இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான மீனவர்கள் இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் 61 நாட்களுக்கான மீன்பிடித் தடைக்காலம் ஆரம்பமாவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக குறித்த மீனவர்கள் கைதாகியுள்ளனர். இதன்போது அவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய படகும் கடற்படையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களும், படகும் மேலதிக சட்ட […]

இந்த நாட்டிலே நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களது பிரதானமான அபிலாசை

இந்த நாட்டிலே ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை புதிய அரசியலமைப்பின் ஊடாக அடைய வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களது பிரதானமான அபிலாசை. அதோடு தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த பல வன்முறைகளில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த இன அழிப்புக்கான பொறுப்புக் கூறல் சம்பந்தமான முன்னேற்றங்களை இந்த புத்தாண்டில் எதிர்பார்க்கின்றோம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நேற்று (14) மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் […]

ஈரான் போர்ச் சேதம் 270 பில்லியன் டொலராக உயர்வு

ஈரான் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளைப் பேச்சுவார்த்தையின் ஒரு அங்கமாக மாற்றுவதற்கான முயற்சியாக, அந்தச் சேதங்களின் மதிப்பைக் கணக்கிட்டு வருவதாக ஐஆர்ஜிசி உடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்ய ஊடகங்களிடம் பேசிய ஈரான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாத்திமா மொஹஜெரானி, ஒரு முதற்கட்ட மற்றும் தோராயமான மதிப்பீட்டின்படி இந்தத் தொகை இதுவரை சுமார் 270 பில்லியன் அமெரிக்க டொலர் எனத் தெரிவித்துள்ளார். எனினும், இது மாற்றமடையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் […]

கனடாவின் வசந்தகால பொருளாதார நிலவர அறிக்கை

கனடாவின் வசந்தகால பொருளாதார நிலவரத்தை (Spring Economic Update) வெளியிடுவதற்கான தேதியை லிபரல் அரசு நிர்ணயித்துள்ளதாக நிதி அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பேன் (Francois-Philippe Champagne) செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். நாடாளுமன்றக் கேள்வி நேரத்தின் போது பேசிய ஷாம்பேன், வரும் ஏப்ரல் 28 அன்று இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறினார். “இந்தத் திட்டம் குடும்பங்களுக்கும், நமது தொழில்துறைக்கும் மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் உதவும் வகையில் அமையும்,” என்று அவர் குறிப்பிட்டார். வழக்கமாக இலையுதிர் காலத்தில் வெளியிடப்படும் இந்த […]

முல்லைத்தீவு மாவட்டத்தில் உயர்தரப்பரீட்சையில் சாதித்த மாணவர்களை மதிப்பளிக்கும் செயற்பாடு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சையில் தோற்றி ஒவ்வொரு பிரிவுகளிலும் மாவட்டத்தில் முதல் ஐந்து நிலைகளைப்பெற்ற மாணவர்களை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று வாழ்த்துவதுடன், சாதித்த மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கும் செயற்பாட்டையும் மேற்கொண்டுவருகின்றார். இந்நிலையில் குறித்த உயர்தரப் பரீட்சையில் சாதித்த மாணவர்களை மதிப்பளிக்கும் செயற்பாட்டின் இரண்டாங்கட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், 11மாணவர்களை மதிப்பளித்துள்ளார். அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பொறியியல் தொழில்நுட்பப்பிரிவில் A,2B சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவனான […]

தாய்லாந்தில் நடைபெற்ற ஆசியக் கிண்ண ஹாக்கி : இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்

தாய்லாந்தில் நடைபெற்ற 8-வது ஆசியக் கிண்ணத் தகுதிகாண் ஹாக்கி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று, வெள்ளிப் பதக்கத்துடன் இலங்கை ஹாக்கி அணி இன்று (14) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடும் தகுதியையும் இலங்கை அணி உறுதி செய்துள்ளது. ஆசியப் பிராந்தியத்தைச் சேர்ந்த 9 நாடுகளின் பங்கேற்புடன் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இந்தப் போட்டித் தொடர் நடைபெற்றது. இலங்கை ஹாக்கி வரலாற்றுச் சாதனையாக, முதல் முறையாக இறுதிப் […]

