பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், பாராளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டி, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று பாராளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பினார்.
ஸ்ரீதரன் ஊழல் மற்றும் நலன் முரண்பாட்டுடன் செயல்படுவதாக தசநாயக்க குற்றம் சாட்டினார். ஸ்ரீதரன் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் மீதான விசாரணையைத் தடுக்க முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தசநாயக்கவின் கூற்றுப்படி, ஸ்ரீதரன் தான் உறுப்பினராக உள்ள அரசியலமைப்பு சபைக்கு முறைப்பாடு குறித்து தெரிவிக்கத் தவறிவிட்டார்.
ஸ்ரீதரனுக்கு எதிராக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பது அரசியலமைப்பு சபையின் பொறுப்பாகும்.
அரசியலமைப்பு சபைக்குள் எதிர்க்கட்சி ஒருமித்த கருத்தை சீர்குலைப்பதன் மூலம் ஸ்ரீதரன் பாராளுமன்ற சிறப்புரிமையையும் நடத்தை விதிகளையும் மீறியதாக குற்றம் சாட்டி, எதிர்க்கட்சி சார்பாக தசநாயக்க ஒரு முறையான முறைப்பாட்டைத் தாக்கல் செய்தார்.