டெங்குவைக் கட்டுப்படுத்த புதிய சமூக வலுவூட்டல்

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காகச் சமூகப் பங்களிப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில் புதிய சமூக வலுவூட்டல் முன்னோடித் திட்டமொன்றை இன்று (21) முதல் நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. சமூக வலுவூட்டலுக்காக மாற்றத்தை ஏற்படுத்தத் தொடர்பாடல் கோட்பாடுகளைப் பயன்படுத்திச் செயல்படுத்தப்படும் இந்த முன்னோடித் திட்டம், கொழும்பு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படவுள்ளது. டெங்கு ஒழிப்புத் திட்டங்களை மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு மக்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான புதிய வழிகளைக் […]

வடக்கு, கிழக்கு காணிகளை விரைவில் விடுவிப்பது குறித்து விசேட கலந்துரையாடல்

கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கினார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகள் ஆகியவற்றை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விடுவிப்பதை துரிதப்படுத்துவது தொடர்பாக […]

தந்தை செல்வாவின் சிரார்த்த தின நிகழ்வு குறித்து கலந்துரையாடல்!

தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரனுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின்போது, மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் தந்தை செல்வா ஆகியோருக்கிடையிலான நீண்டகால நட்புறவு நினைவுகூரப்பட்டது. அத்துடன், இலங்கை இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமை மற்றும் வாக்குரிமையைப் பறிக்கும் சட்டங்களுக்கு எதிராக தந்தை செல்வா, சௌமியமூர்த்தி தொண்டமானுடன் இணைந்து பாராளுமன்றில் எதிர்த்து வாக்களித்தமை உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த […]

சட்டவிரோத இஞ்சி, ஏலக்காய் மற்றும் பூச்சிக்கொல்லி போத்தல்கள் பறிமுதல்

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட உலர் இஞ்சி, ஏலக்காய் மற்றும் பூச்சிக்கொல்லி திரவம் அடங்கிய போத்தல்கள் அடங்கிய பெருந்தொகைப் பொருட்கள் தலவில கடற்கரையில் வைத்து கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரால் கற்பிட்டி, தலவில கடற்கரைப் பகுதியில் இன்று (20) முற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான 16 பொதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பொதிகளுக்குள் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 591 கிலோகிராம் உலர் […]

தரமற்ற தலைக்கவச விற்பனைக்கு அபராதம்

தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்தியிருந்த கொழும்புப் பகுதியிலுள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு 200,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கடை இலக்கம் 05 பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கொழும்பு மாவட்ட செயலகத்தின் விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கொழும்பு 10, ஜயந்த வீரசேகர மாவத்தையில் அமைந்துள்ள இந்த நிறுவனத்திலிருந்து SLS 517 தரச்சான்று முத்திரை இல்லாத LSS ரக மோட்டார் […]

இடியுடன் கூடிய மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மன்னார், […]

கனடா முழுவதும் அவசர உதவி தொலைபேசி சேவைகள் வலுப்படுத்தல்!

கனடா முழுவதும் அவசர உதவி தொலைபேசி சேவைகளுக்கான (crisis hotlines) ஆதரவைப் புதுப்பிப்பதற்காக $31 மில்லியன் நிதியுதவியை வழங்குவதற்கு கனடிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, நியூபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடார் (Newfoundland and Labrador) பிராந்தியத்தில் உள்ள அவசர உதவி சேவைகளை வலுப்படுத்துவதற்காக ஐந்து ஆண்டுகளில் $700,000 நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென். ஜோன்ஸில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இப்புதிய நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் ஜோன் […]

கனடாவின் எதிர்காலத்திற்காக சிறுவர்களில் முதலீடு!

சிறுவர்களில் முதலீடு செய்வது கனடாவின் எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்குச் சமமாகும் என்பதைக் கருத்திற் கொண்டு, நாட்டின் சிறுவர் நலப்படியை (Canada Child Benefit) அதிகரித்து வழங்குவதற்கு கனடிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. டொராண்டோவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வின்ஸ் காஸ்பாரோ (Vince Gasparro) மற்றும் சி நுயேன் (Chi Nguyen) ஆகியோருடன் இணைந்து இடம்பெற்ற நிகழ்வொன்றில், குடும்பங்களுக்கான இந்த அதிகரித்த கொடுப்பனவுகள் வழங்கப்படுவது குறித்து உத்தியோகபூர்வமாக சுட்டிக்காட்டப்பட்டது. இதன்படி, நடப்பாண்டில் ஆறு வயதிற்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைகளுக்காகவும் குடும்பங்கள் $8,157 […]

வளம் தரும் வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம் என்பது ஆடி மாதம் (அல்லது சிரவண மாதம்) பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் சுமங்கலிப் பெண்களால் குடும்ப நலனுக்காகவும், செல்வ வளம் பெருகவும் கடைபிடிக்கப்படும் மிக முக்கியமான நோன்பாகும். வரலட்சுமி விரதம் என்பது சுமங்கலிப் பெண்கள் செய்யும் மிகச் சிறப்பான பூஜையாகும். மகாவிஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியைக் குறித்துச் செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும். விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். லக்ஷ்மம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள். விஷ்ணு பகவான் […]

பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் நாமல் ராஜபக்ஷ ஆஜர்

கொழும்பு, ஆகஸ்ட் 21: ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இன்று (21) காலை பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார். மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணைக்கு (Summons) அமைவாகவே அவர் இவ்வாறு சமூகமளித்துள்ளார். விசாரணை அதிகாரிகளிடம் அவர் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த விசாரணை தொடர்பான மேலதிக தகவல்கள் அல்லது விவரங்கள் இதுவரை […]