7 மாதங்களில் 7 உயிர்ப் பலிகள்: நெடுஞ்சாலை 17-ல் பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்கக் கோரி பலியானவரின் மகள் கண்ணீர் வேண்டுகோள்

ஒன்டாரியோ (கனடா): கனடாவின் ‘நெடுஞ்சாலை 17’ (Highway 17) பாதையில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் தனது தாயைப் பறிகொடுத்த மகள் ஒருவர், மேலும் பல உயிர்கள் பலியாவதைத் தடுக்க அப்பாதையில் உடனடி பாதுகாப்பு சீர்திருத்தங்களைச் செய்யுமாறு மாகாண அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளார். நடப்பு ஆண்டில் கடந்த 7 மாதங்களில் மட்டும் நெடுஞ்சாலை 17-ல் ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கடந்த மே மாதம் இடம்பெற்ற விபத்தொன்றில், மல்லோரி பிரிண்டன் (Mallory Brinton) […]
மார்க்கம் கடத்தல் வழக்கு: 2-வது சந்தேகநபரான பெண்ணை தீவிரமாகத் தேடி வரும் காவல்துறை!

மார்க்கம் (கனடா): ரிச்மண்ட் ஹில் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பாக, இரண்டாவது சந்தேகநபரான பெண் ஒருவரை யோர்க் பிராந்திய காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடந்த ஜூலை 7-ஆம் தேதி, மார்க்கம் பகுதியிலுள்ள டெனிசன் வீதி மற்றும் வுட்பைன் அவென்யூ சந்திப்பில் அமைந்திருந்த தனது வணிக நிறுவனத்தில் இருந்து நபர் ஒருவர் மாயமானதாகப் புகாரளிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், இது ஒரு ஆட்கடத்தல் சம்பவம் என்பதை உறுதிசெய்த காவல்துறையினர், […]
மிசிசாகாவில் இரு வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு மாற்றம்; மற்றொருவர் காயம்!

மிசிசாகாவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற கொடூர இரு வாகன மோதல் விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்து ஹெலிகாப்டர் (Airlift) மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேவிஸ் வீதிக்கு (Mavis Road) மேற்கே அமைந்துள்ள டண்டாஸ் வீதி மேற்கு (Dundas Street West) மற்றும் சிடார்க்லென் கேட் (Cedarglen Gate) சந்திப்புப் பகுதியில் பிற்பகல் 2:45 மணியளவில் இவ்விபத்து நேர்ந்துள்ளது. விபத்துக்குள்ளான வாகனங்களில் ஒன்று மின்சாரக் கம்பத்தில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தில், ஒரு […]
எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் மீது ..துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுங்கள்..கடற்படைக்கு ஒத்துழைப்போம்…யாழ் மாவட்ட மீனவ சமாசம் தெரிவிப்பு.

எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீன்பிடிப் படகுகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது கட்டுப்படுத்துங்கள் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் கடற்படையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில் இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து எமது மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை முற்று முழுதாக அழித்துவிட்டு செல்கின்றனர். இந்திய மீனவர்களின் […]
இரு பெண்கள் உட்பட நால்வர் துப்பாக்கிச் சூடு சம்பவதிதில் கைது!
வத்தளை, கதிரான பள்ளியவத்தை பகுதியில் நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் பேரில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களைக் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். மேலும், இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 5 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. […]
புலமைப்பரிசிலுக்கு தெரிவான மாணவர்களுக்கான அறிவிப்பு

2024/25 கல்வியாண்டிற்குரிய மஹாபொல புலமைப்பரிசிலுக்காகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் இணையவழி (Online) பதிவுகள் எதிர்வரும் 17ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக லலித் அதுலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நிதியம், குறித்த கொடுப்பனவிற்கான இறுதித் தெரிவுப் பட்டியல்கள் உரிய பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, அப்பட்டியலில் பெயர்கள் அடங்கியுள்ள மாணவர்கள் ஓகஸ்ட் 17ஆம் திகதிக்கு முன்னர் https://mahapola.lk/BankApp2025/ என்ற இணையத்தளத்திற்குப் பிரவேசித்து, தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி இணையவழி பதிவை நிறைவு […]
7 மாதங்களில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (23) மூன்று மணித்தியால இடைவெளியில் தெமட்டகொடை மற்றும் வத்தளை பகுதிகளில் இரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவற்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். வத்தளை, பள்ளியவத்தை பகுதியில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் நேற்று இரவு 9.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரர் […]