லிபரல் கட்சியின் பெரும்பான்மை வெற்றி; ‘ ஆக்கபூர்வமான பணிகள்’ அதிகரிக்கும் – மார்க் கார்னி

திங்கள்கிழமை நடந்த இடைத்தேர்தலில் லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றதையடுத்து, கூட்டாட்சி அரசாங்கத்திடமிருந்து “அதிகமான ஆக்கபூர்வமான செயல்பாடுகளை” (More substance) மக்கள் எதிர்பார்க்கலாம் என்றும், வீண் “அடம்பாவங்கள்” (Showboating) குறையும் என்றும் பிரதமர் மார்க் கார்னி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். திங்கள்கிழமை நடந்த இடைத்தேர்தலில் ஒண்டாரியோவின் யுனிவர்சிட்டி-ரோஸ்டேல் (University-Rosedale) மற்றும் ஸ்கார்பரோ தென்மேற்கு (Scarborough Southwest) தொகுதிகளிலும், கியூபெக்கின் கடும் போட்டி நிறைந்த டெரெபோன் (Terrebonne) தொகுதியிலும் லிபரல் கட்சி வெற்றி பெற்றது. இதன் மூலம் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற […]

பிரதமர் தலைமையில் புத்தாண்டு கலாசார விழா

புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள, தமிழ் புத்தாண்டு கலாசார விழாவின் சுபவேளையில் நிறைவேற்றப்படும் சடங்கு சம்பிரதாயங்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று கம்பஹாவில் இடம்பெற்றன. சம்பிரதாயபூர்வமாக அமைந்த புண்ணிய காலத்தில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கம்பஹா, மெதகம ஸ்ரீ சுனந்தாராம விகாரைக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது, இலங்கை ராமஞ்ஞ மகா நிகாயவின் காரக சங்க சபை உறுப்பினரும், மெதகம ஸ்ரீ சுனந்தாராம […]

கார் திருட்டு மற்றும் பொலிசிலிருந்து தப்பி ஓட்டம்: 3 சிறுவர்கள் மீது வழக்கு

நோவா ஸ்கோடியா, லோயர் சாக்வில் (Lower Sackville) பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து ஒரு சிறுவர் குழு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இரவு 11 மணிக்கு முன், சாக்வில் டிரைவ் 700 பகுதியில் உணவு விநியோகம் செய்யும் தனியார் வாகனம் ஒன்றை முகமூடி அணிந்த இரு சிறுவர்கள் திருட முயன்றனர். முயற்சி தோல்வியடைந்ததையடுத்து அவர்கள் தப்பி ஓடினர். தேடுதல் வேட்டையின் போது, சாக்வில் டிரைவ் 600 பகுதியில் உள்ள ஒரு […]

ஈரானின் முடிவில் தான் பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம்– அமெரிக்க துணை ஜனாதிபதி

ஈரானுடன் நடைபெற்ற சமீபத்திய பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் தொடர்ச்சியான முடிவுகள் ஈரானின் தீர்மானத்தைப் பொறுத்ததாக இருப்பதாகவும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் நடைபெற்ற அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை சுமார் 21 மணி நேரம் நீடித்ததுடன், அது முழுமையான வெற்றியடையவில்லை என்றாலும் சில முக்கிய முன்னேற்றங்கள் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார். ஈரான் அணுசக்தி செறிவூட்டலை நிறுத்தியிருந்தால் பேச்சுவார்த்தை சிறப்பாக முடிந்திருக்கும் என்றும், இறுதி ஒப்பந்தம் எட்டப்படுமா என்பது ஈரானின் நடவடிக்கைகளில் தான் […]