அமெரிக்க அதிகாரியுடனான பேச்சுவார்த்தையில் இலங்கையின் நடுநிலையான வெளியுறவுக் கொள்கையை வெளிவிவகார அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் எஸ். போல் கபூர் (S. Paul Kapur) உடனான கலந்துரையாடலின் போது, நடுநிலைமையைப் பேணுவதற்கும் சர்வதேச சட்டங்களை கண்டிப்பாகப் பின்பற்றுவதற்குமான இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான துறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில், எரிபொருள் விநியோகத்தைப் […]

யாழ்.மண்ணின் பிரபல தொழிலதிபர் அப்புலிங்கம் மறைவு!

லிங்கம் கிறீம் ஹவுஸ் நிறுவன உரிமையாளரும், யாழ்.புளியங்கூடல் மண்ணைச் சேர்ந்தவருமான நாகலிங்கம் அப்புலிங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21.06.2026) இறைபதமடைந்தார்.

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது இராஜினாமாவை அறிவித்தார்

பிரித்தானியப் பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer), சமீபத்திய அரசியல் பின்னடைவுகள் மற்றும் சரிந்து வரும் மக்கள் ஆதரவு காரணமாக அவரது கட்சிக்குள்ளேயே ஏற்பட்ட பலத்த அழுத்தங்களை அடுத்து, பிரதமர் பதவியிலிருந்தும் தொழிற் கட்சியின் (Labour Party) தலைமைப் பதவியிலிருந்தும் விலகப்போவதாக அறிவித்துள்ளார். திங்கட்கிழமை லண்டன் ’10 டவுனிங் ஸ்ட்ரீட்’ (10 Downing Street) பிரதமர் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் உரையாற்றிய ஸ்டார்மர், தனது அரசியல் எதிர்காலம் குறித்த பல நாட்களின் ஊகங்களுக்குப் பின்னர் […]

ரணிலின் பிரிட்டன் விஜயம் தொடர்பான விசாரணைச் செலவுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கவலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரிட்டன் (UK) விஜயம் தொடர்பான விசாரணைக்கான செலவுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கவலை வெளியிட்டுள்ளதுடன், இந்த வழக்குத் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக முன்னாள் அதிகாரி அருண பெர்னாண்டோ என்பவருக்கு அண்மையில் 650 பவுண்டுகள் (Sterling Pounds) செலுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தூதுவர் சரோஜா சிறிசேனவின் பதவிக்காலத்தில் லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிய அருண பெர்னாண்டோ, பின்னர் […]

திரு நாகலிங்கம் அப்புலிங்கம்

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு நாகலிங்கம் அப்புலிங்கம் அவர்கள் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், இராசையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலாம்பிகை அப்புலிங்கம் அவர்களின் பாசமிகு கணவரும், கீதா (இலங்கை), கீதராஜ் (லண்டன்), கீதாகரன் (கனடா), கீதரமணன் (அமெரிக்கா), கீதசகிலன் (இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், வசந்தகுமார், கலா, அகல்யா, வித்யா, ரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான […]

திரு நாகலிங்கம் அப்புலிங்கம்

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு நாகலிங்கம் அப்புலிங்கம் அவர்கள் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், இராசையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலாம்பிகை அப்புலிங்கம் அவர்களின் பாசமிகு கணவரும், கீதா (இலங்கை), கீதராஜ் (லண்டன்), கீதாகரன் (கனடா), கீதரமணன் (அமெரிக்கா), கீதசகிலன் (இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், வசந்தகுமார், கலா, அகல்யா, வித்யா, ரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான […]

திருமதி சற்குணநாதன் கேதாரகௌரி

யாழ். புலோலி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கு கருணாகரப்பிள்ளையார் கோவிலடியை வாழ்விடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சற்குணநாதன் கேதாரகௌரி அவர்கள் 19-06-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசைய்யா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சற்குணநாதன் அவர்களின் அன்பு மனைவியும், விஷ்ணுவர்த்தன், இராமகிருஸ்ணா ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும், யசோ அவர்களின் அன்பு மாமியாரும், நிவ்வியன், யஸ்வின், திரிஷிஹா ஆகியோரின் பாசமிகு […]

இந்த அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு போன்ற விடயங்களில் மேற்கொள்ளும் முயற்சிகள் முன்னேற்றகரமாக உள்ளது – சிறிநேசன்

இந்த அரசாங்கம் உயர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான தாக்குதல் விடயத்தில் ஓரளவுக்கு முன்னேற்றகரமான முறையில் விசாரணைகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய காலகட்டத்தில் முக்கியமானதொரு பேசுபொருளாக இருக்கின்ற விடயம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான விசாரணையாகும். இந்த உயிர்த்த ஞாயிறு […]

சித்திரவதைகளுக்கு எதிரான ஐநா குழு அரசாங்கத்திடம் இரகசிய அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது

சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் துணைக் குழுவின் (SPT) தூதுக்குழு, இலங்கைக்கு மேற்கொண்ட ஒன்பது நாள் விஜயத்தின் போது கண்டறிந்த விபரங்களின் அடிப்படையில், தனது இரகசிய முதற்கட்ட அவதானிப்புகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தூதுக்குழு தனது இலங்கை விஜயத்தை புதன்கிழமை நிறைவு செய்யவுள்ளது. நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்தத் தூதுக்குழு, ஜூன் 15ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததிலிருந்து, பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு விஜயம் செய்துள்ளதுடன், 2019ஆம் ஆண்டு இக்குழுவின் இறுதி விஜயத்திற்குப் பின்னர் […]

சாலி தடுப்புக்காவல்: தம்மீது சட்டவிரோத கண்காணிப்பு நடத்தப்படுவதாக மனோரி சாலி முறைப்பாடு

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தம்மையும் தனது பிள்ளைகளையும் கண்காணித்ததாக குற்றச்சாட்டு முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சாலியின் மனைவியான மனோரி சாலி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துடன் (CID) தொடர்புடையவர் என நம்பப்படும் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரால் தம்மையும் தனது இரு பிள்ளைகளையும் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாகக் கூறி, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையில் முறைப்பாடு செய்துள்ளார். சிவில் உடையில் இருந்த நபர் ஒருவர், பல சந்தர்ப்பங்களில் […]