விடுதலைப் புலிகள் அமைப்பின் புலம்பெயர் ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காக கைதான சுரேஷ் சலேவுக்காக இன்று ஆர்ப்பாட்டம் – விமல் வீரவன்ச

 

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலம்பெயர் ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காகவும், அரசியல் பழிவாங்களுக்காகவும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டுக்காக போராடிய சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்காக கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக இன்று திங்கட்கிழமை (8) காலை 10 மணிக்கு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவோம்.

நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் இராணுவத்தின் மீது பற்றுள்ளவர்கள் எமது சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, சரத் வீரசேகர, விமல் வீரவன்ச மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.

தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தனர்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குறிப்பிடுகையில், முப்பது வருடங்களுக்கும் மேலாக நீடித்த கொடூரமான பயங்கரவாத யுத்தத்தின் காரணமாக இந்த நாட்டிற்கு இழக்கப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று எங்களால் இறுதியாகக் கணக்கிடப்பட்ட ஒரு இலக்கம் இல்லை.முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.

ஒட்டுமொத்த மக்களும் நன்றிக்கடன்பட்டுள்ள வேளையின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுரேஸ் சலே கைது செய்யப்பட்டு ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். அவர் அவ்வாறு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்இ அங்கு ஒரு சாதாரண சூழ்நிலை நிலவவில்லை. ‘கெஹெல்பத்தர பத்மே’ (முநாநடடியனனயசய Pயவாஅந) என்பவருக்கு இருக்கும் வசதிகள் சுரேஷ் சலேவுக்கு இல்லை. ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருக்கு கிடைக்கும் உணவு சுரேஷ் சலேவுக்கு கிடைப்பதில்லை. ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருக்கு வழங்கப்படும் கவனிப்பு சுரேஷ் சலேவுக்கு கிடைப்பதில்லை.

சுரேஷ் சலேவை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த மக்களுக்கும் உண்டு. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் உண்மையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமாயின் அரசாங்கம் குண்டுத்தாரிகளின் தந்தையான இப்ராஹிமை முறையாக விசாரிக்க வேண்டும் அப்போது உண்மை வெளிவரும். சுரேஷ் சலேவுக்காக இன்று காலை 10 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிடுகையில், விடுதலை புலிகள் அமைப்பின் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கம் மற்றும் விருப்பு, வெறுப்புகளுக்காகவே அரசாங்கம் செயற்படுகிறது. வடக்கில் புலிகள் அமைப்பின் நினைவேந்தல் அரச ஆதரவுடன் கொண்டாடப்படுகிறது.

அரச நிகழ்வுகளில் இராணுவத்தினருக்கு உரிய கௌரவம் வழங்கப்படவில்லை. இராணுவத்தினர் திட்டமிட்ட வகையில் பழிவாங்கப்படுகிறார்கள்.ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அறிக்கைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலும் அரசியல் நோக்கங்களுக்காக விசாரணைகள் திசைத்திருப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்களுக்காகவும், புலிகள் அமைப்பின் நோக்கத்துக்காகவும் சுரேஸ் சலே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.அவரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நாட்டு மக்களுக்கு உண்டு. நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் இராணுவத்தின் மீது பற்றுள்ளவர்கள் எமது சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றார்.

பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குறிப்பிடுகையில், அரசியல் பழிவாங்களுக்காகவே சுரேஸ் சலே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சுரேஸ் சலேவை பாதுகாக்க வேண்டும். அவருக்காக நாங்கள் போராடுவோம் எமது போராட்டத்தில் நாட்டு மக்களும் பங்குப்பற்ற வேண்டும் என்றார்.

சர்வஜன சக்தி கட்சியின் உப தலைவர் சன்ன ஜயசுமன குறிப்பிடுகையில், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் நாட்டுக்காக சேவையாற்றிய சுரேஸ் சலே சிறையில் அரசியல் பழிவாங்களுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

சுரேஸ் சலேவுக்காக அனைத்து இன மக்களும் குரல் கொடுக்க வேண்டும். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் விசாரணைகள் என்ற பெயரில் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே சுரேஸ் சலேவுக்கு நியாயம் கிடைக்கும்வரை போராடுவோம் என்றார்.

cham

சமிந்த விஜேசிறிக்கு பிணை

August 25, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள்

Parliame

22ஐ சவாலுக்கு உட்படுத்தி 21 மனுக்கள் தாக்கல்

August 25, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள்

can

மாணவியின் மனிதநேயப் பண்பு!

August 25, 2026

அக்கரப்பத்தனை பகுதியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த 15,000 ரூபாய் பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனைத் தாமதிக்காமல்

dd

117ம் பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக வயதான பெண்!

August 25, 2026

உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்