தமிழரின் மனித உரிமைகளை நிலைநிறுத்த கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும்: முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி கனேடியப் பிரதமரின் அறிக்கை!

கனேடிய அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி சார்பாக 2022-ஆம் ஆண்டில் ஆனந்தசங்கரி அவர்களால் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தைத் தொடர்ந்து கனடா நாடாளுமன்றத்தால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் குறித்த பிரதமர் மார்க் கார்னியின் உரையைப் பகிர்கின்றோம். கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகங்களுடன் இணைந்து நாம் இன்று தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளைக் கடைப்பிடிக்கின்றோம். கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக நீடித்த இலங்கை உள்நாட்டுப்போர் ஆயிரக்கணக்கான பொது மக்களின் உயிரைப் பறித்தது. நாம் உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றி […]
இறந்தவர்களால் நீதிக்காக அழ முடியாது; அவர்களுக்காக அதைச் செய்வது உயிரோடு இருப்பவர்களின் கடமையாகும்”.உமாகுமரன்

இறந்தவர்களால் நீதிக்காக அழ முடியாது; அவர்களுக்காக அதைச் செய்வது உயிரோடு இருப்பவர்களின் கடமையாகும்”. என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் தெரிவித்துள்ளார் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இன்று, மே 18 ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு நாளை நாம் அனுஷ்டிக்கிறோம். 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், இலங்கையில் இடம்பெற்ற இராணுவத் தாக்குதலின் இறுதிக்கட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நினைவை நாம் போற்றுகிறோம் – இது […]
சிங்கள-பௌத்த பேரினவாதம் இன்னும் முதன்மையான கருத்தியலாகவே நீடிப்பதுடன், தீவின் ஒற்றையாட்சி அரசு கட்டமைப்பைப் பாதுகாத்து நிலைநிறுத்துகிறது-பேர்ள்

சிங்கள-பௌத்த பேரினவாதம் இன்னும் முதன்மையான கருத்தியலாகவே நீடிப்பதுடன், தீவின் ஒற்றையாட்சி அரசு கட்டமைப்பைப் பாதுகாத்து நிலைநிறுத்துகிறதுஎன இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது பேர்ள் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உலகளவில் ‘தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்’ ஆக அனுஷ்டிக்கப்படும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17 ஆவது ஆண்டு நிறைவில், ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்கள் பக்கம் PEARL அமைப்பு துணையாக நிற்கிறது. இம்மாதமானது, ஈழத்தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் […]
குற்றம் இழைத்தவர்களில் ஒருவர் கூட சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. நம்பகமான எந்தவொரு சர்வதேச பொறிமுறையும் இதுவரை நிறுவப்படவில்லை–ஈழத்தமிழர் பேரவை

குற்றம் இழைத்தவர்களில் ஒருவர் கூட சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. நம்பகமான எந்தவொரு சர்வதேச பொறிமுறையும் இதுவரை நிறுவப்படவில்லைஎன ஈழத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது ஈழத்தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் உயிர்களையும் துப்பாக்கிகள் மௌனித்த பின்னரும் முடிவுக்கு வராத தமிழ் இனப்படுகொலையையும் இந்நாளில் நாம் நினைவு கூருகிறோம். பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது அவர்களது நிலை என்னவென்று இதுவரை அறியப்படாமல் உள்ளது. பொதுமக்களுக்கு எதிராக கிளஸ்டர் குண்டுகள் ) […]
முள்ளிவாய்க்காலில் சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள்

சுவிஸ் கூட்டாட்சி வெளிவிவகார அமைச்சின் (FDFA) பிரதிநிதிகள், மே 18 அன்று முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற 17 ஆவது முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு, 2009 இனப்படுகொலையில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு தங்களது அஞ்சலியைச் செலுத்தினர்.
“தேர்தலில் தான் தோற்றோம், கொள்கையில் அல்ல!” – தவெக ஆட்சியை அட்டாக் செய்த உதயநிதி ஸ்டாலின்!
தஞ்சாவூர்: “தேர்தல் அரசியலில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கலாமே தவிர, கொள்கை அரசியலில் திமுக என்றுமே தோற்றதில்லை; இந்த 10 நாட்களிலேயே தவெக ஆட்சியின் முகத்தை மக்கள் உணர்ந்திருப்பார்கள், போகப் போக இன்னும் பல உண்மைகள் வெளிவரும்” என்று திமுக இளைஞரணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். தஞ்சையில் நடைபெற்ற திமுக முக்கிய நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதன்முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு […]
“500 குழந்தைகளில் ஒன்று ஆம்புலன்சிலேயே பிறக்கிறது!” – 108 சேவையின் சாதனையைப் பகிர்ந்து அன்புமணி பெருமிதம்!

சென்னை: “தமிழ்நாட்டில் 108 அவசர ஊர்தி சேவை மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பது நினைத்து மகிழ்ச்சியும், பெரும் பெருமையும் கொள்கிறேன்” என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடந்த 2025-26ஆம் ஆண்டில் 7.82 லட்சம் மகப்பேறுகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் மிகவும் நெருக்கடியான பிரசவ காலத்தில் 108 அவசர ஊர்தி […]
“வாக்குறுதி நிறைவேறியது; 200 யூனிட் இலவச மின்சாரம்!” – மின்சாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் அதிரடி ஆலோசனை!
சென்னை: முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் தான் முதல் கையொப்பமிட்ட முக்கிய வாக்குறுதியான “200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம்” நடைமுறைக்கு வந்துள்ள சூழலில், மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில் இன்று (18.05.2026) விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தினார். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த உயர்மட்டக் கூட்டத்தில், மின்சார வாரியம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் மின் உற்பத்தித் […]
பார்க்ஹேல் (Parkdale) பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் நபருக்கு பலத்த காயம்

திங்கட்கிழமை அதிகாலை டொராண்டோவின் பார்க்ஹேல் சுற்றுப்புறப் பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். டஃபரின் வீதிக்கு (Dufferin Street) மேற்கே உள்ள கிங் ஸ்ட்ரீட் வெஸ்ட் (King Street West) மற்றும் டின்டால் அவென்யூ (Tyndall Avenue) பகுதிக்கு அதிகாலை 3 மணிக்கு சற்று முன்பதாக தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், தோள்பட்டையில் கத்திக் குத்துக் காயத்துடன் காணப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை […]
“20 கோடி ரூபாய் கடன்.. போனை கூட எடுக்கல!” – தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலைக்கான உண்மையான காரணத்தை உடைத்த மகன்!

சென்னை: “எனது தந்தை குடும்பப் பிரச்சினை காரணமாகத் தற்கொலை செய்யவில்லை; சினிமா தயாரிப்பாளர்கள் பலருக்குக் கொடுத்த 20 கோடி ரூபாய் கடன் தொகை திரும்ப வராததால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் தான் அவரது இந்த முடிவுக்குக் காரணம்” என்று மறைந்த தயாரிப்பாளர் கே.ராஜனின் மகன் சுரேஷ் ராஜன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். பிரபல மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன் (85) சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகையே உலுக்கியுள்ளது. மேடைகளில் […]