காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு திடீரென விஜயம் மேற்கொண்ட அமைச்சர் தலைமையிலான குழு

சுமார் 36 வருடங்களுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் காரணமாகக் கைவிடப்பட்ட நிலையில் உள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை, ஒரு பெரிய கைத்தொழில் பேட்டையாக (Industrial Estate) உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. இது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய, பிரதி அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் தொழிற்சாலை வளாகத்திற்கு நேரடியாகச் சென்று கள விஜயம் மேற்கொண்டனர். காணி அளவு: தொழிற்சாலைக்குச் சொந்தமான சுமார் 400 ஏக்கர் காணியில் இந்தத் தொழிற்சாலைப் பேட்டையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நோக்கம்: நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாமல் […]
ஒலிபெருக்கி தொடர்பாக பொலிஸார் அவசர அறிவுறுத்தல்

பொது வைபவங்கள் மற்றும் நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதிக்கப்பட்ட கால எல்லைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் பொது மக்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் விசேட நினைவூட்டலை விடுத்துள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள சட்டவிதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைவாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தின் அறிவிப்பின்படி, ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான நேரக் கட்டுப்பாடுகள் பின்வருமாறு அமையும். * திங்கள் முதல் வியாழன் வரை: காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. * வெள்ளி […]
நெல்லியடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை

நெல்லியடி பகுதியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய வெதுப்பகம், உணவகம் மற்றும் பலசரக்கு கடை என்பவற்றின் முகாமையாளர்களுக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றினால் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. நெல்லியடி பொதுச்சுகாதார பரிசோதகர் ம.பிரபாகரனினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (24) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, வழக்கு விசாரணையின் போது நீதவானால் முப்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. சித்திரை புதுவருட பண்டிகை நாட்களில் பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினரால் தொடர்ச்சியாக மேற்கொள்பப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சுகாதார சீர்கேடுகள் […]
2026 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; தமிழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஈழத்து மக்களாக ஒன்றிணைந்து அன்றைய துயர நாளை நினைவுகூர வேண்டும் என அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங், அழைப்பு விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நேற்றையதினம்(24.04.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் சார்பில், கடந்த 2009 மே 18 தமிழ் இன அழிப்பு நாளை நினைவுகூரும் வகையில் 2026 மே 18ஆம் […]
அம்பகாமத்தில் நீர் வழங்கப்படாத காரணத்தால் விவசாயம் பாதிப்பு

முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் குளத்திற்கு கீழ் சிறுபோக நெற்பயிர்ச்செய்கையில் ஈடுப்பட்டுள்ள தனக்கு விதைத்த நாள் தொடக்கம் இன்று வரை நீர் வழங்கப்படாத காரணத்தால் இரண்டு ஏக்கர் வயல் நிலம் அழியும் நிலையில் இருப்பதாக விவசாயி கவலை தெரிவித்துள்ளார். கமக்கார அமைப்பும் கமநலசேவைகள் திணைக்களமும் தனக்கான சிறுபோக பங்கு நீரினை தர மறுத்து வருவதாகவும் பல தடவைகள் கேட்டும் வேலி அமைத்தால் மாத்திரமே நீர் வழங்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளதால் வயல் எரிந்து […]
2.5 மில்லியன் டொலர் இணையக் கொள்ளை விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் – பிரதி அமைச்சர்

அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணை மடைமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். திறைசேரியால் செலுத்தப்பட்ட நிதி, இணையக் குற்றவாளிகளின் கைகளுக்குச் சென்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விரிவான விசாரணைகள் நடைபெற்று வருவதுடன், நேற்று (24) நிதியமைச்சில் இது குறித்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் […]
நிதியமைச்சின் செயலாளர் பதவி விலகக் கோரி அழுத்தம் அதிகரிப்பு

2.5 மில்லியன் அமெரிக்க டாலர் இணையக் கொள்ளையை அம்பலப்படுத்திய ‘சுதந்திர சட்டத்தரணிகள்’ (Free Lawyers) அமைப்பு, நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் மைத்ரி குணரத்ன கூறுகையில், “கடன் மறுசெலுத்தலுக்கான இறுதி அனுமதியை வழங்குபவர் என்ற ரீதியில், திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இதற்குப் பொறுப்புக் கூற வேண்டிய ஒரு தரப்பினர் ஆவார்,” என்று தெரிவித்தார். அடுத்தகட்ட நடவடிக்கைகள்: இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை […]
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் புதிய மைல்கல்: சென்னை ஐ.ஐ.டி. 3 புதிய பாடப்பிரிவுகளை அறிமுகம்!

சென்னை, சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT Madras), தனது டிஜிட்டல் கற்றல் தளமான ‘ஸ்வயம் பிளஸ்’ (Swayam Plus) மூலம் 3 புதிய செயற்கை நுண்ணறிவு (AI) பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்துள்ளது. ஸ்வயம் பிளஸ் தளம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் இந்தப் புதிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3 பாடப்பிரிவுகள்: 1. வளர்ந்து வரும் என்ஜினீயர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI for Budding Engineers) 2. நிர்வாகிகளுக்கான செயற்கை நுண்ணறிவு […]
விசிகவில் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜிக்கு முக்கிய பொறுப்பு – திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மூத்த நிர்வாகிகளான ஆளூர் ஷாநவாஸ் மற்றும் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோருக்குக் கட்சியில் புதிய மற்றும் முக்கியமான பொறுப்புகளை வழங்கி அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-க்களாகப் பணியாற்றிய இவர்கள் இருவருக்கும், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. கட்சியில் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் திருமாவளவன் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார். இது அக்கட்சி […]
“மகத்தான வாய்ப்பு அளித்த முதல்வருக்கு நன்றி” – போடியில் களம் கண்ட ஓ.பன்னீர்செல்வம் நெகிழ்ச்சி அறிக்கை!

தேனி, தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், போடிநாயக்கனூர் தொகுதி திமுக வேட்பாளராகக் களம் கண்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனக்கு வாய்ப்பளித்த திமுக தலைமைக்கும் வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “நடைபெற்று முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் போடிநாயக்கனூர் தொகுதி வேட்பாளராக என்னைத் தேர்வு செய்து, எனக்காகப் பரப்புரை ஆற்றிய கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி […]