வந்தடைய குறைந்தது இரண்டு மணிநேரமாவது ஆகும்” என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.