மத்திய வங்கியின் இலக்குகள் அடுத்த வருடத்துக்குள் அடையப்படும்!

பணவீக்க மற்றும் நிதியியல் ஸ்திரத்தன்மைசார் இலக்குகள் அடுத்த வருடத்துக்குள் அடையப்படும் எனவும், தற்போது பதிவாகியுள்ள மற்றும் எதிர்வுகூறப்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி வீதமானது ஆரோக்கியமானதும், நிலையானதுமான மட்டத்தில் காணப்படுவதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் மேற்கொள்ளப்படும் நிதியியல் முறைமை மீளாய்வு தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கிலான செய்தியாளர் சந்திப்பொன்று வியாழக்கிழமை (23) கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது பொருளாதார வளர்ச்சி, பணவீக்க நிலைவரம் மற்றும் எதிர்கால எதிர்வுகூறல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி தற்போது அசாதாரண மட்டத்திலான பணச்சுருக்க நிலைமை பதிவாகியிருப்பதாகவும், இருப்பினும் மத்திய வங்கியினால் இலக்கிடப்பட்டுள்ளவாறு அடுத்த ஆண்டு பணவீக்கத்தை 5 சதவீத மட்டத்துக்குக் கொண்டுவரமுடியும் என எதிர்பார்ப்பதாகவும், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது நிதியியல் ஸ்திரத்தன்மை குறிப்பிடத்தக்களவினால் முன்னேற்றமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று ‘பொருளாதார மீட்சியைப் பொறுத்தமட்டில், பொருளாதாரமானது தொடர்ச்சியாக 5 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்துவருகின்றது. 2022 – 2023 இல் முகங்கொடுக்கநேர்ந்த தீவிர நெருக்கடியின் பின்னர், இப்போது பதிவாகியிருக்கும் பொருளாதார வளர்ச்சியானது மிகவும் ஆரோக்கியமான மட்டத்தில் இருப்பதாகவே நான் கருதுகின்றேன்’ எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு முதன்நிலை மீதி மற்றும் வருமான இலக்குகள் உள்ளடங்கலாக முக்கிய நிதியியல் இலக்குகளைத் தாண்டும் நிலையில் இலங்கை இருப்பதாகவும், இது நாட்டின் கடன் ஸ்திரத்தன்மையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் 2025 இல் வாகன இறக்குமதிக்காக இலங்கையர்கள் சுமார் 1.5 பில்லியன் டொலர்களை செலவிடுவர் எனத் தெரிவித்த ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இது முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் உயர்வானதாகும் என்றார்.

gajen

திருமலை விவகாரம்: உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

November 17, 2025

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை என

chan

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் சஜித் தலையிட்டால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

November 17, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும்

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்

kon

சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி

November 17, 2025

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய

she

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

November 17, 2025

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி

ukra

 உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு

November 17, 2025

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன்

sau

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

November 17, 2025

சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

kodda

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்

November 17, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (17.11.2025) காலை

pu

திருமலையில் மீண்டும் பதற்றம்; பொலிஸ் பாதுகாப்போடு அதே புத்தர் சிலை

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே

nama

மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ

November 17, 2025

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம்