2026 ஜனவரியில் மக்கள் இயக்கம் உதயம் – சுமந்திரன்

மாகாணசபைத்தேர்தலை நடாத்துவது குறித்து கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி திருப்திகரமான பதில் எதனையும் வழங்காமை தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அத்தேர்தலை உடன் நடாத்துவதற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலான மக்கள் இயக்க நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகுமென அறிவித்துள்ளார்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்துக் கலந்துரையாடுவதற்கான சந்திப்புக்கு நேரம் ஒதுக்கித்தருமாறு இலங்கைத் தமிழரசுக்கட்சியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகக் கடந்த வாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது மாகாணசபைத்தேர்தல்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக நடாத்தப்படாமல் இருக்கும் உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை ஒரு வருடத்துக்குள் நடாத்துவதாகத் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருப்பதை மேற்கோள்காட்டி, அதனை உடன் நிறைவேற்றுமாறு சுமந்திரனால் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது.

இருப்பினும் மாகாணசபைத்தேர்தலை எந்த முறைமையில் நடாத்துவது என்பதில் நிலவும் குழப்பம், விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையில் தேர்தலை நடாத்துவதாக இருப்பினும் விருப்பு வாக்கு முறைமையுடன் தாம் உடன்படாமை என்பன உள்ளடங்கலாக அதனுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்து ஜனாதிபதி கருத்துரைத்தார். நிறைவாக விரைவில் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

எனினும் இச்சந்திப்பின்போது மாகாணசபைத்தேர்தல் தொடர்பில் பேசப்பட்ட விடயங்களில் ஜனாதிபதி பெருமளவுக்கு அக்கறை காண்பிக்கவில்லை எனவும், அதுபற்றி திருப்தியளிக்கக்கூடிய சாதகமான பதில் எதனையும் வழங்கவில்லை எனவுமே சந்திப்பில் கலந்துகொண்ட தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் மாகாணசபைத்தேர்தல் விடயத்தில் ஜனாதிபதியின் அக்கறையீனம், மாகாணசபைத்தேர்தலை நடாத்துவதை மேலும் தாமதிப்பதற்கு அரசாங்கம் கூறிவரும் போலியான காரணங்கள் என்பன தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்திய சுமந்திரன், மாகாணசபைத்தேர்தலை உடன் நடாத்துவதற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலான மக்கள் இயக்க நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என அறிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு, தெற்கு உள்ளடங்கலாக நாட்டின் சகல பாகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், சிவில் சமூகக்குழுக்களை ஒன்றிணைந்து மாகாணசபைத்தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் மக்கள் இயக்கமொன்றை உருவாக்கவிருப்பதாக சுமந்திரன் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், அந்நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

7

மின் வாரியத்தில் 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்!

June 24, 2026

சென்னை: கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், மின்சார வாரியத்திற்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 401 பேருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய்

6

பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய் சிபிஐ(எம்)-க்கு எப்போதும் இல்லை! – போஸ்டரால் பரபரப்பு

June 24, 2026

சென்னை: தமிழக அரசியல் களத்தில் தவெக அரசுக்கான ஆதரவு விவகாரம் பெரிய பிளவை உருவாக்கியுள்ளது. தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்ததற்காக

5

தைலாபுரத்தில் இன்று ராமதாஸ்-அன்புமணி சந்திப்பு: கட்டியணைத்து அழுத தந்தை ராமதாஸ்!

June 24, 2026

திண்டிவனம்: பாமக-வின் பிளவு மற்றும் ராமதாஸ் – அன்புமணி இடையேயான கருத்து வேறுபாடுகளால் கடந்த சில மாதங்களாக அக்கட்சியின் செயல்பாடுகள்

arrestt

36 கிலோ கிராம்  (Hashish) -கனடா பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

June 24, 2026

சுமார் 35 கிலோ கிராமிற்கும் அதிக எடையுடைய கஞ்சா (Hashish) போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 18 வயதுடைய

730732303_1036117958871627_4138093801309942397_n

பொலிசாருக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்!!

June 24, 2026

கடந்த 22. 06.2026 அன்றைய தினம் கிளிநொச்சி பொலிஸ் நிலைய முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக

images (11)

கேப்பாபுலவு பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி தொடர் போராட்டத்தில் குதித்த மக்கள் ; ஆளுநரிடம் அவசர கோரிக்கை

June 24, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள் இராணுவ படைத்தலைமையகத்தின் முன்பாக இன்று (24)

parliment

16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய இலங்கை நடவடிக்கை

June 24, 2026

சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களை (Social media platforms) அணுகுவதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தனிநபர் சட்டமூலம் (Private Member’s

4

சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல! – ஜெயக்குமார் ஆவேசப் பதிவு!

June 24, 2026

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் திமுக-வை நையாண்டி செய்து பேசிய குட்டிக்கதை, எதிர்க்கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

3

பட்டியலின மக்களுக்கு மறுக்கப்பட்ட ஆலயப் பிரவேசம்; அதிரடி காட்டிய தமிழக அரசு!

June 24, 2026

கரூர் மாவட்டம்: கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம், புஞ்சை கடம்பன்குறிச்சி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் அருள்மிகு

sajith 2026

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்தி, மாகாண சபைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

June 24, 2026

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நாட்டின் உச்சக்கட்ட சட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதால் அது பாதுகாக்கப்பட வேண்டும். எனினும், அதனைப்

2

இன்னும் நடிகராகவே செயல்படுகிறார் முதலமைச்சர் விஜய்! – சிவசங்கர் அதிரடிப் பேட்டி!

June 24, 2026

சென்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் திமுக மீது முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர், அண்ணா

729115779_1015905364372317_7450818906267864328_n

வடக்கு மாகாணத்தில் ‘வெளிப்படுத்தல் உறுதி’ ஊடாக இடம்பெறும் மிகப் பெரிய காணி மோசடிகள் -பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன்

June 24, 2026

வடக்கு மாகாணத்தில் ‘வெளிப்படுத்தல் உறுதி’ ஊடாக இடம்பெறும் மிகப் பெரிய காணி மோசடிகளைத் தடுக்கும் வகையில், நொத்தாரிசு சட்டத்தில் மேற்கொள்ளப்பட