9 மாவட்டங்களில் நன்னீர் மீன்பிடிப் படகுகளின் திருத்தப் பணிகள் நிறைவு!

திட்வா புயலால் நாடு முழுவதிலும் உள்ள மீனவ சமூகத்தின் மீன்பிடிக் கலன்கள் மற்றும் உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆறு (06) மாதங்களுக்குள் முழுமையாக வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்காக கடற்றொழில் அமைச்சு துரித வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. அமைச்சின் கீழ் இயங்கும் சீ-நோர் (Cey-Nor) மன்றம் மற்றும் நோர்த் சீ (North Sea) நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

அழிவடைந்த மீன்பிடிப் படகுகளைத் திருத்தியமைத்தல் மற்றும் புதிதாக உற்பத்தி செய்யும் பொறுப்பு சீ-நோர் நிறுவனத்திற்கும், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை வழங்கும் பொறுப்பு நோர்த் சீ நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த இரு நிறுவனங்களின் தலைவரான திரு. அஜித எதிரிசிங்க தெரிவித்தார். கடற்றொழில் திணைக்களம் மற்றும் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA) ஆகியவற்றுடன் இணைந்து, கடல் மற்றும் நன்னீர் மீன்பிடி இறங்குதுறைகளை உள்ளடக்கியதாக, முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த படகுகள் தொடர்பான சரியான மதிப்பீடு ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முற்றாக அழிவடைந்த 19 1/2 அடி படகுகள் மற்றும் தோணிகளைப் புதிதாக உற்பத்தி செய்யும் பணிகள், கொழும்பு முகத்துவாரம் மற்றும் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட யாழ்ப்பாணம் காரைநகர் ஆகிய படகு கட்டும் தளங்களில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் துரித உற்பத்திச் செயற்பாட்டிற்காக, பைபர் கிளாஸ் (Fiberglass) தொழில்நுட்பத்தில் போதிய அனுபவம் வாய்ந்த, ஓய்வுபெற்ற கடற்படை மற்றும் முப்படை அதிகாரிகளின் சேவையும் தற்காலிக அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே நூற்றுக்கணக்கான புதிய தோணிகள் மற்றும் பெருமளவிலான படகுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

விசேடமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்நாட்டு நீர்த்தேக்கங்களை அண்டிய நன்னீர் மீன்பிடித் தொழிலைச் சேர்ந்த, பகுதியளவில் சேதமடைந்த பெருமளவிலான தோணிகள், 9 மாவட்டங்களை உள்ளடக்கியதாகத் திருத்தியமைக்கப்பட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

அத்தரவுகளின்படி;

* கிளிநொச்சி மாவட்டத்தில் 55 தோணிகள்

* முல்லைத்தீவு மாவட்டத்தில் 36 தோணிகள்

* அனுராதபுரம் மாவட்டத்தில் 29 தோணிகள்

* அம்பாறை மாவட்டத்தில் 26 தோணிகள்

* மன்னார் மாவட்டத்தில் 16 தோணிகள்

* பொலன்னறுவை மாவட்டத்தில் 15 தோணிகள்

* திருகோணமலை மாவட்டத்தில் 10 தோணிகள்

* வவுனியா மாவட்டத்தில் 05 தோணிகள்

* மட்டக்களப்பு மாவட்டத்தில் 47 தோணிகள்

என்றடிப்படையில் வெற்றிகரமாகத் திருத்தியமைக்கப்பட்டு மீனவ மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக, குருநகர் மற்றும் சிலாபம் போன்ற பிரதேசங்களில் விசேட முகாம்கள் அமைக்கப்பட்டு, ஏனைய படகுகளைத் திருத்தியமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை 6 மாதங்களுக்குள் முழுமையாக வழமை நிலைக்குக் கொண்டு வந்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதே தமது நிறுவனங்களின் பிரதான இலட்சியம் எனத் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.

sss

நாவிதன்வெளியில் விசேட தேவையுடையவருக்கு வாழ்வாதார உதவி

March 11, 2026

நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் கு. புவனரூபனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், விசேட தேவையுடைய ஒருவருக்கு கோழிக்கூடு மற்றும்

ku

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

March 11, 2026

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் சார்பாக திருகோணமலை வலய முன்பள்ளி ஆசிரியர்கள் புதன்கிழமை (11)

f

யாழ்.கொடிகாமத்தில் பேருந்துக்கு தீ வைப்பு

March 11, 2026

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இன்று புதன்கிழமை (11) அதிகாலை பேருந்து ஒன்றிற்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து

133

போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபரின் பணம் மோசடி?

March 11, 2026

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் வங்கி அட்டையை (ATM Card) திருடி, அதிலிருந்து

lep

சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

March 11, 2026

இலங்கையில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் (Leptospirosis) சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், கிட்டத்தட்ட 300 மரணங்கள்

death

இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி; மரத்தன் மாணவன் விழுந்து பலி

March 11, 2026

புத்தல துட்டுகெமுனு தேசிய பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியின் மரத்தன் ஓட்டத்திற்காக ஏனைய மாணவர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர்

i

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிப்பு

March 11, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்திலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மற்றும் ஏனைய இலக்குகள் மீது ஈரான் புதிய தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

did

9 மாவட்டங்களில் நன்னீர் மீன்பிடிப் படகுகளின் திருத்தப் பணிகள் நிறைவு!

March 11, 2026

திட்வா புயலால் நாடு முழுவதிலும் உள்ள மீனவ சமூகத்தின் மீன்பிடிக் கலன்கள் மற்றும் உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆறு (06)

CEB

12,000 இற்கும் அதிகமான மின் தடைகள்!

March 11, 2026

கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நேற்று (10) பிற்பகல் மற்றும் இரவு

cru

கச்சா எண்ணெய் விலை சரிவு

March 11, 2026

உலகச் சந்தையில் மிக வேகமாக அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலையானது தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

he

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

March 11, 2026

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றும், அது “வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை தீவிரப்படுத்தும்” என்றும் ஐக்கிய

is

இலங்கைத் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

March 11, 2026

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள், சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும்போது அறிமுகமில்லாத செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கைத்