உரிமைப்பந்தம்” அணையா விளக்கு போராட்டத்தின் ஆறு அம்சக் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தும் அமைதிவழி மக்கள் எழுச்சி

செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வுகள் தொடர்ந்து வெளிப்படுத்திவரும் உண்மைகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நீதி கோரும் குரலை மேலும் வலுப்படுத்தியுள்ளன. இந்த நிலையில், “மக்கள் செயல்” அமைப்பின் ஏற்பாட்டில் “உரிமைப்பந்தம்” எனும் அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு, கடந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற “அணையா விளக்கு” போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஆறு அம்சக் கோரிக்கைகளையும் மீண்டும் உறுதியுடன் வலியுறுத்தும் மக்கள் ஒன்றுகூடலாக அமைகிறது. செம்மணியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் வெறும் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் அல்ல. அவை […]

வோன் மாளிகையைச் சாம்பலாக்கிய தீ விபத்தின் பின்னணியில் தீவைப்புச் சதி என சந்தேகம்: பொலிஸ்

வோன் (Vaughan) நகரில் உள்ள ஒரு மாளிகையில் ஏற்பட்ட தீ விபத்து, திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு தீவைப்புச் சதி (Arson) என நம்பப்படுவதாக யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional Police) தெரிவித்துள்ளனர். வோன் நகரில் உள்ள மாளிகை ஒன்றை நள்ளிரவில் முற்றிலும் சாம்பலாக்கிய தீ விபத்து குறித்து, தற்போது தீவைப்புச் சம்பவமாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக யோர்க் பிராந்திய பொலிஸார் கூறுகின்றனர். நெஷ்வில் (Nashville) மற்றும் ஹண்டிங்டன் (Huntington) வீதிகளுக்கு அருகில் அமைந்துள்ள ‘மிசுனோ கிரசண்ட்’ […]

சரித் அபேசிங்கவின் உறுப்பினர் நீக்கியது ஐக்கிய மக்கள் சக்தி

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு ஒன்றின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஹொரனை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் விபரம் மற்றும் அவர் வகித்த அனைத்துப் பதவிகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி இடைநிறுத்தியுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்ச ஊழல் சம்பவம் ஒன்று தொடர்பாக, சரித் அபேசிங்க […]

ஹாமில்டன் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தபோது வாகனம் மோதி பாதசாரிக்கு பலத்த காயம்: பொலிஸ்

ஹாமில்டன் (Hamilton) பஸ் நிறுத்த நிழற்குடையில் காத்திருந்த பாதசாரி ஒருவர் மீது வாகனம் மோதியதில், அவர் வாழ்நாளை மாற்றும் அளவிலான பலத்த காயங்களுக்கு (Life-altering injuries) உள்ளாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, கடந்த வியாழக்கிழமை மாலை 4:30 மணியளவில் ‘கிங் ஸ்ட்ரீட் ஈஸ்ட்’ (King Street East) மற்றும் ‘டண்டர்ன் ஸ்ட்ரீட் நார்த்’ (Dundurn Street North) பகுதிக்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்திலிருந்து (Parking lot) வெளியேறிய ‘ஃபோர்டு எட்ஜ் எஸ்யூவி’ (Ford Edge SUV) […]

என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர்

என் மீதான குற்றச்சாட்டு பத்திரத்தை வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் என்னிடம் வழங்கவில்லை என சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஞா.கிசோர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனை தூக்கி வீசிய குற்றத்துக்காக, நகரசபை உப தவிசாளர் பதவியிலிருந்து ஞா.கிசோரை வட மாகாண ஆளுநர் நீக்கியும், நகரசபை உறுப்புரிமையை வறிதாக்கியும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே கிசோர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், உள்ளூராட்சி […]

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; த.வெ.க அரசின் பழிவாங்கல் நடவடிக்கை – எ.வ.வேலு குற்றச்சாட்டு

சென்னை: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனைகள் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுப்பணித்துறையில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் 14 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. சோதனையில் ரூ. 40 லட்சம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், அதை எ.வ.வேலு முற்றிலுமாக மறுத்துள்ளார். இது முழுக்க முழுக்க தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியுள்ள எ.வ.வேலு, […]

யுத்தம் முடிந்து 17 வருடங்களாகியும் தொடரும் ஆக்கிரமிப்பு: இராணுவக் கொமாண்டோ பங்களா முன் காணி உரிமையாளர்கள் 10-வது வாரமாகப் போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு (Valikamam North) உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் (High Security Zone) முடக்கப்பட்டுள்ள தங்களது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்களான தமிழ் மக்கள் இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களா (Commando Bungalow) முன்றலில் இன்றைய தினம் தங்களது பத்தாவது தொடர் வெள்ளிக்கிழமைப் போராட்டத்தை உணர்வுபூர்வமாக முன்னெடுத்துள்ளனா். இன்று (2026 ஜூன் 26, வெள்ளிக்கிழமை) காலை வலி. வடக்கு அகதிக்குடும்பங்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் ஒன்றுதிரண்டு தங்களது நில உரிமைக்கான இப்போராட்டத்தை நடத்தியுள்ளனர். […]

குளத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு ; கல்விளான் துணுக்காயில் சோக சம்பவம்

முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கல்விளான் குளத்தில் மூழ்கி 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் வியாழக்கிழமை (25) பிற்பகல் 3 மணியளவில் தூண்டில் சகிதம் மீன்பிடிக்கச் சென்ற குறித்த இளைஞர் வீடு திரும்பாத நிலையில், அவரது தந்தையார் தேடிச் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று (26) காலை கல்விளான் குளத்தில் மிதந்த நிலையில் இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்தவர் கல்விளான் பகுதியைச் சேர்ந்த இளைஞரே […]

யாழில் பாதுகாப்புப் படைகள் பயன்படுத்தும் காணிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் மீளாய்வு கூட்டம்!

யாழ்ப்பாணம் மற்றும் பலாலி பகுதிகளில் பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் காணிகள் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் கூட்டம் பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது. காணி தொடர்பான விவகாரங்கள் குறித்த முந்தைய கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க, மீன்வளம், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் […]

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

வவுனியாவில் சுமார் 1 கோடி ரூபா மதிப்பிடப்பட்ட 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று (25) வவுனியா லக்சபானா வீதிக்கு அண்மையில் இடம்பெற்றது. வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி காரில் கொண்டு வரப்பட்ட கேரள கஞ்சா, மற்றொரு முச்சக்கரவண்டிக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது கஞ்சாவை உடமையில் […]