ஹாமில்டன் அதிரடி சோதனை: போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் நாய்க்குட்டிகள் மீட்பு

ஹாமில்டனில் உள்ள மருந்து விற்பனை நிலையம் (Dispensary) ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், $210,000 மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சட்டவிரோத நாய் இனப்பெருக்க மையமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹாமில்டனின் ‘கிங் ஸ்ட்ரீட் ஈஸ்ட்’ (421 King St. East) பகுதியில் அமைந்துள்ள ‘4 வின்ட்ஸ் மெடிசின் லாட்ஜ்’ (4 Winds Medicine Lodge) என்ற வணிக நிறுவனம், கஞ்சா மற்றும் பிற தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை சட்டவிரோதமாக […]

வாகனத்தின் பின் இருக்கையில் மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் உயிரிழப்பு: டொராண்டோ பொலிஸ்

டொராண்டோவில் திங்கட்கிழமை அன்று வாகனத்தின் பின் இருக்கையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். டொராண்டோவின் குயின் ஸ்ட்ரீட் ஈஸ்ட் (Queen Street East) மற்றும் பேப் அவென்யூ (Pape Avenue) பகுதியில் உள்ள வாகனமொன்றின் பின் இருக்கையில் குழந்தை ஒன்று அசைவற்றுக் கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, தீயணைப்புப் படை, ஆம்புலன்ஸ் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குறித்த குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு […]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இந்தியர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய ‘குஷ்’ (Kush) போதைப்பொருளுடன் வெளிநாட்டு நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய இந்தியப் பிரஜை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

குண்டுத் தாக்குதல் சதி தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகளை பொலிஸார் மறுப்பு

கொழும்பு மற்றும் ஏனைய மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் திட்டமிட்டிருந்ததாக சமூக வலைதளங்கள் மற்றும் சில இணையதளங்களில் பரவி வரும் செய்திகளை இலங்கை பொலிஸார் மறுத்துள்ளனர். இந்தச் செய்திகள் “முற்றிலும் பொய்யானவை” என்று தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி (ASP) எஃப்.யு. வூட்லர், அத்தகைய சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கஞ்சிப்பாணி இம்ரானின்’ சகா ஒருவர் இந்தச் சம்பவம் […]

சென்னை என்றுமே தி.மு.க.வின் கோட்டை! “தமிழ்நாடு வெல்லும்” – பிரசாரத்தின் இறுதி நாளில் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவு!

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில், திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டார். சோழிங்கநல்லூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது வாகனத்தில் செல்லாமல், மக்களுடன் மக்களாக நடந்து சென்று மு.க.ஸ்டாலின் வாக்கு கேட்டார். அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். செல்லும் வழியில் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சிய முதல்வர், […]

கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடர்பில் புதிய அறிவிப்பு

இலங்கையில் தற்போதைய கியூ.ஆர் குறியீடு முறையின் கீழேயே எரிபொருள் விநியோகம் தொடரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். இது அவர் மேலும் தெரிவிக்கையில், உலகளாவிய எரிபொருள் நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, தற்போதைய கியூ.ஆர் குறியீடு முறையின் கீழேயே சில்லறை எரிபொருள் விநியோகம் தொடரும். எவ்வாறாயினும், தேவைக்கேற்ப இந்த முறையில் மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இதேவேளை வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப வழங்கப்படும் எரிபொருள் அளவை அவ்வப்போது திருத்தம் செய்தல், […]

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள்-ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்த நாளின் வலி இன்னும் ஆறவில்லை.-.உண்மை நீதியை நிலைநாட்டவேண்டும் – ஐநாவின் பிரதிநிதி

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அந்த நாளின் வடுவை நாடு இன்னும் சுமந்து கொண்டிருக்கின்றது. இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை நினைவு கூருவதுடன், இன்றும் பதில்களுக்காகக் காத்திருக்கும் குடும்பங்களுடன் துணை நிற்கின்றதுஎனத்தெரிவித்துள்ளஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச் (Marc-André Franche) தனது அறிக்கையில், உண்மை மற்றும் நீதியை நிலைநாட்ட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது 2019-ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களை […]

உண்மை கண்டறியப்பட்ட பின்னரே மன்னிப்பு சாத்தியம்: வத்திக்கான் தூதுவர் வலியுறுத்தல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னாலுள்ள உண்மை நிலைநாட்டப்பட்ட பின்னரே, அத்தாக்குதல்களை நடத்தியவர்களை மன்னிப்பது குறித்துச் சிந்திக்க முடியும் என இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் (Apostolic Nuncio) மொன்சிஞ்ஞோர் ஆண்ட்ரூ ஜோஸ்வோலெஸ் (Monsignor Andrez Jozwowlez) இன்று தெரிவித்தார். கொழும்பு புனித அந்தோணியார் திருத்தலத்தில் இன்று நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதலின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்: “இந்த நினைவேந்தல் நிகழ்வானது பழிவாங்கும் உணர்வுடன் (Vengeance) இருக்கக் […]

“பிரேமலதா நமது கூட்டணிக்குத்தான் வேலை செய்கிறார்!” – எடப்பாடியில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!

சேலம், சேலம் மாவட்டம் எடப்பாடியில் 2-வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: “விஜயகாந்த் கட்சி தொடங்கியதே திமுகவை எதிர்த்துதான். தற்போது அந்தத் கூட்டணியில் பிரேமலதா விஜயகாந்த் இருந்தாலும், அவர் உண்மையில் நமது கூட்டணிக்குத்தான் வேலை செய்கிறார்; அதில் சந்தேகமே வேண்டாம். திமுகவின் தோல்விகளும் துரோகங்களும் உலக வரைபடத்தை விட நீளமானவை. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மற்றும் […]

நெற்பயிர்ச் செய்கை பாதிப்பு; விவசாயிகளுக்கு 1,200 மில்லியன் ரூபா இழப்பீடு!

மாத்தறை மாவட்டத்தில் குடிநீருடன் கடல் நீர் கலப்பதைத் தடுப்பதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் 2019ஆம் ஆண்டு நில்வலா கங்கையை மையப்படுத்தி விசேட திட்டமாக உப்புநீர்த் தடுப்பு அணை ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. இந்த உப்புநீர்த் தடுப்பு அணை காரணமாக 2019ஆம் ஆண்டின் பின்னர் ஒவ்வொரு வருடமும் நெற்பயிர்ச் செய்கைக்கு பாதிப்புகள் ஏற்பட்டமை பதிவாகியுள்ளது. மாத்தறை மாவட்டத்தின் திக்வெல்ல, கம்புருபிட்டிய, கெகுணதுர, மடிஹே, மாலிம்பட, மெத உயங்கொட, கலல்ல, வில்பிட்டிய மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள […]