நயினாதீவிற்கு நேரடி மின் இணைப்பு ஏற்படுத்தும் சாதக சூழ்நிலை இல்லை?

நயினாதீவிற்கு பிரதான மின் இணைப்பு கொண்டு செல்லும் முயற்சி பலனளிக்காமையால் அது தொடர்பான திட்டம் தோல்வி கண்டுள்ளது. நயினாதீவிற்கு தேவையான மின் சாரம் தற்போது தீவில் இயக்கப்படும் மின் பிறப்பாக்கி மூலமே பெறப்படுகின்றது. இதனால் பிரதான மின் விநியோக மார்க்க மின் இணைப்புக் கேபிளை நயினாதீவிற்குக் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டது. இதற்கமைய குறிகட்டுவானில் இருந்து கடல் வழியாக கோபுரங்கள் நாட்டப்பட்டு நயினாதீவிற்கு பிரதான மின் இணைப்பைக் கொண்டு செல்லத் திட்ட முன்மொழிவு வரையப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு அமைய […]

ஈஸ்டர் குண்டு தாக்குதல் அறிக்கையை கோட்டாபய மறைத்து வைத்திருந்தார் – அமைச்சர் ஆனந்த விஜேபால

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சிரேஷ்ட நீதிபதி ஜனத் சில்வா வெளியிட்டுள்ள அறிக்கையை சில காலம் மறைத்து வைத்திருந்தார். அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்கவும் குண்டுத் தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை மறைத்தே வைத்திருந்தார் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து பேசிய […]

மோட்டார் சைக்கிள் விபத்து : சாரதி உயிரிழப்பு

பதுளை – கிராந்துருக்கோட்டையில் மஹியங்கனை – தெஹியத்தகண்டிய வீதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹியங்கனை வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நாய் ஒன்று வீதியின் குறுக்கே பாய்ந்துள்ளது. இதன்போது நாயுடன் மோதிய மோட்டார் சைக்கிள், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரம் ஒன்றில் பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

போலித் துப்பாக்கியைக் காட்டி ஊழியர்களை அச்சுறுத்திய இளைஞர் கைது – நோவா ஸ்கோஷியாவில் பரபரப்பு

நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தின் ஊழியர்களை போலித் துப்பாக்கியைக் (Replica Handgun) காட்டி அச்சுறுத்தியதாக ஒரு இளைஞர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சம்பவத்தின் விவரங்கள்: ட்ரூரோ (Truro) பகுதியில் உள்ள ஒரு வணிக நிறுவனம். சம்பவம்: சம்பந்தப்பட்ட இளைஞர் அந்த நிறுவனத்திற்குள் நுழைந்து, அங்குள்ள ஊழியர்களிடம் துப்பாக்கி போன்ற ஒன்றைக் காட்டியுள்ளார். இதனால் அங்கிருந்த ஊழியர்கள் பெரும் அச்சமடைந்தனர். காவல்துறை நடவடிக்கை: தகவல் கிடைத்து விரைந்து வந்த போலீசார், அந்த […]

முக்கியமான கூட்டங்கள் மக்களது உணர்வுகளை பிரதிபலிக்கின்றதாக இருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!

மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் மக்களின் நலன்களையும் அவர்களது எண்ணங்களை பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, அதேநேரம் அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு தலைமை தாங்குகின்றவர்களின் ஆற்றல. ஆளுமை அக்கறை அல்லது அவர்களது உணர்வுகள் மக்களது உணர்வுகளை பிரதிபலிக்கின்ற எண்ணங்களோடு தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அண்மைக் காலவமாக யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு அபிவிருத்திக் குழு கூட்டங்களில் குழப்பங்களும்; […]

