தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரபாகரனை பின்பற்றுவார்களாயின் மாகாண சபை தேர்தல் வேண்டாம் என்றே கூறவேண்டும் – முபாற‌க் முப்தி

மாகாண சபை முறைமையை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாண சபை தேர்தல் வேண்டும் என ஒப்பாரி வைப்பதனால் பிரபாகரனை ஏற்க மறுக்கிறார்கள் என ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌சின் ஊட‌க‌ பேச்சாள‌ர் முபாற‌க் முப்தி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌சின் 12வ‌து பேச்சாள‌ர் மாநாடு நேற்று(17.02.2026) சாய்ந்த‌ம‌ருது க‌லாசார‌ ம‌ண்ட‌ப‌த்தில் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2017 ஆண்டு மாகாண சபை தேர்தல் நடைபெற கூடாது என்பது தொடர்பில் சதி செய்யப்பட்டது. குறிப்பிட்ட சிலரின் சதி திட்டங்களின் பிரதி பலனை தான் இந் நாடு தற்போது அனுபவித்துக் கொண்டு இருக்கின்றது. அப்போது சிலர் மாகாண சபையை ஒழிப்பதற்கான சதி என்று கூறினார்கள்.

தற்போது கூட அந்த மாகாண சபை தேர்தலை நடத்துவதற்குரிய சட்டப்பிரச்சினை இந்த அரசாங்கத்திற்கு இருப்பதாகவே உணர்கின்றோம். மாகாண திருத்த சட்டத்தை இரவோடு இரவாக கொண்டு வந்த ரணில் மற்றும் ஹக்கீமும் றிசாட்டும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

அத்துடன், பகிரங்கமாகவே சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அண்மையில் கூட நிசாம் காரியப்பரும் மாகாண சபையை ஒழிப்பதற்கு எமது கட்சியும் ஒரு காரணம் தான் என ஏற்றுக்கொண்டிருந்தார். இவற்றை பார்க்கும் பொழுது வேண்டுமென்றே இந்த தேர்தலை நடத்த விடவில்லை என்பது எண்ணத் தோன்றுகின்றது.

இதை விட ஆட்சியில் இருக்கும் சட்டத்தரணிகளுக்கு கூட இந்த சட்டங்கள் தெரியவில்லையா? என்பதை நாங்கள் கேள்வியாக கேட்க விரும்புகின்றோம். எங்களை பொறுத்தவரை மாகாண சபை தேர்தல் சரியான முறைப்படி நடத்தப்பட வேண்டும்.

அத்துடன், மாகாண சபை முறைமையை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் தான் இந்தியப்படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மோதல்கள் ஏற்பட்டிருந்தன.

ஆனால் விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இன்று ஒப்பாரி வைக்கின்றது.

இது அவர்களது முரண்பாடான செயற்பாடாகவே இருக்கின்றது. உண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரபாகரனை பின்பற்றுவார்களாயின் மாகாண சபை தேர்தல் வேண்டாம் என்றே கூறவேண்டும்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாண சபை தேர்தல் வேண்டும் என ஒப்பாரி வைப்பதனால் பிரபாகரனை ஏற்க மறுக்கின்றார்கள். சிங்கள அரசாங்கத்தின் தேர்தல் முறையினை ஏற்றுக்கொள்கின்றார்கள்.

அரசாங்கத்திற்கு சில அழுத்தங்களை வேண்டும் என கொடுத்து தமிழ் மக்களை ஏமாற்ற முயல்கின்றார்கள் என்பது தான் உண்மையாகும். எனவே, தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌சின் 12வ‌து பேராள‌ர் மாநாடு க‌ட்சியின் த‌லைவ‌ர் முஸ்ன‌த் முபாற‌க் த‌லைமையில் ந‌டை பெற்ற‌ இந்த மாநாட்டில் க‌ட்சியின் நிர்வாக‌ ச‌பை உறுப்பின‌ர்க‌ள் உட்ப‌ட‌ ப‌ல‌ரும் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

பாகிஸ்தானியர்களுக்கான விசா கட்டுப்பாட்டை தளர்த்த பணிப்பு

பாகிஸ்தானின் மத்திய உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவருமான மோசின் நக்வி உடனான சந்திப்பைத் தொடர்ந்து, பாகிஸ்தானை அனைத்து “எதிர்மறை” விசா பட்டியல்களிலிருந்தும் உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரஜைகளுக்கான பயண வசதிகளை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.

