ஷம்பாலா (Shambhala) இசை விழாவில் மாயமான பெண், காணாமல் போவதற்கு முன் தனது சகோதரியைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளார்: குடும்பத்தினர் தகவல்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் (B.C.) நடைபெற்ற ‘ஷம்பாலா’ இசை விழாவில் கலந்துகொண்டபோது காணாமல் போன ஒன்டாரியோவைச் சேர்ந்த பெண், தான் மாயமாவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தனது இரட்டைச் சகோதரியைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் வெஸ்ட் கூட்டனே (West Kootenay) பிராந்தியத்தில் சால்மோ (Salmo) அருகே நடைபெற்ற நான்கு நாள் மின்னணு இசை விழாவில் கலந்துகொண்ட ஒன்டாரியோவின் ட்ரென்டனைச் சேர்ந்த 28 வயதான கேலா போயஸ்வெர்ட்டை (Kayla Boisvert) கனடிய […]
கிச்சனர் (Kitchener) வீட்டில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவம்: கொலை முயற்சி வழக்குப் பதிவு

கத்திக்குத்துச் சம்பவம் குறித்த புகாரைத் தொடர்ந்து, கிச்சனர் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குச் சென்ற வாட்டர்லூ பிராந்திய காவல்துறையினர், 28 வயதான கிச்சனர் நபரை கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதன்கிழமை இரவு சுமார் 8:15 மணியளவில் கிச்சனரின் ஒட்டாவா தெரு (Ottawa Street) மற்றும் மில் தெரு (Mill Street) பகுதிக்கு விரைந்த காவல்துறையினர், அங்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் இருந்த ஒரு நபரைக் கண்டறிந்தனர். பாதிக்கப்பட்டவர் உடனடியாக அப்பகுதிக்கு வெளியே […]
பாலைவனமாக மாறி வறண்டு கிடக்கும் காவிரி ஆறு: திருச்சியில் அதிர்ச்சி தரும் கடும் குடிநீர் தட்டுப்பாடு!

திருச்சி: நடப்பாண்டில் மேட்டூர் அணை இன்னும் திறக்கப்படாததாலும், போதிய அளவு மழை பெய்யாததாலும் திருச்சியில் காவிரி ஆறு முற்றிலும் நீரின்றி பாலைவனமாக வறண்டுகாணப்படுகிறது. இதனால், திருச்சி மாவட்டத்தில் மிகக் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நிலவி வருகிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி டெல்டா குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். அந்த நீர் விவசாயப் பாசனத்திற்குப் பயன்படுவதோடு மட்டுமல்லாமல், டெல்டா மாவட்டங்களின் ஒட்டுமொத்த குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து, நிலத்தடி நீர்மட்டத்தை […]
கோட்டாபயவின் தொலைபேசி உரையாடல் கசிவு; குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடிய பதிவை வெளியிட்டு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாகக் கூறப்படும் சான் கணேகொட எனும் சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் மற்றும் மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல ஆகியோர் இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்துள்ளதோடு, இச்சம்பவம் தொடர்பிலும் அதற்குப் பின்னால் உள்ள வெளிநாட்டுச் சக்திகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்துமாறு கோரிக்கை […]
வலுவடையும் அமெரிக்க டொலரின் பெறுமதி!
இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(30) அமெரிக்க டொலருக்கு எதிராக சற்று வலுப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331.48 ஆகவும் விற்பனைப் பெறுமதி 340.59 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 441.22 ஆகவும் விற்பனைப் பெறுமதி 455.94ஆகவும் பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378.19 ஆகவும் விற்பனைப் பெறுமதி 391.56ஆகவும் பதிவாகியுள்ளது. கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234.76 ஆகவும் விற்பனைப் […]
SLS இல்லாத தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம்

ரமற்ற தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அதிகாரசபை, SLS முத்திரை இல்லாத தலைக்கவசங்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்துதல், காட்சிப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் சட்டவிரோதமானது எனத் தெரிவித்துள்ளது. 2015.07.16 ஆம் திகதியுடைய 1923/65 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையின் 59 ஆம் இலக்கக் கட்டளைக்கு அமைய, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் […]
பெல்லன்வில படுகொலை; இரு சந்தேகநபர்களும் 90 நாட்கள் விளக்கமறியலில்

ன நவகமுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவதற்காக மேல் மாகாண தெற்கு திசை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்கள் பகமூண கொட்டபிட்டிய கங்கேயாய பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவரும், பகமூண ஒருபெந்தி சியம்பலாவ ஹீரவிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் என அப் பிரிவு தெரிவித்துள்ளது. பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்லன்வில நடைபாதை அருகே அமைந்துள்ள உணவகத்திற்கு முன்னால், நீல நிற முச்சக்கர […]
பாகிஸ்தான் பொலிஸ் சாவடி மீது தாக்குதல்: 11 பொலிஸார் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் சாவடி மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட கொடூர தீவிரவாதத் தாக்குதலில் 11 பொலிஸார் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனையடுத்து இடம்பெற்ற ஒரு மணிநேரத் துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படையினர் 15 தீவிரவாதிகளைக் கொன்றதாக பொலிஸ் அதிகாரி இர்ஃபான் கான் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாக உரிமை கோரவில்லை. இருப்பினும், […]
அவசர சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பகுதிகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இக்கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 60 – 70 கிலோமீற்றர் வரை அதிகரிப்பதுடன், கடற்பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே, மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை இந்த கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி : கொழும்பில் கவனயீர்ப்பு

செம்மணி மனிதப் புதைகுழி குறித்த விடயத்தில் நீதி கோரி இன்று (30) கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.