வடக்கு மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்க முற்படுவது தேசத் துரோகம் – முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர

வடக்கு மாகாண சபைக்குப் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என நம்புகின்றோம் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் தேர்தலை நடத்தி வடக்கு மாகாண சபைக்குப் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கினால்தான் பிரச்சினை ஏற்படும். இலங்கையில் இதுவரை ஆட்சி புரிந்த எந்தவொரு ஜனாதிபதியும் இந்த வேலையைச் (பொலிஸ், […]
மார்க்கம் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 முதியவர்கள் உயிரிழப்பு

ஜூன் 5, 2026 அன்று மார்க்கம் பகுதியில் ஏற்பட்ட வீடு தீ விபத்தைத் தொடர்ந்து பல வீடுகள் வெளியேற்றப்பட்டன மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். மார்க்கம் (Markham) பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ, அருகிலுள்ள மற்ற வீடுகளுக்கும் பரவியது. இந்த விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று முதியவர்கள், சிகிச்சை பலனின்றி சில நாட்களிலேயே உயிரிழந்துள்ளனர். ஜூன் 5 அன்று காலை 7 மணிக்குச் சற்று முன்பாக, கார்ல்டன் (Carleton) […]
புலத்சிங்கள பிரதேச சபையின் SJB உறுப்பினர்கள் 5 பேர் பதவி நீக்கம்

புலத்சிங்கள பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய 5 உறுப்பினர்களை அவர்களது பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இவ்வாறு உறுப்பினர் பதவிகளை இழந்தவர்கள், அந்தப் பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய ஐமச குழுவின் தலைவர் நிஹால் மெந்திஸ், மொஹமட் நிஷார்ட், காந்தி பெலவத்த, ஆயிஷா சாமலி மற்றும் புஷ்பா சமரசிங்க ஆகியோராவர். கடந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர், பிரதேச சபையின் ஆட்சியை அமைப்பதற்காக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்து, இந்த உறுப்பினர்கள் […]
விடுதலைப் புலிகள் அமைப்பின் புலம்பெயர் ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காக கைதான சுரேஷ் சலேவுக்காக இன்று ஆர்ப்பாட்டம் – விமல் வீரவன்ச

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலம்பெயர் ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காகவும், அரசியல் பழிவாங்களுக்காகவும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டுக்காக போராடிய சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்காக கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக இன்று திங்கட்கிழமை (8) காலை 10 மணிக்கு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவோம். நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் இராணுவத்தின் மீது பற்றுள்ளவர்கள் எமது சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, சரத் […]
பிலிப்பைன்ஸின் மிண்டானாவோவில் 8.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் அண்டை நாடான இந்தோனேசியாவின் புவிஇயற்பியல் முகமைகள் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளன. இருப்பினும், இரு நாடுகளிலும் உடனடியாக பெரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. முக்கிய விவரங்கள்: நிலநடுக்கத்தின் தீவிரம்: தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டானாவோ பகுதியில் திங்கட்கிழமை (ஜூன் 8, 2026) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) இந்த நிலநடுக்கம் 8.2 ரிக்டர் அளவாகப் பதிவாகியிருந்ததாகவும், இது பூமியிலிருந்து சுமார் 10 கி.மீ ஆழத்தில் […]
கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை உணர்ந்து, அவர்களுக்கு நம்பிக்கையையும் துணிவையும் அளிக்கும் ஒரு மனிதநேய நடைபவனி – “புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026” ஒவ்வொரு அடியும் ஒரு உயிருக்கு நம்பிக்கை… ஒவ்வொரு பங்கேற்பும் ஒரு குடும்பத்திற்கு துணை… ஒன்றாக நடந்தால் மாற்றத்தை உருவாக்கலாம். Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation இணைந்து நடத்தும் […]
ஈரான் இஸ்ரேல் மீது பாரிய தாக்குதல்

இஸ்ரேலின் வடக்கு பகுதியை இலக்கு வைத்து ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்ட கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பின்னர், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது இதுவே முதல் சந்தர்ப்பமாகும். இந்த தாக்குதல் தொடர்பில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை வௌியிட்டுள்ள அறிக்கையில், இது ஒரு எச்சரிக்கை மட்டுமே என தெரிவித்துள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைக் குறிப்பிட்டு, இஸ்ரேலின் இந்த […]
அரச நிதி பாராளுமன்றக் குழு 25 இலட்சம் அமெரிக்க டொலர் கடன் மாற்றம் குறித்து ஆராய்வதற்காக இன்று கூடுகிறது

அவுஸ்திரேலிய நிறுவனமொன்றிற்கு செலுத்த வேண்டிய 25 இலட்சம் அமெரிக்க டாெலர் கடன் தொகை, வெளிநபர்களின் கைகளுக்குச் சென்ற சம்பவம் தொடர்பான திறைசேரியின் அறிக்கை குறித்து ஆராய்வதற்காக, அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்றக் குழு இன்று திங்கட்கிழமை (08) கூடவுள்ளது. திறைசேரியின் குறித்த அறிக்கை, ஏற்கனவே நிதிக்குழுவின் தலைவருக்கு மாத்திரம் பார்ப்பதற்காக திறைசேரி, ஹர்ஷடி சில்வாவின் வீட்டுக்கு அனுப்பி இருந்த நிலையில், அதனை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்து, திருப்பி அனுப்பி இருந்தார். இந்நிலையில் அதன் அதிகாரிகளினால் குறி்த்த அறிக்கை […]
புளூ வாட்டர் பாலத்தில் $4 மில்லியன் மதிப்பிலான கோகோயின் பறிமுதல் வழக்கு
டொராண்டோ பகுதியைச் சேர்ந்த 33 வயதான லாரி ஓட்டுநர் ரஞ்சித் சிங் என்பவர் மீது தற்போது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. புளூ வாட்டர் பாலம் (Blue Water Bridge) எல்லைச் சாவடியில் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, இரண்டு பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 40 கிலோகிராம் கோகோயின் போதைப்பொருளை எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின்படி, காவல்துறையின் மோப்ப நாய் (K9) அதிகாரிகள் அந்தச் சந்தேகத்திற்கிடமான பார்சல்களைக் கண்டறிய […]