இச்சந்திப்பின் போது, பாகிஸ்தானியர்கள் இலங்கை விசாவைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிக்கல்களை நக்வி சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பாகிஸ்தானை கட்டுப்பாடுகள் உள்ள விசா பிரிவுகளிலிருந்து நீக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த முடிவு சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் ஏனைய பயணிகளுக்குப் பெரும் நன்மையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி மற்றும் வெளிநாட்டு பாகிஸ்தானியர்களுக்கான அமைச்சர் சௌத்ரி சாலிக் ஹுசைன் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சவாலான காலப்பகுதிகளில் இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கிய ஆதரவை ஜனாதிபதி இதன்போது நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

மேலும், இலங்கைப் பிரதமர் விரைவில் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்வார் என்றும் அவர் அறிவித்தார்.

Untitled

யாழில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தைக் குழப்ப முயற்சி… – சிவயோகநாதன்

August 28, 2026

ர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக

default (51)

இதுபோன்ற தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை; ஸ்கார்பரோ சென்டர்-டான் வேலி ஈஸ்ட் தொகுதி மக்களுக்குச் சேவையாற்றும் எனது பணியிலிருந்து இது என்னை பின்வாங்கச் செய்யாது.”-சல்மா ஜாஹித்

August 28, 2026

நேற்றிரவு தனது இல்லத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கனடாவின் ஸ்கார்பரோ சென்டர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்

bea

அழகு நிலையத்தில் 7 கோடி ரூபா ஹெரோயின்: தம்பதியினர் கைது!

August 28, 2026

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய்

mark carney55

லிபரல் கட்சி எம்.பி.யைக் குறிவைத்து நடத்தப்பட்ட தீவைப்புச் சதி ஒரு ‘கோழைத்தனமான’ அச்சுறுத்தல் செயல்: கார்னி கண்டனம்

August 28, 2026

ஒட்டாவா — தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் திட்டமிட்ட தீவைப்புச் சதி நடந்திருப்பதாகக் கூறியுள்ள கனடியப் பிரதமர்

Dead

மரத்தில் இருந்து வீழ்ந்தவர் உயிரிழப்பு

August 28, 2026

நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள கிர்க்ஸ்வால் தோட்டதில் மரம் ஒன்றில் இருந்து தவறி வீழ்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். சுமார்

nap

நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 389 ஆக உயர்வு

August 28, 2026

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில மணி நேரங்களுக்கு

default (50)

லிபரல் கட்சி எம்.பி.யின் வீட்டில் கார்கள் கொளுத்தப்பட்ட சம்பவம்: தீவைப்புச் சதியா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை

August 28, 2026

ஸ்கார்பரோ சென்டர் தொகுதி எம்.பி. சல்மா ஜாஹித்தின் காரும், அருகிலிருந்த வாகனமும் தீக்கிரையாக்கப்பட்டதை அவரது அலுவலகம் உறுதி செய்துள்ளது. ஸ்கார்பரோ

HPgenfsb0AEZu1o

“கடந்த 6 ஆண்டுகளில் தி.மு.க.வில் நடந்ததைச் சொல்லட்டுமா?” – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

August 27, 2026

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, தி.மு.க. எம்.எல்.ஏ ராஜாவின்

1200-675-27496391-thumbnail-16x9-cmvijay

சட்டப்பேரவை மரபை மாற்றிய முதலமைச்சர் விஜய்: சக அமைச்சர்களுடன் அமர்ந்து நிகழ்வுகளைக் கவனித்த சுவாரஸ்யம்!

August 27, 2026

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் தனக்கென ஒதுக்கப்பட்ட பிரத்யேக இருக்கையில் அமராமல், சக அமைச்சர்களுடன்

1200-675-27498226-thumbnail-16x9-pinhole

உலகின் முதல் நுண்துளை கருவிழி சீரமைப்பு மையம்: சென்னையில் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

August 27, 2026

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில், உலகின் முதல் ‘பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி’ (Pinhole Pupilloplasty –

photo-collage.png

செம்மணி மனிதப் புதைகுழி; ஐ.நா விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – அவுஸ்திரேலிய செனெட் சபை உறுப்பினர்

August 27, 2026

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து சுயாதீன விசாரணைகள் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதை இலக்காகக்கொண்டு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள்

rum

ஈட்டி எறிதல் தரவரிசையில் ருமேஷ் தரங்கவுக்கு மீண்டும் முதலிடம்

August 27, 2026

பொதுநலவாய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்க வென்ற இலங்கையின் ருமேஷ் தரங்க, உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைக்