கொலம்பியாவின் விமானம் விழுந்து நொறுங்கியதில் 34 வீரர்கள் பலி

ன் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள பியூர்டோ லெகுயிசாமோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இராணுவ விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து, சம்பவ இடத்திற்கு, மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தீவிர விசாரணை நடந்து வருகிறது. விமானம் […]

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவில் இலங்கையின் ஆடைத்துறை தங்கியிருப்பது ஆபத்து!

இலங்கை ஆடைத் தொழில்துறை தொடர்ந்தும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளை மட்டும் தங்கியிருப்பது பெரும் ஆபத்தானது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஆடை உற்பத்தித் தொழில்துறையின் உயர்மட்ட அமைப்பான ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் தலைவர் பீலிக்ஸ் ஏ. பெர்னாண்டோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இலங்கை தற்போது ஈட்டி வரும் ஆடை ஏற்றுமதி வருமானத்திற்கும், நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கிற்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுகின்றது. […]

லிட்ரோ நிறுவனம் முக்கிய அறிவித்தல்!

லிட்ரோ எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படுமென லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும். அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்குள் எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கப்படும். எதிர்வரும் மே மாதம் வரையில் போதுமான கையிருப்பு உள்ளது. அதன்படி, ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல் விரைவில் நாட்டை வந்தடையும். எவ்வாறாயினும், […]

அனுபவமற்ற ஆட்சியாளர்களின் பலவீனமான நிர்வாகத்தால் மக்கள் துயரங்களை அனுபவிக்கிறார்கள்!

அனுபவமற்ற ஆட்சியாளர்களின் பலவீனமான நிர்வாகத்தால் மக்களே இன்று சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும், எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் அரசே கறுப்புச் சந்தையை உருவாக்கியுள்ளது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், நெருக்கடியான காலப்பகுதிகளில் அரசு மிகவும் தாமதமாகவே தீர்மானங்களை எடுக்கின்றது. அண்மைய ‘டித்வா’ புயல் தாக்கத்தின் போதும் அரசு […]

பாடசாலைப் பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள எந்தவொரு பரீட்சையையும் ஒத்திவைக்கவோ அல்லது மறு அட்டவணைப்படுத்தவோ தற்போது எந்த திட்டங்களும் இல்லை என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன உறுதிப்படுத்தியுள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிறப்பு அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், புதன்கிழமைகளில் கல்வி வகுப்புகளை நடத்துவதும் […]

செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் 3 நாட்களுக்கு முன்னர் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்!

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் அமர்வில் கலந்துகொண்டு செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் 3 நாட்களுக்கு முன்னர் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் தீர்மானமொன்று கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்றைய தினம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை அமரவில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியிலாளர் சி.த.காண்டீபனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் சபையில் நீண்ட விவாதமும் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் முதலாவது சபை அமர்வு இடம்பெறுவதற்கு […]

விலை நிர்ணய ஏற்பாட்டைத் தொடர்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரத்தைப் பெறத் தவறினால் எரிபொருள் விலைகள் மீண்டும் உயரும் – அரசாங்கம் எச்சரிக்கை

தற்போதைய எரிபொருள் விலை நிர்ணய ஏற்பாட்டைத் தொடர்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அங்கீகாரத்தைப் பெறத் தவறினால், மானியச் செலவுகளை நுகர்வோர் மீதே சுமத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று இலங்கைஅரசாங்கம் எச்சரித்துள்ளது. இதனால் வரும் வாரங்களில் எரிபொருள் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும். எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால, அரசாங்கம் தற்போதைக்கு எரிபொருள் செலவின் ஒரு பகுதியைத் தாங்கிக்கொள்ளும் என்று கூறினார். இதன்படி, மே 1-ஆம் தேதி வரை ஒரு லிட்டர் டீசலுக்கு 100 […]

பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடுமென்ற உணவு இறக்குமதியாளர்களின் எச்சரிக்கையை மறுத்தார் வர்த்தகர்கள் சங்கத் தலைவர்

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக காப்புறுதி மற்றும் கப்பல் கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர். விலை உயர்வு: எரிபொருள் விலை உயர்வு கப்பல் போக்குவரத்து மற்றும் காப்புறுதி செலவுகள் அதிகரித்துள்ளதால் நுகர்வோர் இந்த விலை அதிகரிப்பை உணர வேண்டியிருக்கும். தட்டுப்பாடு இல்லை: “நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு எந்தத் தட்டுப்பாடும் ஏற்படாது” என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஜி. […]

திரு சுப்பிரமணியம் தேவரூபன்

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட  திரு சுப்பிரமணியம் தேவரூபன் அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சறோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், நவரூபன்(சுவிஸ்), சிவரூபன்(இலங்கை), ஜெயரூபன்(லண்டன்), காந்தரூபன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சுகந்தினி(சுவிஸ்), கெளதமி(இலங்கை), பிரகலா(லண்டன்), தர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், சஜீகா(சுவிஸ்), சஜீவன்(சுவிஸ்), சஜீத்தன்(சுவிஸ்), விதுரா, டிலக்சிகா, மயூரிகா(இலங்கை), சியானி(இலங்கை), ஜீவிக்கா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், சித்தப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் விபரம்; Wednesday, […]

மதுபோதையில் இருந்த பொலிஸார் பொதுமக்கள் மீது தாக்குதல்; பருத்தித்துறையில் சம்பவம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இருந்து மணல்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்களை சிவில் உடையில் நின்ற பொலிஸார்  தாக்கியுள்ளார்கள். சிவில் உடை மட்டுமன்றி மேல் ஆடைகள் இல்லாது மது அருந்தியவாறு இருந்த காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். பொலிஸார் மேற்கோண்ட தாக்குதலில் படுகாயமடைந்த இருவர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.