சிறுமி ஜெய்லா சாங்கின் மரணம் குறித்த செய்தியின் முழுமையான தமிழ் மொழிபெயர்ப்பு

‘அவளிடம் ஒரு தனி ஒளியும் ஆற்றலும் இருந்தது’: விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற ஓட்டுநரால் பலியான குழந்தையை நினைவுகூரும் குடும்பம். பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே (Surrey) பகுதியில், விபத்து ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் சென்ற வாகனத்தால் (Hit-and-run) மோதப்பட்டு உயிரிழந்த ஆறு வயது சிறுமி ஜெய்லா சாங். அவளது முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவளது பெற்றோர் பகிர்ந்து கொண்ட உருக்கமான நினைவுகள் இவை. ஜெய்லாவின் ஆளுமை ஜெய்லா சாங் ஒரு ஆர்வமுள்ள, வேடிக்கையான மற்றும் எதையும் […]

அணுசக்தி நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க ஈரான் முன்வந்தது

ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகளை ஐந்து ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்க முன்வந்துள்ளதாக நியுயோர்க் ‘டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்கா இந்த முன்மொழிவை நிராகரித்து 20 ஆண்டுகள் நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக மூத்த ஈரானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

லிபரல் கட்சி பெரும்பான்மையை உறுதி செய்தது

கனடிய பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி, திங்கட்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தல்களில் குறைந்தது இரண்டு இடங்களை வெல்லும் என்று கனடிய ஊடகங்கள் கணித்துள்ளதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் (House of Commons) ஒரு மெல்லிய பெரும்பான்மையைப் பெற்றுத் தனது ஆட்சியை உறுதிப்படுத்தியுள்ளது. மார்க் கார்னி பதவியேற்று ஒரு வருடத்திற்குப் பிறகு இந்தத் தேர்தல் வெற்றிகள் கிடைத்துள்ளன. மேலும், இதற்கு முன்னதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர் லிபரல் கட்சிக்கு மாறியதும் இதற்குப் பக்கபலமாக அமைந்தது. தற்போது லிபரல் […]

ஈழத்து விநாயக ஆலயங்களில் முதன்மையான மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா இன்று!

வரலாற்றுச்சிறப்புமிக்க மானிப்பாய் மருதடி விநாயகருக்கு இன்று தேர்த்திருவிழா. ஈழத்தில் விநாயகரின் ஆலயங்களில் முதன்மைத் தலமாக விளங்குவது மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம். தமிழ் வேந்தர் காலத்துத் திருத்தலங்களிலொன்றாகப் போற்றப்படும் இத்தலம் பற்றிய பல்வேறு ஜதீக வரலாறுகள் கூறப்படுகின்றது. அருட்சிறப்பும் அற்புதமும் நிறைந்த மருதடி விநாயகர் ஆலயம் தனியாரின் பராமரிப்பில் பராமரிக்கப்பட்டு சென்ற நூற்றாண்டில் பொதுக் கோவிலாகப் பிரகடனம் செய்யப்பட்டு பொதுமக்களால் தற்போது நிர்வகிக்கப்பட்டு வருகிறது. காலம் தவறாத பூசை வழிபாட்டு ஒழுங்கு திருப்பணி வேலைகள் அறநெறிப்பாடசாலை ஆலய […]

இடைத்தேர்தல் வாக்களிப்பு முடிவு: மார்க் கார்னி பெரும்பான்மையைப் பெறும் விளிம்பில்!

திங்கட்கிழமை நடைபெற்ற மூன்று முக்கிய கூட்டாட்சி இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) லிபரல் கட்சி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு மிக அருகில் உள்ளது. மொத்தம் மூன்று இடங்களில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் இரண்டு இடங்களை லிபரல் கட்சி வென்றால், சபையில் அவர்களின் பலம் 173 ஆக உயரும். இது மற்ற கட்சிகளின் ஆதரவோ அல்லது சபாநாயகரின் உதவியோ இன்றி சட்டங்களை நிறைவேற்ற அவர்களுக்குப் போதுமான பெரும்பான்மையைத் தரும். […]