சகல சமூகங்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை கனடியத் தமிழர் பேரவை வலியுறுத்தல்

சட்டவிரோதமாக காணிகளைக் கையகப்படுத்துவதையும், எல்லைப்பகுதிகளை உரிமைகோருவதற்கு மத அடையாளங்களைப் பயன்படுத்துவதையும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனக் கண்டனம் வெளியிட்டுள்ள கனடியத் தமிழர் பேரவை, இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை உடன் முடிவுக்குக் கொண்டுவந்து சகல சமூகங்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் தொடர்பில் கனடியத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அண்மையில் பௌத்தம் எனும் போர்வையில் திருகோணமலையில் பதிவாகியிருக்கும் குண்டர் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஒடுக்குமுறை மற்றும் வலுகட்டாயத் திணிப்புடன்கூடிய இந்நடவடிக்கை அப்பிராந்தியத்தில் பல தலைமுறைகளாக வாழும் தமிழ் மற்றும முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் கடும் அச்சத்தையும், பதற்றத்தையும் தோற்றுவித்துள்ளது.

அப்பகுதி மக்களின் வலுவான எதிர்ப்புக்கு மத்தியிலும் சட்டவிரோத நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பதற்கு வாய்ப்பேற்படுத்தி உதவும் வகையிலான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மிகுந்த கரிசனை கொள்கின்றோம். தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்சத்தை விதைக்கக்கூடிய இவ்வாறான செயற்பாடுகள், இலங்கையில் சிறுபான்மையின மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடாத்தப்பட்டுவதை மீளுறுதிப்படுத்துகின்றது.

சட்டவிரோத நிர்மாணப்பணிகளை ஆதரித்தல், சட்டவிரோதமாக காணிகளைக் கையகப்படுத்தல் மற்றும் எல்லைப்பகுதிகளை உரிமைகோருவதற்கு மத அடையாளங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அவ்வாறான நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பதுடன், இன ரீதியான முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தி, அர்த்தமுள்ள நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான நம்பிக்கையில் பின்னடைவை ஏற்படுத்துகின்றன.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட விகாரைக்கு அருகாமையில் உள்ள காணியில் சட்டவிரோத நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பதை உடன் நிறுத்துமாறு அவ்விகாரையின் விகாராதிபதிக்கு சுற்றாடல் அமைச்சு கடந்த ஒக்டோபர் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறிருந்தும் சுற்றாடல் அமைச்சின் அறிவுறுத்தலுக்குப் புறம்பாக நிர்மாணப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதுடன், புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கான ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில் தமது அறிவுறுத்தல்களை உரியவாறு அமுல்படுத்துமாறும், சகல சமூகங்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்துமாறும், இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அதுமாத்திரமன்றி இவ்விவகாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், திருகோணமலை உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் வாழும் சிறுபான்மையின மக்களின் உரிமைகள், கௌரவம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சர்வதேச சமூகத்திடம் கேட்டுக்கொள்கின்றோம் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1200-675-27270261-thumbnail-16x9-ramesh

“பெற்ற மகனையே முறையாக வளர்க்காத மு.க. ஸ்டாலின், கட்சியை ஒழுங்காக நடத்துவார் என எதிர்பார்க்க முடியாது!” – அமைச்சர் ரமேஷ் சாடல்

September 14, 2026

திருச்சி: ஆர்ப்பாட்டங்களில் திமுகவினர் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசுவதே அக்கட்சியின் டி.என்.ஏ (DNA) என்றும், முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ மு.க. ஸ்டாலின்

1200-675-27622338-thumbnail-16x9-ministersrinath

“அஜித் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!” – அமைச்சர் ஸ்ரீநாத் நெகிழ்ச்சி

September 14, 2026

தூத்துக்குடி: லண்டனில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித் குமார் சந்திப்பு குறித்தும், சில்வர்ஸ்டோன் கார் பந்தயத் தொடக்க விழா

1200-675-25470070-thumbnail-16x9-admk-aspera

“இந்தியாவிற்கே வழிகாட்டியாக முதலமைச்சர் விஜய் திகழ்கிறார்!” – அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்

September 14, 2026

வேலூர்: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு நேர்மையான முறையில் செயல்பட்டு வருவதாகவும், தொலைநோக்குச் சிந்தனையுடன் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் அவர்

tvk-bus-2

சேலத்தில் தவெக கொடி நிறத்தில் புதிய அரசுப் பேருந்துகள்: போக்குவரத்துத்துறையின் நடவடிக்கையால் சர்ச்சை!

September 14, 2026

சேலம்: சேலம் மாவட்டத்தில் மக்கள் பயன்பாட்டிற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய அரசுப் பேருந்துகளுக்கு ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடி

HSJq4ica8AAcl1E

அஜித் – விஜய் சந்திப்பு: தமிழ்நாட்டில் விரைவில் உலகத்தரமான ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

September 14, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித் குமார் இங்கிலாந்தில் நேரில் சந்தித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் விரைவில் உலகத்தரமான ‘மோட்டார்

27628648_anand

“தவெகவில் இணைய ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை!” – மதுராந்தகம் இடைத்தேர்தல் வேட்பாளர் மரகதம் குமரவேல் விளக்கம்

September 14, 2026

மதுராந்தகம்: தவெக தலைமையிலான ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ சார்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலின்

vinayagar (1)

ரூ. 25 லட்ச மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட காஞ்சி ஏலேல சிங்க விநாயகர்!

September 14, 2026

காஞ்சிபுரம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய

elmore

செம்மணி மனித புதைகுழி அகழ்வை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் – நம்பகதன்மை மிக்க விசாரணை அவசியம் -பிரிட்டன்

September 14, 2026

செம்மணி மனித புதைகுழிகள் குறித்து சர்வதேசதராதரத்திலான நம்பகதன்மை மிக்க வெளிப்படையான விசாரணைகள் இடம்பெறவேண்டும் என இலங்கையிடம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதாக பிரிட்டன்

Shiranthi-Rajapaksa 1

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்காக பெறப்பட்ட 10 மில்லியன் ரூபா நிதி துஷ்பிரயோகம்: சிறாந்தி ராஜபக்ஷவிடம் எஃப்பிஐடி விசாரணை நடத்த தீர்மானம்

September 14, 2026

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சி.டீ ஸ்கேனர் (CT scanner) இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதாகக் கூறி, தேசிய

Namal-750x422

விமானங்களை கொள்வனவு செய்வதில் நிதி மோசடி – நாமல் சந்தேகநபராக பெயரிடப்பட்டார்.

September 14, 2026

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்வதில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பில் பொதுஜனபெரமுன

202606093819488

“எந்தத் துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்!” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திட்டவட்ட விளக்கம்

September 14, 2026

திருநெல்வேலி: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினருக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், துண்டுச் சீட்டு மூலம் வந்த உத்தரவுக்கே சபாநாயகர் அடிபணிந்தார் என்ற

srilanka un peace keeping

ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்புவதற்கு முன்னர் அவர்களின் கடந்காலங்கள் குறித்து நன்கு ஆராய்ந்தோம் – இராணுவ பேச்சாளர்

September 14, 2026

ஹைட்டி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் இயங்கும் வன்முறைக் கும்பல் தடுப்புப் படையில் (GSF) இலங்கை அமைதி காக்கும்