திமுக – காங்கிரஸ் கூட்டணி கை கொடுக்குமா? காலை வாருமா காங்கிரஸ்?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் மிகவும் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னமும் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படாமல் இருக்கிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டாகப் போட்டியிட்டு வென்று கடந்த ஐந்தாண்டுகளாக ஒரே அணியாகச் செயல்பட்டு வந்த நிலையில் திடீரென மாணிக்கம் தாகூர் போன்ற சில காங்கிரஸ் தலைவர்கள், அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்று குரல் எழுப்பினர்.

இதனால், உறுதியாக இருப்பதாகக் கருதப்பட்ட திமுக கூட்டணியில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. என்றாலும், இதுபற்றித் திமுக தலைவர்கள் யாரும் பெரிதாக எதிர்வினையாற்றவில்லை.

கூட்டணி நீடிக்குமா அல்லது கழன்று விடுமா என்ற சூழலில் கடந்த டிச. 3 ஆம் தேதி தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழு திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து கூட்டணி இன்னும் வலுவாகத்தான் இருக்கின்றது என உறுதிப்படுத்தியிருந்தனர்.

இதனிடையே, ஆட்சியில் பங்கு என்பதெல்லாம் தமிழ்நாட்டுக்கு ஆகாது எனத் திட்டவட்டமாக நிகழ்ச்சியொன்றில் கூறிவிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாத காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முன்னால் செய்யும் இதுபோன்ற ‘ஸ்டண்ட்கள்’ கடும் பின்னடைவையே கொடுத்திருக்கின்றன. இந்தப் போக்கால் காங்கிரஸ் மட்டுமின்றிக் கூட்டணிக் கட்சிகளும் படுகுழியில் தள்ளப்பட்டிருக்கின்றன.

மத்தியில் ஆட்சியைப் பறிகொடுத்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில், மக்களவைத் தேர்தலிலும் இதேபோன்ற வேலைகளை காங்கிரஸ் செய்திருக்கிறது.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஒருங்கிணைந்தும் அப்போதும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏற்பட்ட தொகுதிப் பங்கீட்டு பிரச்சினையால், ‘நீ உன் வேலையைப் பார்; நான் என் வேலையைப் பார்க்கிறேன்’ எனத் தனியாக வேட்பாளர்களை அறிவித்து தனது ஸ்டைலில் போட்டியிட்டு வென்றார் முதல்வர் மமதா. மேற்கு வங்கத்தில் திரிணமூல் 29 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் ஒரேயொரு இடத்தில் மட்டுமே ஆறுதல் வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை காங்கிரஸ் – திமுக இடையிலான தேர்தல் கூட்டணி நீண்ட காலமாக நீடித்து வருகிறது. 2004 ஆம் ஆண்டில் துவங்கி 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை காங்கிரஸும் திமுக-வும் ஒன்றாகவே இணைந்து போட்டியிட்டன.

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு, அத்தனை இடங்களிலும் தோற்றது.

பிறகு, 2016 ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து இரு கட்சிகளும் இணைந்தே தேர்தல்களைச் சந்தித்து வருகின்றன. இதுவரை கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, பொதுக்கூட்டம், இளைஞர் அணி மாநாடு, மகளிர் மாநாடு என எதையாவது கூட்டி பார்த்திருக்கிறோமா? தேர்தல் வந்தால் ஏதாவது ஒரு கூட்டணியில் பல்வேறு இழுபறிக்குப் பின்னர் தேர்தலை வேண்டா வெறுப்பாக சந்திப்பதைத்தான் காண முடிகிறது.

அதேவேளையில், ‘இறுமாப்புடன் இருநூறு வெல்வோம்’ எனத் தொடர்ந்து கூறிவரும் முதல்வர் ஸ்டாலின், திமுகவின் தனிப் பெரும்பான்மையை நிரூபிக்கவும், கூட்டணிக் கட்சிகளுக்கு இரட்டை இலக்கத்தில் அதிக இடங்களை ஒதுக்கிவிட்டால் பெரும்பான்மைக்கு சிக்கல் வந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் இழுபறி தொடர்ந்து வருகிறது.

கடந்த 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் 173 இடங்களில் போட்டியிட்டு 133 இடங்களில் மட்டும் திமுக வென்றது. 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 இடங்களை வென்றது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைந்த பின்னரும் அதிமுகவுக்கான தனி செல்வாக்கு தொடர்ந்தாலும் பாஜகவுக்கு எதிரான மனநிலை, அதிமுகவுக்கான பின்னடைவாகக் கூறப்படுகிறது. அதிமுக – பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிரான சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறக் கூடிய வலுவான கூட்டணியாக திமுக – காங்கிரஸ் கூட்டணி கருதப்படுகிறது.

sta

தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழக மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்தது பாஜக – மு.க. ஸ்டாலின்

April 18, 2026

“தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாட்டு மக்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்த பாஜகவுக்கும், அவர்களுடைய ஏவல் அடிமைகளான அதிமுக-வுக்கும்

pi

பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்க மாட்டார்கள்

April 18, 2026

“தமிழக கலாசாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,”

po

முன்னாள் எம்.பி சம்பத் அத்துகோரள மீது தாக்குதல்

April 18, 2026

காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள, பிடிகல – பம்பரவான

abu

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் தீவிர விசாரணை

April 18, 2026

இலங்கையின் பல பகுதிகளில் பெண்கள் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாகப்

ka

கரந்தெனிய ராஜு” 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை

April 18, 2026

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட “கரந்தெனிய ராஜு” எனப்படும் பாதாள உலகக் குழு சந்தேக நபர், மேலதிக

v

திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்புவது உறுதி – விஜய்

April 18, 2026

அளவில்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, அளவில்லாமல் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி திமுகவை இந்தத் தேர்தலில்

tru

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும்

ele dea

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

April 18, 2026

ஹாலி-எல, உடுவர பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வயல் நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில்

hurm

ஹோமுஸ் நீரிணையை ஈரான் இராணுவம் மீண்டும் மூடியது

April 18, 2026

ஈரான் தனது இராணுவத்தின் மூலம் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு அரசு

lal

10 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோருகிறார் அமைச்சர் லால் காந்தா

April 18, 2026

தனது 2025-ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தலைத் தவறாகச் சித்தரித்து, அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாகக்

bud

வெள்ளை மாளிகையில் உலக அமைதிக்காக பௌத்த மத வழிபாட்டு நிகழ்வு

April 18, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், உலக அமைதி மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காக ஆசி வேண்டி, கடந்த

sc

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம்

April 18, 2026

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) எச்சரிக்கை